Author: ஜோசப் பால்ராஜ்
•10:35 PM
முன் கூட்டியே என்னிடம் தெரிவித்து என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்த திவ்யாவிற்கு எனது நன்றிகள். காதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவில் அவரை நான் மாட்டிவிட்டதற்கு பதில் மரியாதை இது.

A - AOL TAMIL
www.aol.in/tamil

தமிழ் செய்திகளுக்காக இதை பார்ப்பது உண்டு.

B - BSNL Customer Care
http://portal.bsnl.in/bsnlcca/login.aspx

பி எஸ் என் எல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் இணைய தளம் இது. நீங்களும் இணையம் வழியாக புகார் அளிக்கும் சேவையை பயன்படுத்த இதை உபயோகிக்கலாம். நல்ல பலன் இருக்கின்றது.

C - Changi Airport
www.changiairport.com

சிங்கப்பூர் விமான நிலையத்தின் இணைய தளம் இது. விமான வருகை, புறப்பாடு போன்ற தகவல்களுக்காக இதை அடிக்கடி பார்பது உண்டு. எனக்கு நண்பர்கள் அதிகம் எனவே வழியனுப்புவதும், வரவேற்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.

D - Dinamalar
www.dinamalar.com
காலையில் தினமும் தமிழ் செய்திகளுக்காக இதை தான் படிப்பேன்.

DBS Bank Singapore
www.dbsbank.com.sg
Development Bak of Singapore. வங்கிச் சேவைகளுக்காக மிக அதிகமாய் உபயோகிக்கும் இணையதளம்.

E- E Grocy Online Store
www.egrocy.com

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காக உள்ள இணைய கடை. மளிகைச் சாமன்களை மாதமாதம் வாங்க உபயோகிக்கும் தளம். நாங்க எல்லாம் வீட்லயே உக்காந்துகிட்டு இணையத்துல எல்லாப் பொருளையும் வாங்கிருவோம்ல.

F - FlyProxy
https://flyproxy.com

எங்க அலுவலகத்துல அடிக்கடி நம்ம ரொம்ப உபயோகிக்கிற இணைய தளங்களை தடை பண்ணிருவாங்க. நாங்க எல்லாம் யாரு, இதுல பூந்து எல்லா இணையத்தையும் கொண்டாந்துருவோம்ல. இப்டிதான் ஜிமெயில தடை பண்ணாய்ங்க. நமக்கு ஜிமெயில் இல்லன்னா உசுரே போயிடும்ல. அணையா விளக்கா ஜிமெயில்ல என் பெயருக்கு பக்கத்துல இருக்க பச்சைவிளக்கு நான் தூங்குறப்ப மட்டும்தான் அணைஞ்சு இருக்கும். அத போயி இவிங்க தடை செஞ்சா விட்ருவோமா? அதுக்குத்தான் இதெல்லாம். உங்க அலுவலகத்துலயும் யாராவது இப்டி தொல்லை குடுத்தா ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு இதை பயன்படுததுங்க.

G - Google
www.google.com.

கூகிள் நம்ம பெரியண்ணண். இவரு இல்லன்ன நான் இல்ல. இவர கேட்கிற விதமா கேட்டா எல்லாத்தையும் நமக்கு தர்றவரு. எனக்கு மட்டும் இல்ல, பொட்டி தட்றவங்க எல்லாருக்கும் பெரியண்ணண் இவரு தான். இவருகிட்ட இல்லாததே இல்லன்னு சொல்ற அளவுக்கு எல்லா தகவல்களையும் அள்ளித்தருவாரு. பாசக்கார அண்ணண்.

H - The Hindu
www.Hindu.com

நமக்கு ஆங்கில அறிவும் முக்கியம்ல, அதான் ஹிண்டு செய்திதாளையும் காலையில வாசிக்கிறது நம்ம வழக்கம்.

How Stuff Works
http://www.howstuffworks.com

சாதாரண கருவி முதற்கொண்டு, மிக நவீன கருவி வரை எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த தளம் மிக உதவியாய் இருக்கும். நான் இதுக்கு அடிக்கடி போகிறதில்லை. ஆனா என் அண்ணண் ஜோசப் செல்வன் இத பொறுமையா படிச்சுட்டு நான் கேட்கிறத நல்ல புரியிறமாதிரி சொல்லிக்கொடுப்பாரு. அப்பப்ப எட்டிப் பார்கிறதோட சரி.

I - ICICI Exchange Rate Calculator
http://icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/calculators.htm

நம்மள மாதிரி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கெல்லாம் உபயோகமான தளம் இது. மத்த வங்கிகள விட ஐசிஐசிஐ வங்கிதான் அதிகமான நாணய மாற்று மதிப்பு கொண்ட வங்கி. நமக்கு யாரு அதிகமா தர்றாங்களோ அவங்கத் தானே முக்கியம். இவங்க தான் நமக்கு பாதுகாப்பா நாம சம்பாதிக்கிறத தாய்நாட்டுக்கு அனுப்ப உதவுறவங்க. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு தளம் இது. நீங்க ஐசிஐசிஐ வங்கியில கணக்கு வைச்சிருக்கணும்கிற அவசியம் கூட கிடையாது. இவங்களோட Money2India சேவையின் மூலமா சுலபமா பல வங்கிக் கணக்குகளுக்கும் நீங்க பணம் அனுப்ப முடியும். உங்க பணம் ஒழுங்கா போய் சேர்ந்துச்சான்னு நீங்க பார்த்துக்கலாம்.

J - Jobs DB Singapore
http://www.jobsdb.com.sg

சிங்கப்பூர்ல இருக்க வேலை வாய்ப்புகளை குறித்த இணையத்தளம் இது. சுய விளம்பரமா நினைச்சுக்காதீங்க. என் வீட்ல எப்பவுமே ஒரு 2 வேலை தேடுறவங்க இருப்பாங்க. ஏதோ நம்மால முடிஞ்ச சேவைன்னு செஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களுக்காக அடிகடி போகுற இணையம் இது.

K - Khel Stocks
http://www.khelostocks.com

கல்லூரியில படிகிறப்ப என்னோட பாடம் இயற்பியல், இருந்தாலும் நமக்கு பங்கு வணிகத்தில நான் ஒரு பட்டயப் படிப்பு படிசேன்ல ( Diploma in Share Investment &
Management) , அதான் பங்கு வணிகத்துக்காக இந்த இணையத்துக்கு அடிக்கடி போவேன்.


M - ம்யூஜிக் இதுல நான் பல இணையங்களுக்கு போவேன் குறிப்பா சொல்லனும்னா
www.raga.com, www.smashits.com போன்றவை.

O - Oru Paper
www.orupaper.com

நம் ஈழத்து சொந்தங்களின் தளம் இது. அடிக்கடி போவது உண்டு.

P - Public Grievances
http://pgportal.gov.in/aboutus.html

பொதுமக்கள் தங்களது குறைகளை அரசின் அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்க உள்ள இணையதளம். சமீபத்தில்தான் இதை கண்டறிந்தேன். இதுகுறித்து ஒரு பதிவும் இட்டுள்ளேன்.

Personal Finance
http://www.personalfn.com/calc/hlv.html

இது நம்முடைய நிதி மேலாண்மைக்கு உதவும் ஒரு நல்ல தளம். பல கணக்கீடுக்களுக்காக நான் இதற்கு செல்வது உண்டு. இங்கும் ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. நான் பல நண்பர்களுக்கு நிதி ஆலோசகராக தொண்டாற்றி வருகின்றேன். இந்தியாவில் இருந்த காலம் தொட்டு இதை செய்து கொண்டுள்ளேன். ஆனால் சிங்கை வந்த பின் முன்போல் என்னால் அந்த சேவையை திறம்பட செய்ய இயலவில்லை. எனினும் இது போன்ற இணைய தளங்கள் எனக்கு அப் பணியில் பேருதவி புரிகின்றன.

Q - Quick Remit

இது HDFC வங்கியின் சேவை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எல்லா கணிணி மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் பணம் அனுப்ப முடியும். இதற்கு HDFC வங்கியில் நாம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

S - SDN SAP
www.sdn.sap.com.

இது நம்ம பொழப்பு சம்பந்தப்பட்ட இணையதளம்.SAPல இருக்கவங்க எல்லாருக்கும் எந்த சந்தேகம்னாலும் இங்க வந்தா நல்ல உதவி கிடைக்கும். SAP ஒரு கடல் மாதிரி, அதுல Technical & Functional னு ரெண்டு பிரிவு இருக்கு. Technical ல வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் இப்ப Techno Functional அ இருக்க முக்கிய உதவி இந்த இணையம் தான். புதுசா கத்துக்கிறவங்களுக்கு பல உதவிகள் இங்க கிடைக்கும்.

SBI Singapore
http://www.sbising.com

இது பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர் இணையதளம். நம்ம ஊரு ரூபாய் மதிப்ப பார்க்குறதுக்காக இந்த தளத்துக்கு அடிக்கடி போவேன்.

T - Tamil Editor
www.tamileditor.org

என் மடிக்கணிணியில் நான் ஈ கலப்பை போன்ற எதையும் நிறுவாமையால் இந்த தளத்தின் மூலமாகத் தான் தமிழ் தட்டச்சு செய்கிறேன். என் மடிக்கணிணியில் எப்போதும் மூடாமல் இருக்கும் பக்கங்களில் இதுவும் ஒன்று.

Thirukural
http://www.tamilnation.org/literature/kural/index.htm

திருக்குறள் இருக்கும் இணையத்தளம். திருக்குறளுக்கு தனியாக நான் விளக்கம் தரவேண்டுமா என்ன?

Team Viewer
http://teamviewer.com/index.aspx

நாம பல பேருக்கு பல நேரங்கள்ல உதவுறதுக்கு இந்த இணைய தளம் உதவுது.

http://tamilpeek.com http://www.tubetamil.com

வேற எதுக்கு தமிழ் படம் பார்க்கத்தான்.

W - WIKI
http://en.wikipedia.org/wiki/Wiki

கூகிள் நமக்கு பெரியண்ணண், விக்கி நமக்கு தம்பியண்ணண். நமக்கு தெரியாதத இவருகிட்டயும் கேட்டுக்கலாம். பெரியண்ணண் பல நேரங்கள்ல தம்பியண்ணகிட்டத்தான் அனுப்புவாரு. நமக்கு செம தோஸ்த்.

What is
http://whatis.techtarget.com

என்ன? அப்டிங்கிற கேள்விய கேட்க இது ஒரு நல்ல இணையதளம். சிறப்பான பதில்கள் கிடைக்கும். இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் நிறைய கேள்வி கேட்குதுங்க. அவங்களுக்கு பதில் சொல்ல விக்கி , இந்த தளம் எல்லாம் பெற்றோர்களுக்கு மிகவும் உதவும். பொறுமையா சொல்லிக்குடுக்கலாம்.


Y - Yarl.com
http://www.yarl.com/forum3/index.php?showforum=40

யாழ் இணையம், ஈழத்துச் சொந்தங்களின் இணையதளம் இது. ஈழத்து செய்திகளுக்காக அடிக்கடி செல்வது உண்டு.

