Author: ஜோசப் பால்ராஜ்
•9:15 PM
என் அன்பிற்குறிய சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், இணைய நட்புகளுக்கும் வணக்கம்.

பல ஆண்டுகளாய் பதிவுலகில் இருந்து, சில பதிவுகளையும் எழுதியுள்ள நான் கடந்த 2 ஆண்டுகளாய் தொடர்ந்து எழுத இயலாமல் போய்விட்டது. எழுதினாலும் எழுதாவிட்டாலும், என் எண்ணமும், சிந்தனையும், செயலும் இந்தப் பதிவுலகத்தை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்திச்செல்வது என்பதிலேயே இருந்து வந்தது.

பல ஆண்டுகளாய் சிந்தித்ததின் விளைவாக, என்னைப் போலவே தற்போது தீவிரமாய் எழுதாமல் இருந்தாலும் பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்தியே தீர வேண்டும் என்று என்னை விட தீவிரமாய் சிந்திக்கும் நண்பர்கள இருவரை அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. அவர்களோடு தொடர்ந்து விவாதித்து எடுத்த முடிவின்படி தமிழ் பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இதோ உங்களுக்காக ஒரு புதிய வலைப்பூ திரட்டியை அறிமுகப்படுத்துகிறோம்.

தமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அந்த திரட்டி, உங்கள் www.udanz.com.

எனது பிறந்த நாள் ஆகியே நேற்றே இதை தமிழ் கூறும் நல்லுகிற்கு அற்பணிக்க வேண்டும் என எங்கள் தொழில்நுட்பக் குழு இடையறாது பணியாற்றி வந்தது. ஆனாலும் ஒரு சில தவிர்க்க இயலாத தொழில்நுட்ப காரணங்களால் இன்று தான் எங்கள் திரட்டியை உங்களுக்கு சமர்பிக்கின்றோம்.

பதிவுலக மக்கள் அனைவரும் இந்த திரட்டியை பிரபலப்படுத்தி எங்களுக்கு உங்களது நல் ஆதரவை வழங்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

குழந்தையாய் உங்களிடம் வந்து கொண்டிருக்கும் எங்கள் திரட்டியில் குறைகள் ஏதுமிருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். மேலும் ஏதேனும் புதிய வசதிகள் ஏற்படுத்தலாம் என நினைத்தாலும் அதையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

உங்கள் வாழ்த்துக்களும், கருத்துகளையும் அன்போடு எதிர் நோக்குகின்றோம்.

இப்படிக்கு,
யுடான்ஸ் குழுவினரின் சார்பாக

ஜோசப் பால்ராஜ்








































































































































உண்மையான ஓனர் வந்து நான் தான் ஓனருன்னு சொல்லுற வரைக்கும் நான் தாண்டா ஓனரு .


Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:27 PM
அனைவருக்கும் வணக்கம்,
சனி மதியம் நர்சிம்மை, நான் , டாக்டர்.புருனோ, அப்துல்லா, கேபிள் சங்கர், லக்கி, அதிஷா ஆகியோர் சந்தித்தோம்.

நர்சிம் வந்து தனது வங்கிக்கணக்கை காட்டினார்..

நாங்கள் சரிபார்த்தது 01.08.2009 முதல் 31.10.2009 வரையிலான மூன்று மாத ட்ரான்சாக்ஸன்களை மட்டுமே.
அவர் ஏற்கனவே சொன்னது தவிர வேறு எந்த ட்ரான்சாக்ஸனும் அவரது கணக்கில் இந்த மூன்று மாத காலத்தில் இல்லை.

ஆனால் சில பண டெபசிட்கள் இருந்தன, அவை தன்னுடைய சொந்த வரவு செலவுகள் என்று சொன்னார். மீனாட்சி சுந்தரம் என்ற நண்பர் அனுப்பிய 25 ஆயிரம் பணமாக அவருடைய நண்பர் மூலம் கொடுக்கப்பட்டதாக சொன்னதை ஏற்கவில்லை. கொடுத்ததுக்கான எந்த ஆதாரமும் இல்லையாதலால் மேற்கொண்டு எதுவும் பேசவும் இயலவில்லை.

