Author: ஜோசப் பால்ராஜ்
•6:18 PM
சமீபத்தில் ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்கனும்னு கேட்டு ஒரு பிரிவும் , அனுமதிக்க கூடாதுனு சொல்லி பிராணிகள் நலச்சங்கமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.தலைப்புக்கு போவதற்கு முன்னாடி இந்த பிராணிகள் நல சங்கத்தாரின் மகத்தான சேவையை பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். (இதற்காக தனிப்பதிவே போடலாம் என்றாலும், இங்கு சொல்வது தான் அவர்களின் சேவையை எடுத்துறைக்க உதவும்).

சில காலங்களுக்கு முன்பு வரை எல்லா ஊர்களிலும் தெருவில் திரியும் தெரு நாய்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பிடித்து கொன்று விடுவார்கள். நாய்களை கொல்வது கூட அவற்றை மிகவும் துன்புறுத்தாமல் விஷ ஊசி போட்டு தான். இதன் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கை மட்டுபடுத்தப்பட்டு, மக்கள் பயமில்லாமல் தெருக்களில் நடமாட முடிந்தது. ஆனால் இப்படி நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர் நம் மாண்பு மிகு பிராணிகள் நல சங்கத்தினர். வாழ்க இவர்களின் பிராணிகள் மீதான பாசம், ஆனால் இதனால் நடந்தது என்ன? கட்டுபடுத்த முடியாத அளவுக்கு பெருகிபோன தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு உயிர் விட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொல்லப்படும் பிராணிகளுக்காக குரல்கொடுக்கவும் போராட்டம் நடத்தவும் இவர்கள் உள்ளார்கள், ஆனால் வெறிநாய்களால் பாதிக்கப்பட்ட அப்பிராணி மனிதர்களுக்கு குரல் கொடுக்க ???????

பொது நல வழக்குகள், போராட்டங்கள் எல்லாம் சமூக நன்மைக்காகவும் , மக்களின் சவுகரியத்திற்காகவும் பாடுபட வேண்டுமே தவிர, மக்களை துன்பத்தில் தள்ளவும், மக்கள் பணத்தை வீணாக்கவும் உதவக்கூடாது. ஆனால் இந்த வெறிநாய் விஷயம் என்ன செய்தது? நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்கிறார்களாம், கண்ணு முன்னாடி தெரியிற சாலைகளிலேயே, புதிதாய் சாலை அமைத்து விட்டதாக கூறிவிட்டு , எந்த வேலையும் செய்யாமலேயே மக்கள் பணத்தை அமுக்கிவிடும் நமது அரசியல்வாதிகளுக்கு நாய்களுக்கு கு.க. திட்டம் எல்லாம் பணம் காய்க்கும் மரங்களத்தானே தோன்றும்? இதுவரைக்கும் எத்தனை கோடி வீணா போச்சோ தெரியல.

நாய்களை கொல்லாமலும், அவற்றுக்கு கு.க. செய்கிறோம் என்று மக்கள் பணத்தை வீணாக்காமலும், தெரு நாய்களால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமலும் காக்க ஒரு நல்ல வழி என்னவென்றால், எல்லா ஊர்களிலும் சுற்றித்திரியும் தெரு நாய்களையும் பிடித்து அந்தந்த ஊர்களில் இருக்கும் பிராணிகள் நலச்சங்க உறுப்பினர்களின் பொறுப்பில் விட்டுவிடலாம். இவர்கள் அந்த நாய்களை பொதுவான ஓர் இடத்திலோ அல்லது அனைத்து உறுப்பினர்களும், ஒருவருக்கு இத்தனை நாய் என்று சமமாக பிரித்துகொண்டு தங்கள் வீட்டிலோ இவற்றை பராமரிக்கலாம். ஆனால் அவர்கள் பொறுப்பில் இருக்கும் நாய்கள் வெளியில் வந்தால் பொறுப்பாளர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள பிராணிகள் நலச்சங்கத்தினர் தயாரா?

நாய் கடிச்சா உடனே ரேபிஸ் நோய் தடுப்பு ஊசி போடணும், இத தனியார் மருத்துவ மனைகளில் போடணும்னா அதுக்கு நிறைய செலவாகும், ஏழை மக்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு போனா, அங்க, கடிச்ச நாயோட லைசென்ஸ கொண்டு வா, ரேஷன் கார்டு கொண்டு வான்னு எல்லாம் சொல்றாங்களாம். கடிச்சது தெரு நாய்னா, அதோட லைசென்ஸ்கு எங்க போறது ? இருக்குற தொல்லைல ஏழைகளுக்கு இதெல்லாம் வேற தேவையா? இதப்பத்தியெல்லாம் பிராணிகள் நலசங்கம் யோசிக்காதா?

நாட்டில் ஆயிரமாயிரம்பேர் உண்ண உணவின்றி வறுமையில் வாடுகின்றனர். உறங்க இடமின்றி நடைபாதைகளில் தூங்குகின்றனர். ஓட்டுநரின் போதையாலே, அல்லது வாகனத்தின் கோளாறாலோ எத்தனை நடைபாதை வாசிகள் கொல்லப்பட்டுள்ளனர், சமீபத்தில் கூட ஒரு பணக்கார வீட்டு சிறுவன் கார் ஓட்டி பலரை சாகடித்தான் அல்லவா, இதையெல்லாம் கேட்க ஒரு அமைப்பும் இல்லையே, ஏன்? பிராணிகளைவிட கேவலமானவர்களா இவர்கள் ?

நடைபாதையில் இருக்கும் மக்களைப்பற்றியோ, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது பற்றியோ எந்த அக்கரையும் காட்டாத நல சங்கங்கள் பிராணிகளுக்கு ஆதரவாக வழக்காடுவது பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் செயல்களாகத்தான் எனக்கு படுகிறது. ஜல்லிகட்டுக்காக நீதிமன்றத்தில் பொதுநல(???) வழக்கு தொடுப்போர், நீதிகிடைக்காமல் தவிக்கும் ஏழைகளுக்காக வழக்கு தொடுக்கலாமே, வசதிமிக்க ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுவனின் செயலால் உயிர் இழந்த நடைபாதைவாசிகளின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க உதவலாமே?

பிராணிகளின் மீதான இவர்களின் பாசத்தையும், அதற்காக இவர்கள் நடத்தும் போராட்டங்களையும் பார்கையில், தமிழ் ஈழம் தந்த மாபெரும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
"வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்."
சரி எப்பதான்டா நீ ஜல்லிகட்டுக்கு வரபோறனு கேட்குறவங்களுக்கு:
அட, போங்கப்பா, வேலை வெட்டி இல்லாதவங்க எல்லாம் தான் ஜல்லிகட்டு வேணுமா வேண்டாமானு அடிச்சுகிட்டு இருக்காங்கன்னா, நாமளும் அதையே செய்யணுமா என்ன?
Udanz
This entry was posted on 6:18 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On Fri Jan 11, 01:04:00 PM GMT+8 , Known Stranger said...

kathuvar kathatum thunguvar thungatum athu thanay ecology. sengam irukanumna manum irukanum. naiyum irukanum SPCA atkalum kathathum appo thanay una mathiri alluku post poda matter kedaikum. enna nan sollrathu

 
On Thu Jan 24, 08:41:00 PM GMT+8 , Anonymous said...

அருமையான பதிப்பு. சமீபத்தில் வந்த ஜூனியர் விகடனில் கூட இது குறித்து எழுதப்பட்டிருந்தது. நீங்கள் நிறைய எழுத வேண்டும், வாழ்த்துக்கள் -- சிவா.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க