You Tube
http://www.youtube.com

ரொம்ப போரடிக்கிற நேரங்கள்ல இந்த தளத்துல போயி வகை வகையா தேடிப்புடிச்சு விடியோ பார்ப்பேன். ரொம்ப புடிச்சது நம்ம தமிழ் நகைச்சுவை வீடியோக்கள் தான்.

நான் ஒரு மூணு பேர மாட்டிவிடணுமாம், யார மாட்டிவிடலாம்னு ஞாயித்துகிழமை காலையில சீக்கிரமா 11 மணிக்கே எழுந்துருச்சு யோசிச்சதுல மாட்டுனது இந்த மூணு பேருதான்.

1. அன்பு தம்பி விக்கி என்கிற விக்னேஸ்வரன்.

2. அன்பு தோழன் ஜெகு என்கிற ஜெகதீசன்

3. நீண்ட நாட்களாய் பதிவுகளை வாசித்து அனுபவம் பெற்று சமீப காலமாய் பதிவெழுத ஆரம்பித்து கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு தோழர் மகேஷ்.

Rule:

The Tag name is A for Apple

Give preference for regular sites

Ignore your own blogs, sites.

Tag 3 People.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 PM
இதுவரை 74 பதிவுகளை எழுதியுள்ள நிஜமா நல்லவன் அவர்கள் நேற்று தீடீரென விடை பெறுகிறேன், இனிமேல் எழுத மாட்டேன் என்று அறிவித்துள்ளார். அவரது விடை பெறுகிறேன் பதிவை கீழே கொடுத்துள்ளேன்.


விடை பெறுகிறேன்!

ஆனந்த விகடன் வரவேற்பறை மூலமாக அறிமுகமானது தமிழ் பதிவுலகம். ஏதோ பெயருக்கு பதிவுகள் எழுதி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எதுவும் எழுதியதில்லை. இனிமேலும் எழுத என்னிடம் எதுவும் இல்லை. நான் எழுதிய மொக்கை பதிவுகளையும் படித்து எனக்கு பின்னூட்டங்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!


வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்கள் எல்லாம் எழுதாவிட்டால் எப்படி என்பது போன்ற பின்னூட்ட கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் மிகவும் வேண்டிக்கொண்டதால் நான் மீண்டும் பதிவெழுத வருகிறேன் என்பது. ஏன் இதெல்லாம் ? நிஜமா நல்லவனின் விடை பெறுகிறேன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இதுதான்.

ஜோசப் பால்ராஜ் said...

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், மத்தவங்க அவங்க இல்லீங்க நீங்க எல்லாம் தொடர்ந்து எழுதணும்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு. நீங்க உண்மையிலேயே இனிமே எழுத எதுவும் இல்லைன்னு நினைச்சா நீங்க இனிமே கண்ண மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பார்க்க மாட்டீங்க, படிக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏன்னா நாம பார்கிறது, படிக்கிறதுல இருந்துதான் பாதிவுகள் வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே எழுதாதீங்க.

உங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்தவங்க கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே எழுத கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் மின்னஞ்சல் முகவரி தர்றேன். தொடர்புல இருங்க. ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க பதிவுலகத்துக்குச் செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம்.
என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com.



எழுத ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவரை எதுக்கு இத்தனை பேரு திரும்ப வாங்கன்னு கூப்பிடனும் ? மாரத்தான் ஓட்டப் போட்டி நடக்குது, பல வீரர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரு இனிமே என்னால ஓட முடியாது, ஒடுறதுக்கு என் உடம்புல வலு இல்லன்னு உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஓரமா உக்காந்துக்கங்கன்னு தானே சொல்ல முடியும்? இல்ல இல்ல நீங்க கட்டாயம் ஓடியே ஆகணும்னு சொல்லி ஓட முடியாதவர இழுத்துக்கிட்டு வர முடியுமா? எனக்கு என்னமோ நிஜமா நல்லவன் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமே எழுத ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்காருன்னுதான் தோணுது. எப்டியிருந்தாலும் எழுத முடியாதுன்னு சொல்றவரப்போய் எதுக்கு மல்லுகட்டனும் ? காரணமே தெளிவா சொல்லாதவருகிட்ட எதுக்கு போயி எல்லாரும் கெஞ்சணும் ?

நேற்று இரவு இந்த பதிவை படித்துவிட்டு நானும் தம்பி விஜய் ஆனந்தும் வலையுரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி அறிவிப்பதும், கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது. இது கட்டாயம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என்றும் சொன்னார். அதே போல் இன்று சூடாண இடுகைகளில் இடம்பிடித்து விட்டது. இப்படி காரணமில்லாமல் நானே போய் வருகிறேன், இனி எழுத மாட்டேன் என்று சொன்னால் யாரும் கெஞ்சக் கூடாது என்பதுதான் என் கருத்து.

தமிழ் மணத்திற்கு :

சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ?

பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா?

ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன?

இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•3:59 PM
எனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. எனது 17 வருட தேடல் இது.

மாரநேரி என்ற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நான், அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் என்பது அறிமுகமாவதே மூன்றாம் வகுப்பில் தானே. எனக்கு அது வரை ஏ பி சி டி கூட தெரியாது. மூன்றாம் வகுப்பு வந்த போதும் ஏபிசிடி சொல்லச் சொன்னால் 26 எழுத்துக்களையும் சொல்லத்தெரியாது. ஆனால் எழுதச் சொன்னால் அதுவும் எனது சிலேட்டில் எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அது எப்படியென்றால் எனது சிலேட்டின் இரு பக்க சட்டங்களிலும் ஏபிசிடி இருக்கும். அதைப் பார்த்து எழுதி சாமாளித்தேன்.

நான் நான்காம் வகுப்பு படித்த போது எங்கள் ஊர் பள்ளியில் வேலை பார்த்த ஒரு கன்னியாஸ்த்ரி மருத்துவ விடுப்பு எடுத்த போது அந்த விடுப்பு பணிக்காக வந்தவர் தான் சுந்தரி டீச்சர். சுந்தரி டீச்சர் B.Sc வேதியியல் பட்டமும், B.Ed பட்டமும் பெற்றவர்.

நான்கவது படிக்கும் எங்களுக்கு சுந்தரி டீச்சர் வகுப்பெடுக்க வந்த முதல் நாள் இன்னும் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. மதிய நேரம் முதல் பிரிவு அறிவியல் பாடம். எனக்கு ஆங்கிலம் தான் தெரியாதே தவிர மற்ற பாடங்கள் எல்லாம் நன்றாகப் படிப்பேன். முதலில் நடந்த அறிவியல் வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து மிக ஆர்வமாக பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். கேட்க்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லி டீச்சரின் பாராட்டுகளையும் பெற்றேன்.

அடுத்த பிரிவுக்கு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு முடிந்து ஆங்கில வகுப்பு தொடங்கியது. விடுறா ஆளை என்று முதல் வரிசையிலிருந்து கடைசி வரிசைக்கு ஓடிவிட்டேன். சுந்தரி டீச்சர் ஆங்கிலப் பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த பாடம் கூட சாலமன் மன்னரின் அறிவை சோதிக்க ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பூக்களை கொடுத்து அதில் எந்த பூ நிஜப்பூ என தொட்டுப்பார்க்காமலேயே கண்டுபிடிக்க சொல்லும் கதை. இந்தப் பாடத்தை நடத்த ஆரம்பித்த டீச்சர், பாடத்திற்கு நடுவே கேள்வி கேட்ட போதுதான் என்னை தேடி, நான் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். எங்கடா இந்த பால், அறிவியல் பாடத்துக்கு முன்னாடி உக்காந்திருந்தவன ஆளையே காணோமேன்னு கேட்டாங்க. அதுக்கு என் தோழன் ஒருத்தன் டீச்சர் அவன் எல்லா பாடமும் நல்ல படிப்பான், ஆனா இங்கிலீஷ் அவனுக்கு வராது அதுனால இங்கிலீஷ் பாடத்துக்கு மட்டும் கடைசி வரிசையிலத்தான் உக்காருவான்னு சொன்னான். டீச்சருக்கு கோவம் வந்துருச்சு. முதல்ல நீ முதல் வரிசைக்கு வான்னு கூப்பிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலத்தின் மேல எனக்கு இருந்த பயத்தை போக்கி, எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.

டீச்சர் ஊரு நாகப்பட்டினம், அதுனால எங்க ஊர் கன்னியர் மடத்துலயே தங்கி, எங்க பள்ளியில வேலை செஞ்சாங்க. பள்ளியும், மடமும் ஒரே வளாகத்தில்தான் இருந்துச்சு. பள்ளிக்கூடம் விட்ட பின்னர் இரவு உணவு வரையிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் டீச்சர் உடன் தான் இருப்போம். விளையாட்டுகளோடு எங்களுக்கு ஆங்கிலம், பொது அறிவு போன்றவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து தான் பல அடிப்படை விசயங்களை கற்றுக்கொண்டேன். நான் மட்டுமல்ல என் அண்ணன் டைட்டஸ், என் வகுப்புத் தோழன் ஒருவன் தோழியர் இருவர் என நாங்கள் 5 பேர் எப்போதும் டீச்சருடனே இருந்து நிறையக் கற்றுக்கொண்டோம்.

நாங்கள் 5 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகளத்தூர் என்ற ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் படித்தோம். அப்போதும் எங்கள் ஊரில் டீச்சர் இருக்கும் வரை நாங்கள் அவர்கள் கூடத்தான் இருந்தோம். ஆனால் சில ஆண்டுகளில் டீச்சர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். தற்போது எங்கே உள்ளார்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

அவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தது எல்லாம் கீழே உள்ளவை தான்.

1) பத்மாவதி இல்லம், கிணத்தடி சந்து, வெளிப் பாளையம், நாகப்பட்டினம் என்ற இந்த முகவரி.

2) அவரது தந்தையார் பெயர் காளிமுத்து என்பதும்,அவர் PA to the CEO ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

3) அவரது மூத்த சகோதரியின் கணவர் சோழன் போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணிபுரிந்தார், அவர்களது மகன் பெயர் பிரபு.

4) அவருக்கு ஒரு தங்கை உண்டு.

நாங்கள் அவர்களோடு இருக்கும் போதே எங்களுக்கு அரசியல் குறித்த சரியான பார்வை என்னவாக இருக்க வேண்டும், சினிமாவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், புதுப் புது கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகள் எனப் பலவற்றையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஒரு கிராமத்தில் பிறந்த எங்கள் முன்னேற்றத்தில் சுந்தரி டீச்சரின் பங்கு மிக முக்கியமானது.

என் அண்ணண் ஜோசப் டைட்டஸ் Neuro Physiology யில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சியை முடித்துவிட்டு முனைவர் பட்டம் பெற இருக்கிறார், தற்போது அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் மேடிசன் என்ற ஊரில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலை கழகத்தில் ஆராய்சியாளராக வேலைக்கு சேரும் அளவுக்கு உயர்ந்ததிலும் சுந்தரி டீச்சரின் பங்கு பெருமளவில் இருக்கின்றது. நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மென்பொருள் துறையில் ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்து, இன்று வலைப் பதிவு எழுதும் அளவுக்கு என்னை உயர்த்தியதிலும் சுந்தரி டீச்சரின் பங்கு முக்கியமானது.

