•12:28 AM
இறை நம்பிக்கை என்ற ஒன்றை எந்த விஞ்ஞானப்பூர்வ ஆராய்சிகளுக்கும் உட்படுத்தாது வேதங்களில் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் ஆத்திகர்களின் எதிரி யார், இவர்கள் முதலில் களையெடுக்க வேண்டியது யாரை? மதத்தை காக்க நினைப்பவர்கள், மதத்தை வளர்க்க நினைப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?
எல்லா வேதங்களையும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, கேள்விகளைக் கேட்டு , அலசி ஆராய்ந்து உங்கள் வேதங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் நாத்திகர்கள் தான் மிகப்பெரிய எதிரிகள் என்றா நினைக்கின்றீர்கள் ?
இன்றும் ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றும் போலிச் சாமியார்கள் தான், நாத்திகத்தை வளர்க்க உதவுகிறார்கள். வாயிலிருந்து லிங்கம் எடுப்பது ஒரு மிகப் பெரிய மகானால் மட்டும் தான் முடியும் என்று கூறப்பட்டபோதுதான் நாத்திகவாதிகள் அதை பொய் என்று தாங்களே அதை செய்து காட்டினார்கள். முதலில் நம்மீது உள்ள குற்றங்களை களைந்து விட்டோம் என்றால் நாத்திகர்களுக்கு வேலையே இல்லாமல் செய்து விடலாம் தானே?
இன்றைக்கு கடவுளுக்கு எதிராக கருணாநிதி எதையாவது கூறினால் தலையை எடுக்க வேண்டும் என்று குதிக்கும் மதவாதிகள், கோயில் கட்டி , ஆசிரமம் அமைத்து கடவுளை வியாபாரப்பொருளாக்கி காசு பார்க்கும் போலி மதவாதிகளை ஏன் எதிர்க்க முன்வருவதில்லை?
நாத்திகர்கள் ஆத்திகர்களுக்கு எதிரிகள் என்றால் இந்த போலிகள் எல்லாம் அவர்களுக்கு துரோகிகள் அல்லவா?
எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துரோகியை நம்பக்கூடாது என்று சொல்வார்கள். ஆகவே முதலில் ஒழிக்கப்பட வேண்டியது இந்த துரோகிகளைத்தானே?
வித விதமாக மக்களை ஏமாற்றும் இந்த போலிகளை ஏன் எந்த வேதாந்தியும் எதிர்பதில்லை? ஏன் எந்த இராம கோபலனும் கண்டுகொள்வதில்லை? கருணாநிதி ஏதாவது சொல்லிவிட்டால் மட்டும் உடனே எதிர்க்க ஓடோடி வருகின்றார்களே ஏன் ? கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் இதுவரை எந்த மசூதியையும் இடிக்கவில்லை, எந்த கோயிலையும் உடைத்ததில்லை, யாரையும் தீயிலிட்டு கொளுத்தவில்லை. கர்பிணி என்று கூட பாராமல் வெட்டி கொன்றதில்லை, எந்த நகரிலும் கலவரத்தில் ஈடுபடவில்லை, எங்கும் வெடுகுண்டு வைத்ததும் இல்லை. சக உயிர்களை துன்புறுத்தியதில்லை. ஆனால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்பதைத் தான் எல்லா மதங்களும் போதித்த போதிலும், கடவுளின் பெயரைச் சொல்லித்தான் பல கலவரங்களும், குண்டுவெடிப்புகளும், கொலைகளும், கற்பழிப்புகளும் நடக்கின்றன. கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு கலவரத்தில் ஈடுபடுவதைவிட கடவுளை மறுப்பவர்கள் ஒன்றும் கடவுளை இழிவுபடுத்திவிடவில்லை.
எந்த மதம் கொலையையும், கலவரத்தையும், கற்பழிப்பையும் செய்ய சொல்லியிருக்கின்றது? உண்மையான கடவுள் பக்தன் எவனும் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
போலி சாமியார்கள் எப்படி ஆத்திகத்தின் துரோகிகளோ, அதேப் போல் ஆத்திகத்தின் சில குறைபாடுகளும் நாத்திகத்தை வளர்க்க உதவுகின்றன.
சாதி வேறுபாடு, பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் போன்றவை இதில் அடங்கும். பயிரோடு வளரும் களையை விட்டு விட்டு எங்கோ பக்கத்து வயலுடன் ஏன் சண்டையிட வேண்டும்?
இதற்காக கடவுள்களை இழிவாக பேசும் செயலை நான் ஆதரிக்கவில்லை. கடவும் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிபட்ட உரிமை. எல்லா மதங்களும் இறைவனை நோக்கி செல்லும் வெவ்வேறு வழிகளே, இறைவன் ஒருவனே, எல்லா மதங்களும் அந்த ஒரே இறைவனுக்கு வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றார்கள் என்பது தான் மதம் குறித்த எனது பார்வை. இப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எந்த மத வழிபாட்டுதலங்களுக்கு சென்றாலும், உங்களால் ஆழ்ந்து வழிபட முடியும். கடவுளை மறுப்பதும் ஒரு நம்பிக்கையே, அது அவர்களின் உரிமை.