பாஸ்கர் சக்தி & ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோரது பணம் 8000 ரூபாய் விடுபட்டிருந்தது . அதை என்னிடம் பணமாக கொடுத்துள்ளார். ( அந்த தொகை சிங்கை நாதன் அவர்களின் மைத்துனர் வங்கிக்கணக்கிற்கு என்னால் மாற்றப்பட்டுவிட்டது).

இந்த சந்திப்பில் உறுதிபடுத்தப்பட்டது அவரது ஐசிஐசிஐ வங்கிக்கணக்கில் 01.08.2009 முதல் 31.10.2009 வரை உள்ள மூன்று மாத காலத்தில் வேறு எந்த அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர்களும் செந்தில்நாதன் பெயருடன் நிகழவில்லை என்பதை மட்டுமே.

இதற்கு மேலும் இதை வளர்க்க வேண்டாம். இத்துடன் இதுக்கு ஒரு டாட் வைத்து முடித்துவிடலாம்.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:19 PM
கீழே இருப்பது அண்ணண் ஆதிமூலகிருஷ்ணண் அவர்களின் பதிவு.

உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை
இப்படி சொல்லிகொடுத்து அவர்களை படிப்பிலும், திறமையிலும் மட்டுமல்ல தன்னம்பிக்கையிலும் முன்னேற்ற பாடுபடும் திரு. எஸ். இராமகிருஷ்ணண் அவர்களின் இந்த சேவைக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம். நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
***********************************************

அவனுக்கு ஒரு 10 வயதிருக்கும். அவ்வளவு அழகாக இருப்பான். படிப்பில் படு சுட்டி. சோடாபுட்டி கண்களை உருட்டி விழித்து 'கெக்கெக்கெ' என்று அடக்கமுடியாமல் அவன் சிரிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனால் நடக்க இயலாது, வீல் சேரில்தான் அமர்ந்திருப்பான். பல சமயங்களில் அவனை விளையாட்டுத்திடலில் காணலாம். மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் சேரைக் கைகளால் நகர்த்தி விளையாட்டுத்திடலுக்கு வந்து பிற பிள்ளைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருப்பான்.

நான் அங்கு பணியில் சேர்ந்திருந்த சமயத்தில் ஒருநாள், அவன் வீல் சேரில் போய்க்கொண்டிருந்தான். நான் அவனை கடந்து போகும் போது, "சார் சார், கிளாஸுக்கு டைமாயிடுச்சு.. என்னை கிளாஸில் விட்டுடுங்க சார்.. ப்ளீஸ்" என்றான். நானும் அவனது வீல் சேரைத் தள்ளிக்கொண்டு வகுப்பறை நோக்கிப் போனேன். கிளாஸை அடையும் முன்பே காரிடாரில் எதிரே நிறுவனத் தலைவர் வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் நெருங்கியதும் அவர் அவனை நோக்கி சற்று கோபத்துடன், "குமரா, வாட் இஸ் திஸ்.?" என்றார்.

நான் விழித்துக்கொண்டிருக்க, குமரன் கூலாக பதிலளித்தான், "நான் வேண்டாம்னு சொன்னேன் சார். இந்த சார்தான் கேட்கலை, நானே கிளாஸ்ல விடறேன்னு சொல்லி தள்ளிக்கொண்டு வருகிறார்.". அவரது கோபம் என் மீது திரும்பியது, ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுப் போய்விட்டார். முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இந்த நிகழ்ச்சியும், அவனது குறும்பும் என்னால் மறக்கமுடியாத ஒன்று.

அங்கு பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என மாற்றத்திறன் கொண்ட பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள். நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக் குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.