வலையுலகில் நான் எழுதும் எனது 50வது பதிவு இது. என்னை இந்தளவுக்கு உயர்த்திய என் பாசமிகு சுந்தரி டீச்சருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

நாகையை சேர்ந்தவரான‌ கோவி.கண்ணண் அண்ணணிடம் நேற்றைய சந்திப்பில் சுந்தரி டீச்சரை குறித்து கூறினேன். அவரது தம்பியிடம் கூறி தகவல் சேகரிப்பதாக கூறியுள்ளார். நாகையை சேர்ந்த வேறுயாரும் இந்த பதிவை படித்தீர்களானால் சுந்தரி டீச்சரை நான் கண்டுபிடிக்க உதவுங்கள். 17 வருடமாக தேடிக் கொண்டிருக்கும் எனக்கு யாராவது உதவுங்கள்.

ஐம்பதாவது பதிவை வெளியிடும் இவ் வேளையில் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றிகள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:06 PM
காவிரி படுகை மாவட்ட விவசாயிகளின் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் எங்கள் அன்புக்குறிய மேட்டூர் அணைக்கு இன்று பிறந்த நாள். இன்று 74 வயதை நிறைவு செய்து பவள விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது எங்கள் மேட்டூர் அணை.

இஸ்லாமியர் எப்படி புனித மெக்கா இருக்கும் திசை நோக்கி தொழுகை செய்வார்களோ அதுபோல் எங்கள் விவசாயமும் மேட்டூர் இருக்கும் திசை பார்த்து தான் இருக்கும்.

1925 ஜீலை 20 ஆம் தேதி அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1934 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்ட இந்த அணைக்கு ஸ்டான்லி நீர்தேக்கம் என்றுதான் முதலில் பெயரிடப்பட்டது. இன்றும் அந்த பெயர் அணையில் எழுதப்பட்டிருந்தாலும் மேட்டூர் அணை என்றுதான் எல்லோராலும் அறியப்படுகின்றது.

இந்த அணைக்கு சொந்தமான நீர்பிடிப்பு பகுதிகள் இருந்தாலும், பெருமளவிலான நீர் ஆதரம் கர்நாடகாவை நம்பியே உள்ளது. சொந்தமாய் ஒளி இல்லா சந்திரனுக்கு வளர்பிறை, முழுநிலவு, தேய்பிறை , அம்மாவாசை என்றிருப்பதுபோல் கர்நாடகாவை நம்பியே இருப்பதால் இதன் நீர்மட்டமும் எப்போதும் சீராய இல்லாமல் வளர்வதும், தேய்வதுமாய் இருக்கின்றது.

எங்கள் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் இந்த அணை எந்நாளும் நீடித்து நிலைத்து,எப்போதும் நிரம்ப நீரோடு எமக்கு சேவை புரிய வேண்டும் என்று இந்த தஞ்சை மாவட்டத்து உழவன் மகனோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:00 PM
சமீபத்தில் இலவசம் என்றால் இளக்காரமா ? என்ற தலைப்பில் இலவச பேருந்து சலுகையை பயன்படுத்தி பயணம் செய்த சில சிறுமிகளை தஞ்சையில் ஒரு நடத்துநர் பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட செய்தியை அறிந்து நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்ட பலரும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதிலும் என‌க்கு ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மிக‌ சரியான‌ ஆலோச‌னைகளை சொல்லும் என் ந‌ண்ப‌ர்
3rdeye த‌ன‌து பின்னூட்ட‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கேட்ப‌தோடு நிறுத்தாதே இதை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்துச்செல் என்று பின்னூட்ட‌மிட்டிருந்தார்.

நானும் இதை வெறும் பதிவிடுவதோடு நிறுத்தக்கூடாது, கட்டாயம் அந்த மனிதாபிமானமற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்யலாம் என்று எண்ணிய போது, தற்செயலாக இணையத்தின் மூலமாக பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க வசதி இருப்பது தெரியவந்தது. http://pgportal.gov.in.

இந்த இணையத்தின் வாயிலாக இந்தியாவில் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் அரசின் அனைத்து துறைகளுக்கும் நாம் நமது புகாரை தெரிவிக்க முடியும்.

முதலில் நமது பயனாளர் பெயர் (User Name) மற்றும் கடவு சொல் (Password) ஆகியவற்றை தெரிவு செய்து விட்டு, நமது முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துவிட்டு, எந்த துறைக்கு நமது புகாரை அனுப்ப வேண்டும் என்பதை தெரிவு செய்துவிட்டு, அதற்கு கீழேயுள்ள பெட்டியில் 4000 வார்த்தைகளுக்குள் நமது புகாரை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நமது புகாரை வெற்றிகரமாக‌ பதிவு செய்த உடன் நமக்கு ஒரு பதிவெண் தரப்படுகின்றது. இந்த பதிவெண் (உதாரணமாக எனது புகாரின் பதிவெண்: DARPG/E/2008/08229)மூலமாக நாம் பின்னர் நமது புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.

இப்படி ஒரு அமைப்பும், வசதியும் இருப்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. இதில் இன்றுதான் எனது புகாரை பதிவு செய்துள்ளேன். இதன் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தொடர்ந்து பார்த்து உங்களுக்கு கட்டாயம் தெரிவிப்பேன்.

நீங்களும் உங்கள் கண்ணில்படும் குற்றங்களை சும்மா பார்பதோடு நின்றுவிடாமல், உடனே இந்த இணையத்தின் மூலமாக உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புங்கள். புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தரப்பட வேண்டும் என்பதால் நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படும் என நம்பலாம்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவியும்போது, அந்த பிரச்சனையின் தாக்கம் கட்டாயம் இந்த புகார்களை கையாள்பவர்களுக்கு புரியலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, நடவடிக்கை எடுக்க முற்படலாம். வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் நாம் சும்மாயிருக்க வேண்டும்?

எத்தனையோ மின்னஞ்சல்களை நாம் அனைவருக்கும் அனுப்பி மகிழ்கிறோம். இந்த இணையதளத்தை குறித்த விழிப்புணர்வையும் நாம் எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியை தயவுசெய்து அனுப்புங்கள். சிறு துளிகள் தான் பெருவெள்ளமாகும். ஜெய் ஹிந்த். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:48 AM
என்ன பண்றது, இந்த வாரம் பதிவர் உலகத்துல ஒன்னு பகிரங்க கடிதம் எழுதனும் இல்லன்னா மெஸ்ஸ பத்தி எழுதணும் ...

நான் யாருக்காவது அந்தரங்க கடிதம் எழுதுனாலே அடிதடி வந்துடும், இதுல பகிரங்க கடிதம் எதையாவது எழுதுனா பிரச்சனை பெரிய அளவுல வந்துடாது? அதான் மெஸ் பக்கம் போயிடுவோம்னு முடிவுபண்ணிட்டேன்.

நான் பெருசா எந்த மெஸ்லயும் போயி தொடர்ந்து சாப்பிட்டதெல்லாம் இல்லை. ஆனால் இந்த மதுரை பக்கம் போனா மறக்காம செய்யிறது இதுதான்.
தலைப்புல இருக்க எல்லாத்தையும் முழுசா அனுபவிக்க மதுரையில ஒரு முழுநாள் தேவைப்படும்.

காலையில ஒரு 10 மணிக்கெல்லாம் மதுரைக்குள்ள நுழைஞ்சிடணும். அப்பத்தான் சரியா ஜிகர்தண்டால இருந்து ஆரம்பிக்கலாம். மதுரை ஜிகர்தண்டா இருக்கே, அந்த பெயரை கேட்டாலே ஜிவ்வுனு இருக்கும். இது ஒரு ஹிந்தி பெயராம்.ஜிகர்ன்னா இதயம், தண்டான்னா குளிர்ச்சி, இதயத்தை குளிர்விக்கும் பானம் இதுன்னு பெயர் குறிப்பு சொல்றாங்க.


மதுரையில பல கடைகளில் ஜிகர்தண்டா கிடைச்சாலும், மஞ்சணக்காரவீதியில இருக்க பழைய கடையிலத்தான் ரொம்ப நல்லா இருக்கும். அந்த வீதியில போய் யாரைக்கேட்டாலும் கடைய காட்டுவாங்க. (திருநெல்வேலில எல்லா இடத்துலயும் அல்வா கிடைச்சாலும், இருட்டுகடை அல்வா மாதிரி வராதுல, அப்டிதான் இதுவும்).

பாதம் பிசின், சுண்டக்காய்சுன பால், ஐஸ்க்ரீம் மற்றும் சில எசன்ஸ் ஊத்தி செய்யிற இத காலையில சாப்புட்டுட்டு ஒரு 2 மணிநேரம் வேற எதுவும் சாப்புடக்கூடாது. அப்பத்தானே அம்மா மெஸ்ல போயி ஒரு கட்டு கட்ட முடியும்?

மதியான சாப்பாட்டுக்கு மதுரையில ஒரு சிறந்த இடம் அழகர் கோயில் சாலையில, தல்லாக்குளம் பகுதியில இருக்க அம்மா மெஸ்.

அம்மா மெஸ் அயிர மீன் குழம்பு தமிழ்நாடு முழுக்க புகழ்வாய்ந்த ஒன்று. நாங்க எல்லாம் எங்க கிராமத்துல ஆறு, வாய்கால்கள்ல தண்ணி கொஞ்சமா ஓடுற காலத்துல அயிரமீன் பிடிச்சுருக்கோம். ஆனா இந்த அம்மா மெஸ் காரங்களுக்கு மட்டும் எப்டி வருசம் முழுசும் அயிரமீன் கிடைக்குதுன்னு தெரியலை. எப்ப போனாலும் அயிரமீன் குழம்பு கிடைக்குது.
அயிரமீன் கடல்ல இருக்க நெத்திலி மீன் மாதிரி ரொம்ப பொடிசா இருக்க நன்னீர் மீன். இதை புடிக்கிறது ரொம்ப சுலபம். தண்ணி கொஞ்சமா ஓடுற ஆறு, வாய்க்கால்கள்ல கூட்டமா ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு பழைய கொசுவலை இல்லன்ன லுங்கி இதுல ஒருபக்கம் முடிச்சு போட்டுகிட்டு, ரெண்டு பேரு சேர்ந்து தண்ணியில போட்டு இழுத்து தூக்குனா செமையா மாட்டிக்கும். இந்த மீன்ல குடல் எல்லாம் இருக்காதுங்கிறதால சுத்தம் பண்றது ரொம்ப சுலபம். ஒரு மண் சட்டியில கொஞ்சம் கல் உப்ப போட்டு நல்லா உரசி இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் தேய்ச்சா போதும் எடுத்து கழுவிட்டு சமைக்கலாம். எங்க கிராமத்துக்கு போகிறப்ப நான், எங்க அண்ணண்கள் எல்லாம் சேர்ந்து இந்த மீன் புடிப்போம். எப்ப அயிரமீன் சாப்பிட்டாலும் எனக்கு எங்க அண்ணண்களோட சேர்ந்து மீன் புடிச்சதுதான் நினைவுக்கு வரும்.