எனது உரிமையில் நீ தலையிடாமல் உன் உரிமையை அனுபவித்துக்கொண்டு இரு என்று எல்லோரும் நினைத்தால் மகிழ்ச்சி எல்லோருக்கும் என்றும் நிலைத்திருக்கும்.
எல்லா வேதங்களையும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, கேள்விகளைக் கேட்டு , அலசி ஆராய்ந்து உங்கள் வேதங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் நாத்திகர்கள் தான் மிகப்பெரிய எதிரிகள் என்றா நினைக்கின்றீர்கள் ?
இன்றும் ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றும் போலிச் சாமியார்கள் தான், நாத்திகத்தை வளர்க்க உதவுகிறார்கள். வாயிலிருந்து லிங்கம் எடுப்பது ஒரு மிகப் பெரிய மகானால் மட்டும் தான் முடியும் என்று கூறப்பட்டபோதுதான் நாத்திகவாதிகள் அதை பொய் என்று தாங்களே அதை செய்து காட்டினார்கள். முதலில் நம்மீது உள்ள குற்றங்களை களைந்து விட்டோம் என்றால் நாத்திகர்களுக்கு வேலையே இல்லாமல் செய்து விடலாம் தானே?
இன்றைக்கு கடவுளுக்கு எதிராக கருணாநிதி எதையாவது கூறினால் தலையை எடுக்க வேண்டும் என்று குதிக்கும் மதவாதிகள், கோயில் கட்டி , ஆசிரமம் அமைத்து கடவுளை வியாபாரப்பொருளாக்கி காசு பார்க்கும் போலி மதவாதிகளை ஏன் எதிர்க்க முன்வருவதில்லை?
நாத்திகர்கள் ஆத்திகர்களுக்கு எதிரிகள் என்றால் இந்த போலிகள் எல்லாம் அவர்களுக்கு துரோகிகள் அல்லவா?
எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துரோகியை நம்பக்கூடாது என்று சொல்வார்கள். ஆகவே முதலில் ஒழிக்கப்பட வேண்டியது இந்த துரோகிகளைத்தானே?
வித விதமாக மக்களை ஏமாற்றும் இந்த போலிகளை ஏன் எந்த வேதாந்தியும் எதிர்பதில்லை? ஏன் எந்த இராம கோபலனும் கண்டுகொள்வதில்லை? கருணாநிதி ஏதாவது சொல்லிவிட்டால் மட்டும் உடனே எதிர்க்க ஓடோடி வருகின்றார்களே ஏன் ? கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் இதுவரை எந்த மசூதியையும் இடிக்கவில்லை, எந்த கோயிலையும் உடைத்ததில்லை, யாரையும் தீயிலிட்டு கொளுத்தவில்லை. கர்பிணி என்று கூட பாராமல் வெட்டி கொன்றதில்லை, எந்த நகரிலும் கலவரத்தில் ஈடுபடவில்லை, எங்கும் வெடுகுண்டு வைத்ததும் இல்லை. சக உயிர்களை துன்புறுத்தியதில்லை. ஆனால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்பதைத் தான் எல்லா மதங்களும் போதித்த போதிலும், கடவுளின் பெயரைச் சொல்லித்தான் பல கலவரங்களும், குண்டுவெடிப்புகளும், கொலைகளும், கற்பழிப்புகளும் நடக்கின்றன. கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு கலவரத்தில் ஈடுபடுவதைவிட கடவுளை மறுப்பவர்கள் ஒன்றும் கடவுளை இழிவுபடுத்திவிடவில்லை.
எந்த மதம் கொலையையும், கலவரத்தையும், கற்பழிப்பையும் செய்ய சொல்லியிருக்கின்றது? உண்மையான கடவுள் பக்தன் எவனும் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
போலி சாமியார்கள் எப்படி ஆத்திகத்தின் துரோகிகளோ, அதேப் போல் ஆத்திகத்தின் சில குறைபாடுகளும் நாத்திகத்தை வளர்க்க உதவுகின்றன.
சாதி வேறுபாடு, பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் போன்றவை இதில் அடங்கும். பயிரோடு வளரும் களையை விட்டு விட்டு எங்கோ பக்கத்து வயலுடன் ஏன் சண்டையிட வேண்டும்?
இதற்காக கடவுள்களை இழிவாக பேசும் செயலை நான் ஆதரிக்கவில்லை. கடவும் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிபட்ட உரிமை. எல்லா மதங்களும் இறைவனை நோக்கி செல்லும் வெவ்வேறு வழிகளே, இறைவன் ஒருவனே, எல்லா மதங்களும் அந்த ஒரே இறைவனுக்கு வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றார்கள் என்பது தான் மதம் குறித்த எனது பார்வை. இப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எந்த மத வழிபாட்டுதலங்களுக்கு சென்றாலும், உங்களால் ஆழ்ந்து வழிபட முடியும். கடவுளை மறுப்பதும் ஒரு நம்பிக்கையே, அது அவர்களின் உரிமை.
எனது உரிமையில் நீ தலையிடாமல் உன் உரிமையை அனுபவித்துக்கொண்டு இரு என்று எல்லோரும் நினைத்தால் மகிழ்ச்சி எல்லோருக்கும் என்றும் நிலைத்திருக்கும்.