அந்த அனுபவத்தை எனக்குத் தந்தது அமர் சேவா சங்கம்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்குடி கிராமத்தில் இருக்கும் இந்த 'அமர்சேவா சங்கம்' மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 30ம் தேதி மாலை 6.30க்கு சென்னை, ராணி சீதை ஹாலில் கிரேஸிமோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா' நாடக நிகழ்வு நிகழவிருக்கிறது.

என்னைக் கண்டித்த அந்நிறுவனத்தலைவர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.

அவர் உலகின் அபூர்வ உடல் பிரச்சினைகளில் ஒன்றான தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் (Paraplegic). தலையைத் தவிர உடலின் வேறு எந்த அங்கமும் வேலை செய்யாது. 1986ல் இந்தியாவின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்நிறுவனத்திலிருந்து வெளிவந்த பின்னும், இன்றும் அவரது அன்புக்கு பாத்திரமானவனாக நான் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. சங்கம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்விக்கூடம், இல்லம் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் ஈடுபட்டுவருகிறது. சங்கத்தின் நம்பகத்தன்மைக்கு நானே சாட்சி. மேல் விபரங்கள் தேவையெனில் சொல்லத் தயாராக இருக்கிறேன். இந்த இணையத்தளத்தையும் நாடலாம். https://www.amarseva.org/

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கொஞ்சம் டிக்கெட்டுகளை விற்கும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
Rs.250 - Rose - 3rd Class
Rs.500 - Jasmine - 2nd Class
Rs.1000 - Lotus - 1st Class

டிக்கெட்டுகளுக்காக மட்டுமின்றி விருப்பமிருப்பவர்கள் சிறிய, பெரிய தொகைகளை நன்கொடைகளாகவும் அனுப்பலாம். நிகழ்ச்சி நிகழ்வதால் இந்நேரத்தில் Rs. 5000க்கு மேல் அனுப்புவர்கள் 3 Lotus டிக்கெட்டுகளை பரிசாகப் பெறலாம். Rs. 10000க்கு மேல் அனுப்புபவர்கள் ஒரு விஐபி பாஸ் உட்பட மேலும் சில Lotus டிக்கெட்டுகளைப் பெறலாம். வாய்ப்பு இருப்பவர்களிடமிருந்து லட்சங்களில் நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.

நிகழ்ச்சிக்காகவோ/ அல்லது நிகழ்ச்சிக்காக அல்லாமலோ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் பணம் அனுப்பவேண்டிய வங்கி எண் : 612901093918. இது அமர்சேவாசங்கத்தின் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண்ணாகும்.

செக்/டிடியாகவும் அனுப்பலாம் (in favour of Amar Seva Sangam payable at Chennai). அவற்றை அனுப்பவேண்டிய முகவரி : Amar Seva Sangam, No. 1, First Street, Lakshmipuram, Royapettah.Chennai 600 014. Phone No. 044-28114035 24618666

மேற்கண்ட வழிகளில் பணம் அனுப்பியவர்கள் உடனே sumathi.srini@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரில் டாக்டர். சுமதியைத் தொடர்பு கொண்டு பணம் அனுப்பிய விபரங்களைக் கூறி, டிக்கெட்டுகளுக்கான முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள். மெயிலில் உங்கள் முகவரியையும் தெளிவாக குறிப்பிடுங்கள். தயவுசெய்து அந்த மெயில் அனுப்பும் போது நிர்வாக வசதிக்காக mail@amarseva.org என்ற முகவரிக்கும், தகவலுக்காக thaamiraa@gmail.com என்ற எனது முகவரிக்கும் காப்பி (CC) அனுப்ப மறக்காதீர்கள்.

அனுப்பியவர்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் ரசீதுடன் அக்.30 மாலை 4 மணி முதல் ராணிசீதை ஹாலில் நான் காத்துக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சிக்கான விருப்பமிருப்பவர்கள், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவேண்டியிருப்பதால் 25ம் தேதிக்கு முன்னர் விரைந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சிக்காக அல்லாமல் பணம் அனுப்ப விரும்புபவர்கள் காலக்கெடுவின்றி எப்போதும் அனுப்பலாம்.