சுகமான அயிரமீன் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு நல்லா ஊர் சுத்தனும். மாலையில வெறும் காபி மட்டும் குடிச்சா போதும், ஏதாவது சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டு வயிற நிரப்பியாச்சுனா அப்றம் கோனார் மெஸ்ல ஒழுங்கா சாப்பிட முடியாதுல‌.

கோனார் மெஸ் ஒரு சாலையோர கடை மாதிரித்தான் இருக்கும், மதுரை சிம்மக்கல் பக்கத்துல இருக்கு. இரவு நேரக் கையேந்தி பவன் கடைத்தான். ஆனா எல்லாம் மிக அருமையா இருக்கும். கோனார் மெஸ் போனா கறி தோசை சாப்பிடாம வரக்கூடாது. ஊத்தாப்பம் மாதிரி தோசைய ஊத்தி அது மேல ஆட்டுக்கறிய அழகா வைச்சி கொடுப்பாங்க. அங்க கோழி வருவல்,இடியாப்பம் எல்லாமும் கூட ரொம்ப சுவையா இருக்கும். கோனார் மெஸ் மாலை 7.30 மணிக்குத்தான் திறப்பாங்க. கார்ல போனா, கார்லயே உக்காந்து சாப்புடலாம். கொண்டுவந்து கொடுக்க நிறைய பணியாளர்கள் இருப்பாங்க. 8மணிக்கெல்லாம் நிறைய கூட்டம் வந்துரும். கார் நிறுத்த இடம் இருக்காது. 12 மணிவரைக்கும் கடை திறந்திருக்கும்.

ஆனா நாம ஒரு நாள் பயணமா போயிருந்தா 9மணிக்குள்ள கோனார் மெஸ்ல சாப்பிட்டு முடிச்சுரணும், அப்பதானே இரவு நேரக்காட்சிக்கு ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, அப்டியே முருகன் இட்லிகடையில சாப்பிட்டுட்டு ஊரப் பார்க்க போக முடியும்? ( அடப்பாவி, இன்னும் சாப்பாடு முடியலியான்னு எல்லாம் கேட்க்கப்படாது, நிறைய இருக்கப்பு. ..)

கோனார் மெஸ்ல கறிதோசைய சாப்பிட்டுட்டு ஏதாச்சும் ஒரு படத்துக்கு போயிரனும், அங்க போய் எங்க தலைவர் ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச படத்துக்குத்தான் போவேன்னு எல்லாம் பச்சபுள்ளயாட்டம் அழுவகூடாது. அவரு நடிச்ச படம் எல்லாம் எப்ப திரையரங்குக்கு வந்துருக்கு?

படம் பார்த்து முடிச்சதும் முருகன் இட்லி கடைக்கு போயிடனும். மேல மாசிவீதியில இருக்கு இந்த கடை. இந்த கடைக்கு நான் ஒன்னும் பெருசா விளம்பரம் தரவேண்டியது இல்ல. ஏற்கனவே சுப்ரமண்யம் சாமிதான் எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுட்டாரே. இவங்க வைக்கிற இட்லியை விட அதுக்கு வைக்கிற சட்னிதான் விசேஷமே. குறைஞ்சது 4 சட்னி இருக்கும், சாம்பார், இட்லி பொடி, நல்லெண்ணய் எல்லாம் கிடைக்கும். இவங்க கடை சென்னையிலயும், இப்ப சமீபத்துல சிங்கப்பூர்லயும் திறந்துருக்காங்க. சென்னையிலயும், சிங்கப்பூர்லயும் இட்லிபொடி,எண்ணெய்க்கு தனியா காசு வாங்குறாங்க. (சிங்கப்பூர் கடை முஸ்தபா வணிகவளாகத்துக்கு அருகே இருக்கு, வெள்ளி,சனி, ஞாயிறுகிழமைகளில் வரிசையில நின்னு இடம் பிடிக்க வேண்டியிருக்கு).

மதுரை ஒரு தூங்காத நகரம், ராத்திரி எல்லா நேரத்துலயும் சாலையோர கடை எல்லாம் திறந்துருக்கும். இந்த சாலையோர கடைகள் கூட மிக சுவையான உணவு தருவாங்க. அங்கயும் இட்லி, தோசைக்கு வரிசையா பல வண்ணங்கள்ல சட்னி தருவாங்க. பாசக்கார மக்க நிறைஞ்ச ஊரு, ஒரு குறும்போட எல்லாரும் பேசுனாலும் சாப்பாடு வஞ்சனையே இல்லாம போடுவாங்க.

இப்படி ஒரு நாள் உணவுமுறை பயணமாக மதுரைக்கு போகும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

1) உறவினர்கள், நண்பர்கள் யார் வீட்டுக்கும் போகாதீர்கள், அப்படி போனால் அவர்கள் வீட்டில் உணவருந்தவோ அல்லது சிற்றுண்டி, காபி போன்றவை உட்கொள்ளவோ நேரிடும். இது நமது பயணத்தின் நோக்கத்தை பாதித்துவிடும்.

2) ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுடன் மட்டும் இப்பயணத்தை அமைத்துக்கொள்வது நல்லது. ரொம்ப கூட்டமாயிட்டா ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லி பயணத்தின் நோக்கத்தை கெடுக்க வாய்ப்புகள் இருக்கு.

3) காரில் சென்றால் ஓட்டுநர் ஒருவரை அமர்த்திக்கொள்வது நல்லது. நல்லா சாப்பிட்ட அப்றம் நமக்கு சுகமா தூக்கம்தான் வரும். வண்டி ஓட்டனுமேன்னு குறைச்சு சாப்பிடுறமாதிரி ஆயிடும்.

இப்டி நல்ல ஒரு நாள் முழுக்க மதுரைய சுத்தி சாப்பிட்டுட்டு மறக்காம ஊருக்கு போறப்ப தங்கமணிக்கு மதுரை புகழ் மல்லிகைபூ வாங்கிட்டு போயிடுங்க. கல்யாணமாகத கொடுத்துவைச்சவங்க‌, வீட்ல இருக்க பெண்களுக்கு வாங்கிட்டு போங்கப்பு, அதையும் மறந்துட கூடாது.

ஒருவழியா பதிவுலகக் கடமையை நிறைவேத்தியாச்சு, இனிமேத்தான் அலுவலகத்துல நிம்மதியா தூங்க முடியும்... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:40 PM
தமிழக அரசால் பள்ளிமாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்துப் பயணச் சலுகை எல்லா இடங்களிலும் எள்ளல்களுக்கு உள்ளாவது உண்டு. அவற்றின் உச்சமாக ஒரு சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள செல்வராஜ் உயர்நிலைபள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர் அரசு பேருந்தில் வந்த போது, அவர்களது பள்ளி இருக்கும் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர். மாணவிகள் பேருந்தை நிறுத்தக்கோரி சத்தமிட்டதால் எரிச்சலடைந்த நடத்துநர் அவர்களை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

இலவசம் என்றால் இவர்களுக்கு இளக்காரமா? இவர்களின் ஊதியத்தில் இருந்தா அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கின்றது? என்ன கொடுமை இது? ஓடும் பேருந்தில் இருந்து ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவிகளை கீழே தள்ளுகிறார் என்றால் அவருக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கின்றதா? உண்மையிலேயே நல்ல மனநிலை உடையவர்தானா அந்த நடத்துநர் அல்லது மனநிலை சரியில்லாதவரா?

கீழே விழுந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள், ஒரு வேளை பலத்த அடிபட்டிருந்தாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ இவர்களால் அதை ஈடு செய்ய முடியுமா? ஆனால் இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை.

போக்குவரத்துகழகம் அந்த ஓட்டுநரையும், நடத்துநரையும் இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறதாம். மற்றவர்களுக்கு இது போல் நடக்க கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றதாம். என்ன ஒரு கடுமையான தண்டணை கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா?

உடனடியாக அவர்களை கைது செய்து ,குறைந்தபட்சம் கொலை முயற்சி வழக்காவது பதிவு செய்திருக்க வேண்டும், உடனடியாக அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ததாகக்கூட செய்தியில் இல்லை.

நான் எப்போதும் என் நாட்டைப் பிற நாட்டோடு ஒப்பிட்டுவது கிடையாது. நான் இருக்கும் நாட்டில் இருக்கும் வசதிகள் என் நாட்டிலும் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஆதங்கம்தான் அடைவேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு சம்பவம் இந்த செய்தியோடு நினைவுக்கு வந்து அந்த ஆதங்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றது.

ஒரு முறை இங்குள்ள பேருந்தில் இருந்து தனது நிறுத்தத்தில் இறங்கிய ஒரு பெண்மணி, இறங்கும் போது நிலைதடுமாறி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு தூணில் மோதி தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் நிலை தடுமாறியதற்கோ, அல்லது காயம் அடைந்ததற்கோ அந்த பேருந்தின் ஓட்டுநர் எள்ளளவும் காரணமில்லை. நிறுத்தத்தில் நன்றாக பேருந்தை நிறுத்தி, Hand Brake lock செய்துவிட்டு, பின்னர் தானே இங்கு பேருந்தின் கதவையே திறப்பார்கள், அதனால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் அந்த ஓட்டுநரின் வேலை உடனடியாக பறிக்கப்பட்டு,வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அந்த பெண் நிலை தடுமாறியதையோ, காயமடைந்ததையோ, உதவி கேட்டு அவர் கையை ஆட்டியதையோ அவர் கவனிக்காமல் அங்கிருந்து பேருந்தை எடுத்து சென்றுவிட்டார். இதுதான் அவர் செய்த தவறு. பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தில் இருந்து இறங்கியவர் கீழே விழுந்ததை எப்படி கவனிக்காமல் சென்றார்? அந்தப் பெண் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்தாரே என்று இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என நிர்வாகம் விளக்கமளித்தது.

ஆனால் நம்மவர்கள் சர்வ சாதாரணமாக பணியிடை நீக்கம் மட்டும் செய்துள்ளார்கள்.

இலவச சலுகையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இப்படி இழிவுபடுத்தப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கின்றது. இந்த ஓட்டுநர், நடத்துநரின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டணை இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
தமிழுக்காக பல பதிவுகளை நான் எழுதியிருந்தாலும், நேற்று நடந்த ஒரு வலையுரையாடல் என்னை இப்பதிவை எழுத தூண்டியது.

பலநாட்களாய் வலைப்பூ வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதிவந்தாலும் தற்போது தமிழில் எழுத ஆரம்பித்திருக்கும் என் உயிர் நண்பண் ஒருவன் நேற்று ஒரு பதிவை எழுதிவிட்டு என்னை படிக்க சொன்னான். ஆங்கில வழியில் கல்வி பயின்ற அவன் தமிழில் பல எழுத்துப்பிழைகளுடன் எழுதியிருந்தான். ண, ன ,ர,ற ,ள,ல,ழ வித்தியாசங்கள் சுத்தமாக தெரியாமல் எழுதியிருந்தான். மிக கோபமாகவே கேட்டேன் என்னடா இப்படி தப்புத்தப்பா எழுதியிருக்க, தமிழ் கூடவா தெரியாதுன்னு கேட்டேன்.