நன்றி.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:03 PM
பரபரப்பாகத்தான் இருக்கிறது இந்த பதிவுலகம்.

யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என சொல்லவோ, அந்த அரசியலுக்குள் செல்லவே நான் விரும்பவில்லை. சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நபர்களிடம் நேரடியாகச் சொல்லிவிட்டேன். நண்பர்களுக்குள் ஆரம்பித்த இந்த பிரச்சனை இப்போது ஒட்டுமொத்தமாய் சுற்றி சுழன்று எல்லோராலும் கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பிரச்சனைகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்த வகையில் இதிலிருந்து நான் கற்றவையும் பெற்றவையும் .

1) பிறர் கருத்துக்களை விவாதத்தின் மூலம் யாராலும் மாற்றவே முடியாது.

வாதத் திறமையால் விவாதத்தில் வேண்டுமானால் வெற்றி பெறாலாமே ஒழிய, எந்த விவாதமும் பிறர் கொண்டுள்ள கருத்தை மாற்றிவிடாது. அவரவர் செய்வதை செவ்வனே செய்து கொண்டு தான் இருப்பார்கள். வாதத் திறன் விவாதங்களை தான் வெல்லுமே ஒழிய விவாதிப்பவரின் மனதை அல்ல.

2) எந்தப் பிரச்சனையையும் முற்றிலுமாகத் தீர்க்க இயலாது, ஒத்திப் போட வேண்டுமானால் இயலும்.
யார் இடையில் நின்று சமாதானம் செய்து வைத்தாலும், அந்த நேரத்தில் பிரச்சனையை தற்காலிகமாக தள்ளிப் போட முடியுமே ஒழிய அதை முற்றிலுமாக இல்லாதொழிக்க இயலாது

3) அடித்த ஆணிகளை வேண்டுமானால் பிடுங்கிவிடலாம், அடித்த தடம் அப்படியே தான் இருக்கும்.
சுவற்றில் அடித்த ஆணியை பிடுங்கிய பின்னும் ஆணி பதிந்து ஏற்படுத்திய தடம்
அப்படியே இருப்பதை போல தான் வார்த்தைகளும், பதிவுகளும். பதிவுகளை நீக்கலாம்
மன்னிப்பு கேட்கலாம், ஏற்படுத்திய பாதிப்புகளை அவை நீக்கிவிடுமா?

4) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

எந்தப் பிரச்சனையா இருந்தாலும் இந்தக் குறளப் படிச்சுட்டு தீர்ப்பு சொல்ல போறது
ரொம்ப நல்லது. இல்லையா சும்மா இருக்கது நல்லது.

5) நட்புக்கு இலக்கணம் காயமாற்றுதல் தானே ஒழிய, எதிர் தாக்குதலுக்கு
துணை போவதும் தூண்டுவதுமல்ல.

என் நண்பன் ஒரு தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றிருக்கின்றான் என்றால், நான் அவனது
காயத்திற்கு மருந்திட்டு, அவனை குணமாக்க தான் முதலில் முயல்வேன். அந்த தாக்குதல்
தொடர்ந்து நடைபெறாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் யோசிப்பேன்.
காயமுற்றிருக்கும் நண்பனை தூக்கிக் கொண்டு எதிர் தாக்குதலுக்கு செல்ல மாட்டேன்.
காயமுற்றிருக்கும் நண்பனாலும் தாக்குதலை திறம்பட நிகழ்த்த முடியாது.
நண்பனைச் சுமந்து கொண்டிருக்கும் என்னாலும் தாக்குதலில் முழுதாய் ஈடுபட முடியாது.
காயங்கள் ஆறியவுடன், இதெல்லாம் ஒரு தாக்குதலான்னு கூடத் தோணலாம்.
காயத்துடன் எதிர்வினை ஆற்றுதல் பாதிப்பை பலமடங்காக்குமே ஒழிய குறைக்க உதவாது.

உண்மையான நட்பு, நண்பன் தவறு செய்தாலும் ஆதரிக்கவே ஆதரிக்காது. நீ என்ன செஞ்சாலும்
சரி, நான் உன்னைய ஆதரிப்பேன் என்று சொல்வது உண்மையான நட்பு அல்லவே அல்ல.
திரி மேல் தவறே இருந்தாலும் அதே வழியில் செல்ல தன் நண்பனுக்கு உதவுவது
தான் உண்மையான நட்பென்றால், I am Sorry, I can't be a True Friend to Anybody.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
ஆனால் நடப்பவற்றை பார்க்கையில் கூடிக் கும்மாளவிடுவது மட்டுமே நட்பென்றாகிவிட்டதோ
என ஐயமுறச் செய்கின்றன
6) எல்லாப் பிரச்சனைகளிலும் எல்லோரும் கருத்து சொல்லியே
ஆகவேண்டும் என்பதில்லை
ரு பிரச்சனையென்றால் அதில் எல்லோரும் கட்டாயம் கலந்துக்கணும், கருத்து
சொல்லணும்னு எந்த நிர்பந்தமும் இல்லை. நம் சொற்கள் எரியும் தீக்கு எண்ணையாகுமா?
நீராகுமா? என உணராமல் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

7) உண்மையான நடுநிலைவாதிகள் தங்கள் மெளனத்தைத் துறப்பதில்லை.
ண்மையான நடுநிலை என்பது மிக மிக அரிதானது. அப்படி அரிதிலும் அரிதாக இருக்கும்
நடுநிலையாளர்கள் மொளனம் துறப்பதில்லை. ஆனால் நான் நடுநிலையாளன் என
பேசுபவர்கள் 0.5 சதவீதமாவது ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்தவர்களாத்தான் இருக்கின்றார்கள்.

இன்னும் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.

காற்று உள் சென்று வெளிவந்து கொண்டிருக்கும் வரை கற்றல் நிற்காது தொடரும்.

ஆனா பதிவு தான் வருமான்னு தெரியாது .

Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:33 PM
இரண்டு நாளைக்கு முன்னாடி பிரபலப் பதிவர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர் அன்பு அண்ணண் பரிசல் சிறு விபத்துக்குள்ளானார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்ப அண்ணண் நல்லாருக்கார்.

முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தியதால், இவரது காரை இவர் நிறுத்த, பின்னால் வந்தவர் மட்டும் நிறுத்தாம இவர் காருல மோதினதால இவர் தல கண்ணாடியில இடிச்சு காயமாயிருச்சு. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர்ல இதே போன்று கார் திடீரென நிறுத்தப்பட்ட போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த “அண்ணண்” அப்துல்லா காரின் முன் கண்ணாடியில் தலை மோதி காயமடைந்திருந்தார். கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பயணிச்சுருந்தா இந்த விபத்துகளை கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே. ஏன் அத யாரும் செய்ய மாட்டேங்குறீங்க? ( இதுல வெளிநாட்டுல இருந்து வர்றவய்ங்க, பழக்க தோசத்துல அந்தப் பட்டைய எடுத்து மாட்டீட்டா நம்மாளுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே, பல தடவ அனுபவிச்சுருக்கேன் நானு).