ஆனால் என் நண்பணின் வாதம் என்னவென்றால், இது அவர்களது தவறில்லை, நமது கல்வி முறையின் தவறுதான் என்பதே. நம் கல்வி முறை எப்படி மாற்றியமைப்பது என்று யோசிக்க வேண்டும் என்று சொல்கிறான் அவன்.

இதில் நம் கல்வி முறையின் தவறு என்னவென்று எனக்கு தெரியவில்லை. கட்டாயம் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என சில பள்ளிகளில் விதிமுறை விதிப்பது குறித்தெல்லாம் பேச்சு வந்தது. தமிழ் நம் தாய்மொழி, ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி, இன்று வேலை வாய்ப்பை பெற ஆங்கில அறிவு மிக அதிகமாக தேவை என்பதால் ஆங்கில அறிவு அத்யாவசியமான ஒன்று. எனவே ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள, அதில் சரளமாக பேசவும், எழுதவும் பள்ளிகளில் பயிற்சி அளிக்கத்தான் வேண்டும். அதில் தவறே இல்லை. ஆனால் உங்கள் வீடுகளிலும், பள்ளிக்கு வெளியிலும் உங்களை அவ்வாறே பேசச் சொன்னது யார்?

இப்படித்தான் கடந்த மே மாதம் நான் ஊருக்கு சென்றிருந்த போது என் சகோதரியின் மகன், ஆங்கிலவழிக் கல்வியில் ஆறம் வகுப்பு முடித்திருந்தவனுக்கு தமிழை சரளமாக வாசிக்கவும், எழுதவும் தெரியவில்லை. மிக சாதாரணமாய் இல்லை மாமா,எனக்கு தமிழ் எல்லாம் படிக்கத்தெரியாதுனு சொன்னாரு என் அருமை மாப்பிள்ளை. எனக்கு கடுமையான சினம் வந்தது, அதே நேரம் இதை எப்படி சரிசெய்வது என்று சிந்தித்தேன், பள்ளிக்கல்வி வேண்டுமாணால் அவர்களுக்கு தமிழ் அறிவை அளிக்க தவறி இருக்கலாம். பிள்ளைகளும் அதையே பின்பற்றிக்கொண்டு செல்லலாம், ஆனால் நமக்கு எங்கே போனது புத்தி? என் புள்ளைக்கு தமிழ் படிக்ககூட தெரியாதுன்னு சொல்றதுல தானே நமக்கு பெருமை? பின்ன எங்க நமக்கு தாய்மொழி மேல அக்கறை வரப்போவுது?

கடைசியா என் மாப்பிள்ளைக்கு நான் சொன்ன தீர்வு, தமிழ் செய்திதாள்களை வாங்கி படிக்க சொன்னேன், தினமும் சத்தமாக படிக்க சொன்னேன், இப்போ மாப்பிள்ளை ஒழுங்கா தமிழ் படிக்கிறாரு. நான் இதை சுட்டிக்காட்டிய பின்னர்தான் என் சகோதரியும் இதை உணர்ந்தார். இனி கட்டாயம் என் சகோதரி தன் மகன் தமிழை மறக்க விடாமல் செய்வார். இதுதான் ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது.

பிள்ளைகள் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை கட்டாயம் கற்கவேண்டும். முடிந்தால் ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான் மொழிகளையும் கற்றுக்கொள்ள சொல்லுங்கள். பிற மொழிகளை எத்தனை முடியுமோ அத்தனை கற்க சொல்லுங்கள். ஆனால் அதே நேரம் தாய் மொழியை மறக்காமல் இருக்க செய்யுங்கள். பள்ளிகளில் அவர்கள் வேற்று மொழியை கற்கட்டும். வீட்டில் தாய் மொழியை பழக்குங்கள்.

நம் மூத்த பதிவர் டோண்டு ராகவன் அய்யா கூட பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளை கற்றறிந்து, மொழிபெயர்பாளராக பணியாற்றிக்கொண்டுதானே இருக்கின்றார். இத்தனை மொழிகளையும் கற்றதால் அவர் தமிழை பிழையாகவா எழுதுகின்றார்? இல்லை எனக்கு தமிழே தெரியாது என்று சொல்கிறாரா என்ன ? நேற்று என்னோடு உரையாடிய நண்பண் சொன்னது, தற்போது எல்லாவற்றையுமே என்னால் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கவே முடிகின்றது என்று சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சிந்திக்கக் கூட அந்நிய மொழிதான் என்ற அளவுக்கு தாய்மொழியை கண்டுகொள்ளாமல் விட்டது யார் தவறு?

சிங்கப்பூரில் தமிழ் மொழி ஒரு தேசிய மொழி, இங்கு எல்லா இடங்களிலும் தமிழ் மொழி உண்டு. ஆனால் இங்கு இருக்கும் எனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு தமிழே தெரியாது. இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் கூட அவர்கள் இந்தியா வரும்போது அந்த குழந்தையுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில் இருப்பவர்கள் நிலை ?

இந்த‌ விச‌ய‌த்தில் ந‌ம‌து ஈழ‌த்து ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ம்மைவிட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள். கால‌ சூழ்நிலையில் அவ‌ர்க‌ள் ப‌ல்வேறு நாடுக‌ளுக்கு புல‌ம்பெய‌ர்ந்தாலும், இளைய‌ த‌லைமுறையின‌ர் இன்னும் த‌மிழை விட்டுவிட‌வில்லை. நேற்றுகூட‌ ஆஸ்திரேலியாவுல‌ உள்ள‌ ஈழ‌த‌மிழ் ச‌கோத‌ரி ஒருவ‌ட‌ன் வ‌லை மூல‌ம் பேசிய‌போது, அந்த‌ ச‌கோத‌ரி முத‌லில் ஆங்கில‌த்தில் பேசினாலும், சுதாரித்துக்கொண்டு உட‌னே த‌மிழில் பேச‌ ஆர‌ம்பித்தார். இனிய‌ த‌மிழில்தான் எங்க‌ள் உரையாட‌ல் சென்ற‌து.

ஆஸ்திரேலியாவில் தமிழை ஒரு பாடமாக படிக்காத போதும், தனது சொந்த முயற்சியால் தமிழைக் கற்று, வலையுலகில் எனக்கு முன்னரே தொடங்கி பல பதிவுகளை அழகுத் தமிழில் வெளியிட்ட என் அன்பு சகோதரி தூயாவிற்கு இந்த பதிவு சமர்பணம். இப்படி உள்ளவர்கள் இருக்கும் வரை என் இனிய தாய்மொழி காப்பாற்றப்படும்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்னர் பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடந்த யூத இனம், தங்களது மொழியை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியதால்தான் இன்று அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி மிக நன்றாக முன்னேறியுள்ளார்கள்.

வெறும் அந்நியமொழியால் மட்டும் நமக்கு முன்னேற்றம் கிட்டாது என்பதற்கு ஜப்பானையும், சீனாவையும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக கூறத்தேவையிருக்காது.

செம்மொழியாகிவிட்டால் போதாது, அது நம்மொழியாய் இருக்க வேண்டும். தயவுசெய்து தாய்மொழியே வீட்டில் நம் மொழியாய் இருக்கட்டும்.

வீட்டிலும் நாம் நம் மொழியை மறந்துவிட்டால், மெல்ல தமிழ் இனி சாகும்... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:19 AM
என் அன்பு அண்ணண் புதுகை அப்துல்லா அவர்கள் கடந்த வாரம் ஞாயிறு அன்று ஒரு சிறு விபத்தை சந்தித்து, தற்போது உடல்நலம் பெற்று மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டார் என்பது தமிழ்மணம் கூறும் நல்லுலகில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அண்ணண் ஓய்வில் இருந்த போது, அண்ணணின் மேல் உள்ள பாசத்தால் எனக்கு ஜே.கே.ரித்தீஷை பிடிக்காது என்றாலும் கூட ஜே.கே.ரித்தீஷை வம்பிழுத்து எழுதப்பட்ட பதிவில் அண்ணண் சார்பாக எனது கடும் கண்டணங்களை தெரிவித்திருந்தேன்.
ஓய்வில் இருந்து திரும்பிய அப்துல்லா அண்ணண், அவர் வெளியிட்ட பதிவில் எனக்கு நன்றி கூறி இருதார். சகோதரர்களுக்குள் நன்றி என்பதே அதிகம். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை,சங்கத்தின் சார்பாக அடுத்தமுறை நான் இந்தியா செல்லும் போது ஜே.கே.ரித்தீஷ் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக வேறு மிரட்டினார்.

என் நிலை கைமீறி போவதை உணர்ந்த நான் நமீதாவை தவிர வேறு யாருக்கும் ரசிகராக இருக்கப்போவதில்லை என்ற எனது உறுதியான கொள்கையை சற்றே தளர்த்தி, அண்ணண் மேல் உள்ள பயம் கலந்த பாசத்தால் ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் இணைந்துவிடுவதாக பின்னூட்டமிட்டிருந்தேன்.

ஜோசப் பால்ராஜ் said...
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன். இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.

அண்ணண் விரைவில் குணமடைந்த வந்தமைக்கு, எங்கும் நிறைந்தவனும், எல்லோர்கும் பொதுவானவனுமான இறைவனுக்கு நன்றிகள்.

இந்த பின்னூட்டத்தை படித்துவிட்டு அதற்கு கீழே உள்ள பதிலை அண்ணண் அப்துல்லா எழுதியிருந்தார்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
வாங்க ஜோசப் அண்ணே!
//
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
//

தலையே வரவேற்ற சந்தோஷம் எனக்கு இப்போ :)


//இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன்.
இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.
//


ஜொசப் அண்ணே நான் மிகவும் சீரியசாகவே சொல்கிறேன். எங்களுக்கெல்லாம் உங்களைப் போல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய தகவல்களை முழுமையாகத் திரட்டி சுயமாக மேலும் சிந்தித்து தெளிவாக எழுதுகின்ற அந்தக் கலை தெரியாது. உங்களுக்கு அந்த வரம் இயல்பாகவே வாய்த்துள்ளது. நாங்கள் எழுத வேண்டுமே என்ற மன உந்துதலின் காரணமாகவும் அதே நேரத்தில் என்ன,எப்படி எழுதுவது என்பதை அறியாததாலும் ரித்தீஷ் அவர்களை வாரியோ அல்லது போற்றியோ அப்போதைய சூல்நிலைக்கு கிறுக்கி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கெல்லாம் சகோதரராக மட்டும் இருங்கள்.தயவு செய்து எங்களோடு சேர்ந்து கெட்டுப் போய்விடாதீர்கள்.நான் அறிந்தவரை உங்க பதிவிற்கென்று ஓரு தீவிர வாசகர் வட்டம் உள்ளது. உங்களைக் கெடுத்த பாவம் எனக்கோ,ச்சின்னப் பையனுக்கோ,வழிப்போக்கனுக்கோ,பரிசலுக்கோ,தமிராவுக்கோ,வெண்பூவுக்கோ வேண்டாம். எப்பவும் போல சீரியசான பதிவாவே எழுதி கலக்குங்க!