உமா சங்கர் ஐ.ஏ.எஸ் ஒரு முறை குடும்பத்தோட சென்னையில இருந்து திருச்சிக்கு கார்ல வர்றப்ப, அந்த கார் திருச்சிக்கு அருகே தலைகுப்புற கவிழுந்து பல்டியெல்லாம் அடிச்சுதாம். ஆனா அவர் மொத்த குடும்பத்துக்கும் ஒன்னுமே ஆகல, பத்திரமா வெளில வந்துருக்காங்க. காரணம் வண்டியில ஏறுனதும் எல்லாரையும் பெல்ட் போட்டே ஆகணும்னு கட்டாயமா சொல்லியிருந்தாராம் உமாசங்கர் ஐயா. இனியாவது இதை படிக்கிறவங்க, கட்டாயமா சீட் பெல்ட உபயோகப்படுத்துங்க. குறைந்தபட்சம் வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்பவர்களும், வாகனத்தை ஓட்டுபவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள்.

முன்பெல்லாம் சாலை சரியில்லாம விபத்துகள் நடந்துச்சு. இப்ப நல்ல சாலைகள் இருக்கு, ஆனா அத எப்டி உபயோகிக்கிறதுன்னு நம்மாட்களுக்கு தெரியலை.
மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையின் இடபுற தடத்தில் தான் செல்ல வேண்டும் என்பது சாலை விதி. ஆனால் இதை எவரும் கடைபிடிப்பது கிடையாது. மிக அதிகளவில் பாரமேற்றப்பட்டு செல்லும் லாரிகள், டாட் ஏஸ், மினிடோர் போன்ற வாகனங்கள் கூட சாலையின் வலது தடத்தில் தான் செல்கின்றன. இவர்களை இடதுபுறமாக மற்றவர்கள் முந்திச் செல்கின்றார்கள். அதோடு நன்றாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுபவர்களும் இன்னமும் இருக்கின்றார்கள். சாலை நன்றாக இருப்பதால் வேகமாக வாகனங்கள் செல்வதால் இது போல் குறுக்கே ஓடுபவர்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

முதலில் 4 தடமுள்ள சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டுவது, யார் யார் எந்த தடத்தில் செல்லலாம் , எப்படி முன் செல்லும் வாகனத்தை முந்துவது, எப்படி ஒளி சமிக்கைகள் குடுப்பது என்பது குறித்து கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும்.

முன் செல்லும் வாகனம் வலதுபுறம் திரும்பும் சமிக்ஞை(Right Indicator) குடுத்தால் பின்செல்லும் வாகனம் முன்செல்லும் வாகனத்தை முந்திக்கொள்ளலாம் என அர்த்தம் என எங்கள் வாகனத்தை ஓட்டியவர் சொன்னார். கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.

ஒரு வேளை என் போன்றவர்கள் வலது சமிக்ஞை போட்டுவிட்டு வலது தடத்திற்கு மாற முயற்சிக்கும் போது, பின்னால் வருபவர் முந்திக்கொள்ள அவருக்கு சமிக்ஞை கொடுத்ததாக எண்ணி வேகமாக வந்தால் கட்டாயம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை என்னவென்று சொல்வது?
மிக கடுமையான பயிற்சிகள் வாகன ஓட்டிகளுக்கு தரப்பட வேண்டும். பயிற்சியளிப்பதோடு , அதை ஒழுங்காக கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும் வேண்டும். இது போன்ற வசதிகளை மட்டும் செஞ்சுட்டு அத எப்படி ஒழுங்கா உபயோகிப்பதுன்னு தெரியாம இருக்கது, தீவிரவாதிகிட்ட இருக்க அணுகுண்டு மாதிரி மிக ஆபத்தானது.

அடுத்து இருச் சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவோர் , சிலர் கட்டாயத்தின் பேரில் தலைகவசம் அணிந்தாலும், அதில் உள்ள வாரை ஒழுங்காக மாட்டாமல் , ரொம்ப அலட்சியமா விட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஒரு வேளை கீழே விழுந்தால் அந்த அதிர்சியிலேயே தலைக்கவசம் தனியே கழண்டு விழுந்துவிடும். தலைக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது.

இதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் அக்கா மகன், 27 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது இது தான்
இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இது போல் பலர் அலட்சியமாக இருப்பதையும் காண நேரிடுகிறது. இதெல்லாம் தானா வரணும், வரலைன்னு சட்டம் போட்டாலும் இப்டி செய்யிறாங்க, உயிரோட மதிப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்ல, தனி மனிதர்களுக்கும் தெரியலை. இதப் படிக்கிற பிரபலங்கள், பெரியாட்கள் யாராச்சும் தயவு செஞ்சு இதை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்த உதவுங்கள்.

சாலைப் பாதுகாப்பு குறித்து இயற்கை மகளின் அழைப்பின் பேரில் சஞ்செய் எழுதிய பதிவில் மேலே குறிப்பிட்டிருந்ததை பின்னூட்டமாக சொல்லியிருந்தேன். சஞ்செய் கூட படிச்சாரான்னு தெரியல.

கேபிள் சங்கர் அண்ணண் கேட்டிருந்தபடி கதிர் என்ற
சிறுவனுக்கு காது கேட்கும் கருவி வாங்க உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது இந்த நல்ல காரியங்கள் எல்லாம். மூன்றே நாட்களில் மொத்த தொகையையும் திரட்ட உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும், முக்கியமா எங்க சிங்கை அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .

தம்பி கதிர் நல்லவற்றை கேட்டு, நன்கு படித்து, நல்லவனாய் வளர்ந்து, பலருக்கும் உதவ வாழ்த்துவோம்.


என்னைப் போலவே பதிவெழுதாப் பதிவராய் திறம்பட செயலாற்றி எனக்கு உற்ற துணையாய் இருந்த அண்ணண் வெண்பூ இன்னைக்கு திடீர்னு நானும் பதிவர்தாண்டான்னு சொல்லிட்டு ஜீப்ல ஏறிட்டாரு. வேற வழியே இல்லைல, அதான் இன்னைக்கு நானும் பதிவெழுதி ஜோதியில கலந்துட்டேன். மிஸ்டர். சஞ்செய், ப்ளீஸ் நோட் திஸ்.

இன்னும் ஒருத்தர் இருக்காரு, எல்லாரையும் அண்ணண் அண்ணணு கூப்புடுறதால தம்பியின் டைரிக்குறிப்புன்னு எழுதிக்கிட்டு இருந்தாரு, அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் பல பதிவுகளை நான் எழுதுவேன்னும் எச்சரிக்கிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:16 PM
வசூல்ராஜா MBBS திரைப்படத்தில் பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஒருவரை வைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். அப்போது பாடம் எடுக்கும் மருத்துவ ஆசிரியர் சொல்வார், இது போன்ற கேஸ்கள் எல்லாம் நாட்டுக்கு வேஸ்ட் அப்டின்னு.

அதே கதாப்பாத்திரத்தைப் போலவே ஒரு நபர் உண்மையாகவே இருந்தால், அதுவும் 36 ஆண்டுகளாக மும்பை King Edward Memorial Hospital (KEM)ல் உள்ள ஒரு அறையிலேயே கண்கள் தெரியாது, சுய உணர்வின்றி, ஒரு கட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்தி வருகிறார் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் மன உணர்சிகள் எப்படி இருக்கும்?

எந்த மருத்துவமனையில் தற்போது காலத்தை கடத்திவருகிறாரோ அதே மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்து மிகத் துடிப்பாக தனது பணியை செய்த Aruna Shanbaug எனும் பெண்மணி தான் அந்த கோமா நோயாளி. அவரது இந்த நிலைக்கு காரணம் என்ன தெரியுமா? நேர்மை