இவ‌ரு என்ன‌ திட்டுறாரா இல்ல‌ உண்மையிலேயே புக‌ழ்றாரானு என‌க்கு புரிய‌லை. என‌க்குனு ஒரு தீவிர‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் உள்ள‌துன்னு எல்லாம் சொல்லி ஏத்திவிடுறாரு.

இன்னும் ந‌ம்ப‌ள‌ இந்த‌ ஊரு ந‌ம்பிகிட்டு இருக்கு , ஆன‌ இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்கிடுறாங்க‌ளே....


எனதருமை வலையுலக சொந்தங்களே, உண்மை என்னானு கொஞ்சம் பின்னூட்டத்துல சொல்லுங்க. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:46 PM
அன்பு நண்பர் கிரி எழுதிய சைக்கிள் கேப்பில் லாரி ஒட்டிய சத்யராஜ் என்ற பதிவிற்கு பதிலை பதிவாக வெளியிடுகின்றேன் என்ற எனது வாக்கை இதன் மூலம் காப்பாற்றுகிறேன்.

முதன் முதலில் சில விசயங்களை சொல்லிவிட்டுத்தான் நான் இதை ஆரம்பிக்க வேண்டும்.
1) திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் சத்தியராஜ் கூறிய கருத்துகள் மிக சரி என்றாலும், அதை அவர் வெளிக்காட்டிய விதம் அநாகரீகமானது என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.

2) நான் சத்தியராஜின் ரசிகரோ அல்லது ரஜினியை வெறுப்பவனோ அல்ல.

சந்தை மதிப்பில் ரஜினி அளவுக்கு சத்தியராஜ் இல்லைதான். தனது மதிப்பு என்னவென்று தெரியாதவர் இல்லை சத்தியராஜ்.

ரஜினி படம் குவிக்கும் அளவுக்கு வசூலை சத்தியராஜ் படம் குவிக்காதுதான். ஆனால் ரஜினியும், சத்தியராஜும் ஒரே அளவுதான் ஊதியம் வாங்குகின்றார்களா?

ரஜினியின் படம் 100 கோடி வசூலை குவிக்கின்றது, ரஜினி 10 கோடிக்கு மேல் ஊதியம் பெறுகின்றார். ஆனால் சத்தியராஜின் படங்கள் அந்த அளவுக்கு வசூல் ஆவதும் இல்லை, அவர் கோடிகளில் ஊதியம் வாங்குவதும் இல்லை. எனவே இதில் இருவர் படத்தின் வசூலையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்லை. அப்படி வசூலை ஒப்பிட்டால் அவரது ஊதியத்தையும் ஒப்பிடுங்கள்.

சத்தியராஜ் திரையுலகில் நுழைந்ததன் வெள்ளி விழாவை கொண்டாடிய போது அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற எல்லா நடிகரையும் பார்த்தும் கேட்கப்படும் கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதில் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் என்பது சினிமா துறை போல இயக்குநர் சொன்னதை செய்துவிட்டு செல்லும் வேலை அல்ல என்று தெளிவான பதிலை சொன்னார்.

தனது படங்களில் குத்து வசனங்கள் ( பஞ்ச் டயலாக்) எல்லாம் அவர் வைத்துக் கொள்ளவில்லை. வருவேன், இப்ப வருவேன், இதோ வந்துகிட்டே இருக்கேன்னு எல்லாம் சொல்லிகிட்டு இல்ல.

வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் பேவதெங்கே ( தெக்க போங்க)
அப்படின்னு எல்லாம் பாட்டு போட்டுகிட்டு அலப்பரய பண்ணல. அவருபாட்டுக்கு தகடு தகடு, என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்குகிறீங்களே இதுமாதிரி எதாவது பகடி பண்ணிக்கிட்டு தான் உண்டு தன் நடிப்பு உண்டுனு இருந்தாரு.

இதுவரை அவர் எந்த அரசுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ குரல் கொடுத்ததில்லையே. இப்போதும் பிரச்சனை தமிழனுக்கு எதிரானது என்பதால் தானே அவ்வளவு ஆவேசமாக பேசினார்?

உலகின் பெரும் பணக்காரான பில்கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து லிண்டா கேட்ஸ் பவுண்டேசன் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி செய்து வருகின்றார்.

குஜராத் பூகம்பத்தின் போது, ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது உணவுத் தேவைகளையே பிச்சையெடுத்து பூர்த்திசெய்துகொண்டிருந்தவர், பிச்சையெடுத்து தான் வைத்திருந்த மொத்த தொகையையும் பூகம்ப நிவாரண நிதியாக கொடுத்தார்.

பில்கேட்ஸ் மற்றும் அந்த முதியவர் இவர்களில் யார் செய்த தர்மம் பெரியது? சொல்லுங்கள். தன்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்த அந்த முதியவரா அல்லது தனது தேவைகள் போக மிச்சம் இருப்பதை கொடுக்கும் பில்கேட்ஸ்ஸா?


தான் வாங்கும் குறைந்த ஊதியத்திலேயே, தன்னால் தயாரிப்பாளருக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்வேன் என்று சொல்லும் சத்தியராஜ் சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுகின்றார் என்றால் பல கோடிகளை ஊதியமாக பெறும் ரஜினியால் அப்படி செய்ய முடியவில்லை ? சத்தியராஜ்க்காவது சைக்கிள் இடைவெளிதான் இருக்கிறது, அதிலேயே அவர் கஷ்டப்பட்டு லாரி ஓட்டும்போது, தமிழகம் தான் ரஜினிக்கு தனி ராஜபாட்டையே போட்டுக்கொடுத்திருக்கின்றதே , அதில் ஏன் அவர் சைக்கிள் கூட ஓட்ட முயற்சிக்காமல் ஒரேடியாக காலில் விழவேண்டும் ?


கிரி said...
//வெங்கட்ராமன் said...
அதான அப்பாவும் பையனும் நமீதா பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்றதெல்லாம் புரட்சி இல்லையா. . . ?//

காதல் புரட்சி :-))) அப்பாவும் பய்யனும் இப்படி இருக்க வேண்டும் என்று புரட்சி கர கருத்துக்கள் கூறுகிறாங்க..அப்ப கண்டிப்பா புரட்சி தமிழன் தான்..



அப்போ திருவிளையாடல் ஆரம்பத்துல தனுஷ் கூட நடிச்ச ஸ்ரேயவே சிவாஜியில ரஜினி கூட நடிச்சாங்களே, அது என்னா ?

அப்பாவும் பையனும் ஒரே நடிகையோட நடிக்க கூடாது, ஆனா மாமானாரும், மருமகனும் ஒரே நடிகையோட நடிக்கலாம்னு ஏதாவது விதி இருக்கா?

மத்தவங்க மேல ஒரு விரல நீட்டுறப்ப கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க கிரி, ஏன்னா உங்க 4 விரல்களும் உங்கள நோக்கி இருக்கும்.

மேலும் சத்தியராஜை, டி.ராஜேந்தருடன் வேறு ஒப்பிட்டுள்ளீர்கள். ராஜேந்தர் ஒரு அரசியல் கட்சியின் நடத்துபவர், எப்போது என்ன நிலை எடுப்பார், யாரை ஆதரிப்பார் என்று யாருக்கும் தெரியாது. இப்படியிருக்க தான் சொன்ன கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று சொல்லும் சத்தியராஜை அவர்டன் ஏன் ஒப்பிட்டுகின்றீர்கள்?

ஆனால் ரஜினி, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவணால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றவர், அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றார், தேர்தலில் அவர்களுத்தான் ஓட்டு போட்டேன் என்று அரசியல் சட்டத்தை மீறி சொல்லக்கூடாததை கூட வெளியில் சொன்னார். இப்படி ஒரு தேர்தலுக்கு ஒரு நிலை எடுத்ததால் வேண்டுமாணால் ரஜினியை நாம் டி.ராஜேந்தருடன் ஒப்பிடலாம். அதுதான் சரியாக இருக்கும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:49 PM
கடந்த ஞாயிறன்று சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்பில் சிங்கை மூத்த பதிவரும், கட்டுமானத்துறையில் பணியாற்றுபவருமான வடுவூர் குமார் அவர்கள் தற்போது துபாயில் வேலையில் சேர இருப்பதாக கூறினார்.

அவர் துபாய் வேலைக்காக முயற்சி செய்ய ஆரம்பித்த பொழுது துபாய் விசா குறித்த நடைமுறைகள் எதுவும் தெரியாமல் மிகச் சிரமப்பட்டதாகவும், அதுகுறித்து யாராவது ஒரு பதிவு எழுதினால் மிக நன்றாக இருக்கும் என்று கூறினார். வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் பதிவர்கள் அந்த பகுதி நாடுகளில் உள்ள வேலை தேடி வருபவர்களுக்கு உதவும் நோக்கில் அங்குள்ள நாடுகளின் விசா நடைமுறைகளையும், வேலைக்கு வருபவர்கள் செய்ய வேண்டியவைகளையும் விரிவாக எழுதுமாறு சிங்கை பதிவர்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

மேலும் துபாய் வரும் எங்கள் கண்ணின் மணி போல காத்துவந்த அன்புக்குரிய வடுவூர் குமார் அவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறும் எங்கள் அனைவரின் சார்பாக வேண்டுகிறோம்.

மேலும் எங்கள் அனைவராலும் சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு குறித்து எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவுக‌ளில் விடுப‌ட்ட‌ ஒரு விச‌ய‌த்தையும் சொல்ல‌ விரும்புகிறேன்.

ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌ புல்வெளியில் இருந்து கிள‌ம்பி காபி குடிக்க‌ போகும்முன் ந‌டைபாதையில் நிக‌ழ்ந்த‌ விவாத‌ம் வ‌லையுல‌கில் த‌ற்போது மிக‌ பிர‌ப‌ல‌மாகிக்கொண்டிருக்கும் பின் ந‌வீன‌த்துவ‌த்தை குறித்த‌து. பின் ந‌வீன‌த்துவ‌ம் என்றால் என்ன‌ என்ற‌ அடிப்ப‌டை கேள்விக்கே எங்க‌ளால் விடை காண‌ முடிய‌வில்லை. க‌டைசியாக‌ இரு ப‌தில்க‌ளை ப‌திவ‌ர்க‌ள் ச‌பை ஏற்றுக்கொண்ட‌து. இந்த‌ ப‌தில்க‌ள் குறித்து பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிந்த‌ சென்ஷி போன்ற‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ய‌வு செய்து பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌வும்.

ப‌தில் 1. முற்றுப்புள்ளியே இல்லாம‌ல் எழுதிகொண்டே சென்றால் அது பின்ந‌வீன‌த்துவ‌ம்

ப‌தில் 2. யாருக்குமே புரியாம‌ல் எழுத‌ப்ப‌ட்டிருக்கும், அத‌ற்கு ஆகா, ஓகோ என‌ ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் இருக்கும். இதுவும் பின் ந‌வீன‌த்துவ‌ம்.

பி.கு:
மாற்ற‌ங்க‌ளை உள்வாங்கிக் கொள்வ‌துதான் பின் ந‌வீன‌த்துவ‌ம் என்று ப‌ல‌ புரியாத‌ ப‌தில்க‌ள் அங்கு விவ‌ரிக்க‌ப்ப‌ட்டாலும், எங்க‌ள் அனைவ‌ராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌தில்க‌ள் மேலே குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ 2 ப‌தில்க‌ள் ம‌ட்டுமே. எனவே பின்நவீனத்துவ வாதிகள் தயவு செய்து எங்கள் மேல் பாய்ந்துவிடாமல் உண்மையான விளக்கத்தை சொல்லவும்.


Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:10 AM
பாட்டாளி மக்கள் கட்சி தீவிர மதுவிலக்கு கோரி அரசு மதுபானக்கடைகளின் முன் போராடுவது நாம் அறிந்ததே.

கீழே உள்ள படத்தை பாருங்கள். இப்படி ஒரு நூதன போராட்டத்தை நாம் யாரும் இதுவரை கேள்விப்பட்டிருக்கவே முடியாது.


போராட்டத்தில் எல்லோரிடமும் உடைப்பதற்காக கொடுக்கப்பட்ட பாட்டிலில் ஒன்றை ஒரு பெண்மணி வீணாக்காமல் குடித்துக்கொண்டிருக்கின்றார்.

எல்லாப் போரிலும் வெற்றி பெற ஒரே வழி போரிடாமலே இருப்பது தான் என்று ஒரு முதுமொழி உண்டு. எல்லா மதுவையும் குடித்தே மதுவிலக்கை கொண்டுவரலாம் என நினைத்துவிட்டனரோ ?

மதுவை எதிர்த்து போராட இப்படி பாட்டிலை உடைத்துத் தான் ஆக வேண்டுமா? இவர்கள் கண்ணாடி பாட்டில்களை சாலை நடுவே போட்டு உடைத்துவிட்டு போய்விடுவார்கள், அது எத்தனை பேர் கால்களையும், எத்தனை வாகனங்களையும் பதம் பார்க்கும்? பாட்டில்களை உடைத்துதான் போராட வேண்டுமா?

கண்ணாடி சிதறல்களையும் விட மதுவின் நாற்றம் சாலையில் போகும் எல்லோருக்குமே மிக பெரும் இடைஞ்சலாக இருக்காதா? இது என்ன ஒரு முட்டாள்தனமான போராட்டம்? போராட்டம் என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர, மக்களை துன்புறுத்துவதாக இருக்க கூடாது. இப்படித்தான் இவர்களது அரசியல் இருப்பை நிறுவ வேண்டுமா?

தந்தையே,இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள், இவர்களை மன்னியும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:28 PM
பதிவர் உலகிற்கு புதுவரவான நான் முதன் முதலில் கலந்துகொண்ட முதல் பதிவர் சந்திப்பு.

கோவி.கண்ணண் அண்ணண் மிக வேகமாக நேற்று இரவே இச்சந்திப்பை குறித்து எழுதியிருந்தாலும், என்னையும் எழுத பணித்ததால் எனது பார்வையில் இச் சந்திப்பை விவரிக்கிறேன்.

ஏற்கனவே கோவை பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொள்ளாமலேயே என்னை பங்கெடுக்க வைத்த பெயர் குழப்பம் இங்கு நிகழ்ந்துவிடுமோ எனும் அஞ்சும் அளவுக்கு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று ஜோ.. அதிலும் L L DASS எனும் பெயரில் பதிவு எழுதிவரும் ஜோசப் பெனடிக்ட் என்பவர், எனது முழுபெயரான ஜோசப் பெனடிக்ட் பால்ராஜில் முக்கால்வாசியை வைத்துக்கொண்டுள்ளார்.

சந்திப்பின் முக்கிய நிகழ்வுகளை அண்ணண் கோவி.கண்ணண் ஏற்கனவே அவரது பதிவில் சொல்லியுள்ளதால் அவர் சொல்லாததை சொல்கிறேன்.

நான் வலை பதிவராகக் காரணம் என்ன என்ற கேள்வியை கோவி.க அண்ணண் கேட்டு உரையாடலை ஆரம்பித்துவைத்தார். அதுக்கு அப்றம் சிற்றுண்டி உண்ண மட்டுமே அவர் வாயை திறந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிப் மீரான் அண்ணாச்சியின் வலைப்பூவை விகடன் மூலம் அறிந்துகொண்டு, அவரது எழுத்தின் மேல் ஆர்வம் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்த நான் தமிழ்மணத்தில் இணைந்தது மிகச் சமீபத்தில்தான். குசும்பன் எனது வகுப்புத்தோழர். (என் தொந்தரவு தாங்கலன்ன நீங்க தாக்குறதுக்கு ரெண்டு முகவரி கொடுத்துட்டேன்).

நாகர்கோயில் வழக்கில் கேட்க மிக இனிமையானத் தமிழில் என்னிடம் விவசாயம் குறித்த செய்திகளை கேட்டு உரையாடலை ஆரம்பித்த ஜோவுக்கு பதிலளிக்க ஆரம்பித்தவுடன், விவசாய கடன் தள்ளுபடியால் யாருக்கு நன்மை, எல்லா விவசாயிகளும் இதனால் பலனடைகின்றார்களா என்ற அருமையான் வினாவோடு முகவை மைந்தன் எங்கள் உரையாடலில் இணைந்தார். ஆர்வமாய் சென்ற அந்த உரையாடல் எனது உழவும் உழவர்களும் தொடரில் ஒரு பாகமாய் எழுதப்பட வேண்டிய ஒன்று.

ஜோவின் அழகுத்தமிழ் உச்சரிப்பு எனக்கு யாழ்பாணத் தமிழை நினைவுக்கு கொண்டுவந்தது என்பதை அவரிடம் வினவிய போது கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும், ஈழத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள வரலாறு பூர்வமான தொடர்பை அழகாய் விவரித்தார் ஜோ.

இதற்கிடையில் மலையேற இயலாதவர்களின் அழைப்பால் நாங்கள் இடமாற்றம் செய்த போது இறை நம்பிக்கை குறித்த ஒரு சிறு உரையாடல் எங்களுக்குள் நடந்தது.( இது கோவி.க அண்ணணுக்கு தெரியாது.)

சிரமம் வரும்போதுதான் நமக்கு இறை நம்பிக்கையே வருகின்றது, நமக்கு அடுத்துவரும் தலைமுறை நாம் சந்தித்த சிரமங்களை சந்திக்க வாய்பில்லை என்பதால் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருக்குமா இருக்காதா ? என்ற கேள்விக்கு நான் அடுத்த தலைமுறை இறைநம்பிக்கையில் பெற்றோர்களின் கட்டாயத்தால் ஈடுபாடு காட்டுமே தவிர மதம் குறித்த நம்பிக்கையில் சுதந்திர சிந்தனை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் மற்றவர்கள் ஒரு அருமையான கருத்தை எடுத்துரைத்தார்கள், நன்கு வளர்ச்சியடைந்த அமெரிக்காவிலேயே, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பலரும் தீவிர பக்தியுள்ளவர்களாய் மாறினார்கள் என்ற மேற்கோளுடன் அவர்கள் சொல்லியது எனது கருத்தை சிரமம் அல்லது பயம் ஏற்படும் போதுதான் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் என மாற்றிக்கொள்ளச் செய்தது.

ஒரு காலத்தில் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பெண்ணோ, பையனே பிற மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினால் கட்டாயம் பிற மதத்தை சேர்ந்தவர் மதம்மாறி கத்தோலிக்க மதத்தை தழுவ வேண்டும் என்று ஒரு கோட்பாடு இருந்ததாம். ஆனால் இப்போது அப்படியில்லை. மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதைத் தான் கத்தோலிக்க மதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என குறிப்பிட்டிருந்தோம்.

இடமாற்றம் செய்து எல்லோருடனும் அமர்ந்து விவாதிக்க ஆரம்பித்த பின்னர் பல சிறு சிறு விவாதங்கள் இடம்பெற்றன. அவற்றில் முக்கியமாய் நான் குறிப்பிட விரும்புவது பதிவராய் இல்லாமல் வாசகராய் மட்டும் இருந்தாலும் மிகுந்த ஆர்வமுடன் இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஆராய்ச்சியாளரான திரு.பாஸ்கரன் அவர்கள் கூறிய தகவல்கள்.

சிங்கப்பூரில் இந்திய மாணவர்களுக்கு உள்ள உயர் கல்வி வாய்ப்புகள், சிங்கப்பூரில் நம் மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறுவிதமான கல்வி உதவித்தொகைகள் தனி ஒரு பதிவு எழுதும் அளவுக்கு தகவல்களைத் தந்துள்ளார். அவர் கட்டாயம் பதிவெழுத வேண்டும், இது போன்ற உபயோகமானத் தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினோம். அப்படி அவரால் எழுத முடியாதபட்சத்தில் அவரிடம் இருந்து விவரங்களை சேகரித்து நாங்கள் எழுதுவோம் என தீர்மானித்தோம்.விரைவில் அது வெளிவரும்.

சிற்றுண்டி பரிமாறிய போது, திருநெல்வேலிக்கு அருகே உள்ள நாகர்கோயிலை சேர்ந்த ஜோவுக்கு கோவி.க அண்ணண் அல்வா தர மறந்துவிட்டார். உடனே திருநெல்வேலிக்கு அல்வா இல்லையா என ஜோ கதற ஆரம்பித்துவிட்டார். உட‌னே அவருக்கு அல்வா கொடுத்து, திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த‌ பெருமையை நான் பெற்றுக்கொண்டேன்.

அடுத்ததாக கோவி.கண்ணண் அண்ணண் தன் பதிவில் ஒரு சக பதிவர்க்கு உதவி செய்வது குறித்து எழுதியிருந்தார். நான் இது குறித்து விவரித்தபோது ஒருமித்த குரலில் எல்லோரும் உதவ முன்வந்தார்கள். நான் சீனா அய்யாவை இதுகுறித்து தொடர்பு கொண்ட போது தற்போதைய தேவைக்கு அதிகமாகவே நிதியை நல்ல உள்ளங்கள் அள்ளிக்கொடுத்துவிட்டதால் தற்போது நிதி தேவையில்லை என்று சொல்லி எங்களுக்கு சொல்லிவிட்டார். அந்த நல்ல காரியத்தில் எங்களால் பங்கு பெற முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கோ ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு கடைசி நேரத்தில் சந்திப்புக்கு எகிறி குதித்து வந்த பாரி.அரசு, வெண்பா புலவர் அகரம் அமுதாவுடன் ஆர்வமாய் இலக்கிய விவதத்தில் இறங்கினார்.

கோவி.கண்ணண் அவர்கள் தள்ளாத இந்த வயதில் தலைமை பெறுப்பை சுமந்துகொண்டு சிரமப்படுவதால் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, தலைவர் தலைமை எனும் தலைப்பில் மிக அழகான விவாதம் ஆரம்பித்தது. உங்களுள் தலைவனாக விரும்புபவன் முதலில் ஊழியனாய் இருக்கட்டும் என்ற பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி நான் பேச, அதை அனைவரும் ஆதரித்ததால் இனி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிதான் உண்டு, எங்களுள் தலைவர், தலை போன்ற வார்த்தைகளை கூட பிரயோகிப்பதில்லை என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

ஆனால் முகவை மைந்தன் இந்த தீர்மானத்தை விடாபிடியாக பிடித்துக் கொண்டு சந்திப்பு முடிந்தவுடன் சாலமன் மீன் வாங்க சென்ற போது, மீனின் தலையைக்கூட தலை என்று சொல்ல மறுத்தது, எங்கள் தீர்மானங்களை நாங்கள் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சந்திப்பு நடந்த புல்வெளியில் இருந்து காபி குடிக்க செல்லும் வழியில் பாரி.அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி மிக இளம்வயதிலேயே மரணத்தை தழுவியவர்கள் குறித்து கூறினார். இதுபற்றி மேலதிக தகவல்களை அவர் திரட்டிக்கொண்டு இருப்பதாகவும்,விரைவில் முழுத் தகவல்களுடன் பதிவிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்திப்புக்கு இடத்தை மலைமேல் தேர்ந்தெடுத்து பல படிகள் ஏறிவரச் செய்ததற்காக கோவி.கண்ணண் அண்ணண் மீது சிறு வருத்தம் முதலில் இருந்தாலும், பாரி.அரசு கூறிய இளம் வயதினரின் மாரடைப்பு மரணங்களை கேள்விப்பட்டவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியதின் அவசியம் புரிந்ததால் கோவி.க அண்ணாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.

ஏ ஃபார் ஆப்பிள் தொடரில் நீங்கள் அதிகம் பார்க்கும் தளங்கள் (சைட்) குறித்த தகவல்களை கொடுக்கச் சொன்னால், தான் பார்த்த பெண்களின் பட்டியலை கொடுத்த அண்ணண் புதுகை அப்துல்லாவை கண்டித்து ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

மேலும் யூத்ஃபுல் விகடனில் கலக்கும் அண்ணண் லக்கி லுக், எங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்திய பரிசல்காரர், எங்கள் மனம் கவர்ந்த லதானந் மாமா ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேறியது.

குசும்பனை கண்டித்த நிறைவேற வேண்டிய தீர்மானம் எனது தனிப்பட்ட வேண்டுகோளால் கைவிடப்பட்டது.

மலேசியத் தமிழ் பதிவர்கள் அவர்களுள் யார் பதிவிட்டாலும், மற்றவர்கள் கட்டாயம் பின்னூட்டமிட்டு ஆதரிப்பதால், நாமும் அதேபோல் ஒருவருக்கு ஒருவர் பின்னூட்ட ஆதரவு அளிப்பது என்ற தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேறியது.

இப்ப‌டி ப‌ல‌ உப‌யோக‌மான‌ அலுவ‌ல்க‌ளை த‌ன்ன‌க‌த்தே கொண்ட‌தாக‌ இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ந்த‌தால், குசும்பன் அமோதித்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் பதிவர்கள் அவர்கள் எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் தமிழ் மேல் அவர்கள் காட்டும் ஆர்வம் கட்டாயம் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது ஐயமில்லாத உண்மைதான்.

கேரட் அல்வாவும், பீட்ரூட் அல்வாவும் உண்டாதால் மட்டுமல்லாது சக பதிவர்களை சந்தித்தாலும் நெஞ்சு நிறைய இனிப்பு சுவை நிரம்பியிருந்தது என்றால் அது மிகையாகாது.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:26 PM
முழு அடைப்பு நடத்துவது, அதுவும் அரசாங்கமே அதை நடத்துவது, அதுவும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அதன் கூட்டணிகட்சியே நடத்துவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் , 2007 அக்டோபர் 1 அன்று தமிழக அரசு சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக நடத்த முனைந்த முழுஅடைப்பை நீதிமன்றத்தின் அச்சுறுத்தலால் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம் மிக மோசம் என்பதை சொல்லவே இந்த‌ப்ப‌திவு.

சக பதிவர் எழுதியுள்ள வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை! என்ற பதிவை படித்தவுடன் ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை.

ஏன் இந்த வழக்கில் காட்டிய, காட்டும் தீவிரத்தை மற்ற வழக்குகளில் காட்டவில்லை? கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்குமிடையே நடக்கும் முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்தபின்னரும், இன்னும் அதை கேரள அரசு செயல்படுத்தவில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியபோதும் சரி, இறுதி தீர்ப்பை வழங்கியபோதும் அதை காலில் போட்டு மிதித்து விட்டு, வெள்ளம் வரும்போது மட்டும் திறந்துவிடும் வடிகால் வாய்காலாக காவிரியை பாவித்து நீர் விடும் கர்நாடக அரசு செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?

காவிரியும், முல்லைப்பெரியாரும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகள். அதை தீர்க்க விடுமுறை நாளில் கூடிடுமா நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம்? கேரள அரசையும், கர்நாடக அரசையும் கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என்று சொல்லிடுமா ? அச்சுதான‌ந்த‌னுக்கும், எடியூர‌ப்பாவுக்கும் கைது செய்வோம் என‌ மிர‌ட்ட‌ல் விடுக்குமா?

தீர்க்க வேண்டிய முக்கியமான வழக்குகள் எத்தனையோ இருக்கும் போது அவற்றை தீர்க்க வழிகாண வக்கில்லாத உச்சநீதிமன்றம்,
கடலுக்குள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மூழ்கிவிட்ட ஒரு மணல்திட்டுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அது இராமரால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா , இராமர் என்பவர் உண்மையிலேயே இருந்தவரா அல்லது கற்பனையா என்ற ஆராய்சியில் எல்லாம் நான் இறங்க போவதில்லை. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லுவேன், அது அன்றே வள்ளுவன் இவர்களுக்காய் சொன்னது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும்.

இதற்கு விளக்கம், ஒருவன் தனது நிலைமைக்குத் தகாத செயல்களை செய்வதாலும் செய்யத்தக்க செயல்களை செய்யாது விட்டாலும் கேடு அடைவான் என்பதே.

இந்த குறள் வேகம் காட்டவேண்டிய வழக்குகளில் வேகம் காட்டாது, சம்பந்தமில்லாத வழக்குகளில் காட்டும் உச்ச நீதிமன்றத்துக்கும், இடிக்க கூடாத மசூதியை இடித்து, இடிக்க வேண்டிய பாலத்தை இடிக்க விடாது இராமர் பெயரை சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் பொருந்தும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:52 AM
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அவர் பேசியது நல்ல கருத்துக்களே ஆனாலும், அவர் பேசிய விதம் தவறு என்றுதான் நான் அன்று நினைத்தேன். ஆனால் இன்று நம் மானங்கெட்ட தமிழனுக்கு மனதில் படும்படி சொல்ல‌ அவ‌ர் அதைவிட‌ க‌டுமையாக‌ பேசியிருக்க‌ வேண்டும் என்று தோன்றுகிற‌து.

நான் இதுல ரஜினி என்ற ஒரு நடிகரை குறை சொல்லவே விரும்பவில்லை. அவர் ஒரு நடிகர், அதற்கு மேல் அவரைப்பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமேயில்லை. தமிழகத்திற்கே தலமை தாங்க பல வாய்ப்புகள் வந்த போதும் மாற்றி மாற்றி குரல் மட்டும் கொடுத்துவிட்டு, தலைமை பொறுப்பு எல்லாம் எனக்கு வேண்டாம் என சென்றவர் அவர். அப்படி அவர் முடிவெடுத்தது அவரது உரிமை. மக்கள் அழைக்கின்றார்கள் என்பதற்காக அவருக்கு விருப்பமில்லாத ஒரு துறையில் அவர் நுழைய வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் அவருக்கில்லை.


அவர் நடிப்பது சம்பாதிக்கத்தானே ஒழிய வேறு எதற்கும் இல்லை. தனது தொழிலை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்திக்கொள்ள அவர் செய்வதுதான் அவ்வப்போது அவர் கொடுக்கும் குரல்கள்.

தமிழகத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று பேசியது, தமிழகத்தில் இருந்துகொண்டு, தமிழ் நடிகராக எல்லோராலும் அறியப்பட்டாலும் தமிழர் - கன்னடர் பிரச்சனைகளில் இதுவரை ஒரு உறுதியான நிலைப்பாடு ஏதும் எடுக்காமல் சொதப்பி ஏற்கனவே அவர் வாங்கியிருந்த அவப்பெயர்களை துடைத்து, நான் தமிழ்நாட்டு பக்கம்தான் என்று சொல்லிக் கொள்ள அவர் செய்த ஒரு சிறிய வியாபார உத்தி.

இப்போது கன்னடர்களிடம் மன்னிப்பு கோரியிருப்பது, தனது புதிய திரைப்படம் கர்நாடகாவில் எந்த விதமான சிக்கல்களுக்கும் ஆளாகாமல் நன்கு ஓடி பணம் குவிக்க எடுத்த நடவடிக்கை. இதுவும் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் உடையதே. அவர் எப்பவுமே தெளிவாத்தான் இருக்காரு. ஆனா நம்ம தமிழர்கள் ?????

அவர வெறும் நடிகனா பாருங்க, அவர் படம் புடிச்சிருக்கா இல்லையானு விமர்சனம் செய்யுங்க. அதவிட்டுட்டு அவர கடவுள் அளவுக்கு உயர்த்திகிட்டு, அவரப்பத்தி விமர்சனம் செஞ்சாலே அடிக்க போற அளவுக்கு வெறிபிடிச்சு அலையுறது எல்லாம் எதுக்கு ? அவரை மட்டுமல்ல எந்த நடிகனையுமே தலைவருன்னு சொல்றவன் எல்லாம் மனுசனே இல்ல. தலைவா தலைவான்னு உருகுறது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் தான். திரையில் நாம் பார்க்கும் நடிப்பை மட்டும் நம்பி எப்படி ஒருவரை நாம் தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியும்?

நேற்று தமிழகத்திற்காக ஒரு பேச்சு, இன்று கர்நாடகாவுக்காக ஒரு மன்னிப்பு. இவரைப்போயா நீங்கள் உங்களுக்கு தலைவராக அழைக்கின்றீர்கள் ?

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

ரஜினிக்கு யாராவது இந்த குறளின் அர்தத்தை சொல்லட்டும். அவரை அத்தோடு விடுங்கள். அவர் விரும்பியபடி அவரை இமயமலைக்கே போகவிடுங்கள்.

ஒரு தலைவனாக வேண்டியவணுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் இந்த குறளில் சொல்லப்பட்டுள்ளது.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.


இதில் அறிவூக்கமும் இல்லை, அஞ்சாமையும் இல்லாதவரை எதற்கு தலைவர் எனச் சொல்லவேண்டும்?

இனியும் தமிழன் ரஜினி மாயையில் இருந்து விடுபடாது போனால், சத்தியராஜ் பேசியதை விட இன்னும் கேவலமாகத்தான் நம்மை நாமே திட்டிக்கொள்ள வேண்டும். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க