1973 ஆம் ஆண்டு அருணா பணியிலிருந்த வார்டில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றிய சோகன்லால் வால்மிகி என்பவன், வார்டில் செய்த திருட்டு வேலைகளை கண்டித்ததாலும், அவரைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தமையாலும் வெறி கொண்ட அந்த பொறுக்கி, அருணாவை பாலியல் பலாத்காரப்படுத்தி, நாய் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை நெரித்தமையால் அவரது மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழல்கள் நெரிக்கப்பட்டு அவரது கண் பார்வை பறிபோய், நரம்புகளில் ஏற்பட்ட கோளாறுகளால் கை, கால்கள் இழுத்து, சுய நினைவை இழந்து , தான் விரும்பிப் பணியாற்றிய மருத்துவமனையிலேயே 36 ஆண்டுகளாய், ஓரே அறைக்குள் மிக மோசமான நிலையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் அறை ஒரு நாளைக்கு 5 முறை திறக்கப்படுமாம். கூழாக்கப்பட்ட உணவுகளை அவருக்கு கொடுத்து வருகின்றார்கள். மருத்துவர்கள் இனி எதுவும் செய்ய இயலாது என கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பொறுக்கியின் மேல் திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே தொடுக்கப்பட்டு அதிலும் 6 ஆண்டுகள் சிறை தண்டணை மட்டுமே பெற்று தற்போது விடுதலையாகி வெளியில் இருக்கிறான். பாலியல் பலாத்காரத்திற்கு வழக்கு தொடுக்கப்படவில்லை. ( அப்படியே வழக்கு தொடர்ந்திருந்தாலும் 10 ஆண்டுகள் தான் தண்டணையாம்). ஒரு திருட்டு பொறுக்கிக்கு 6 ஆண்டு தான் தண்டணை. ஆனால் நேர்மையாய் இருந்த ஒரே காரணத்திற்காக அருணாவிற்கு கிடைத்தது 36 ஆண்டுகள் நரக வாழ்க்கை.

பிங்கி எனும் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதிய பின்னர் தான் அருணாவைப் பற்றியே வெளியில் தெரிந்தது. இப்போதும் அந்த எழுத்தாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் வலை உலகில் பல விவாதங்கள் சூடுபறக்கின்றன. இப்போது இங்கே விவாதிப்போம் .

வாழ்வு ஒரு தண்டணையாகும் போது மரணம் தான் விடுதலை என கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? அல்லது ஆண்டவன் கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை என்று அவரை விட்டுவிடலாமா?

என்ன தீர்ப்பு வழங்க இருக்கிறது நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றம் என தெரியவில்லை. நீங்கள் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள் என சொல்லுங்கள்.

ருச்சிகா - இவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி தான். ஆனால் இவரது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியான மாநிலத்தின் காவல் துறை தலைவராக (DGP) இருந்த S.P.S. ரத்தோர்.

1990 ஆம் ஆண்டு 14 வயதே ஆனா டென்னிஸ் வீராங்கனையான ருச்சிக்காவை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய இந்த காவல்துறை அதிகாரியின் மீது ருச்சிகா புகார் அளித்தமையால் அவரும் அவர் குடும்பமும் அடைந்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரும் அவரது சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்கள், அவரது சகோதரர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டார். குடும்பமே கடுமையான வேதனைகளை அனுபவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக 3 ஆண்டுகள் போரடி அலுத்துப் போன அந்தச் சின்னப் பெண், நமது சட்டங்களினால் எந்தப் பாதுகாப்பையும் அடைய இயலாது, எந்த பரிகாரத்தையும் பெற இயலாது, அதிகாரவர்கத்தை எதிர்த்து போரடும் வலுவிழந்து, தற்கொலை செய்து கொண்டார் என்பது உச்சகட்ட சோகம்.

1990 ஆண்டு நடந்த பாலியல் கொடுமை, 1993ல் அதிகாரவர்கத்தின் ஆணவத்தால் தற்கொலை என இந்த சம்பவங்கள் நடந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நமது கண்ணியமிக்க சட்டம் தனது கடமையை செய்து முடித்து எந்த தண்டணையுமின்றி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரத்தோருக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டணை அளித்து தீர்பளித்துள்ளது. ( அன்றே ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியில் வந்துவிட்டார் அந்த புண்ணியவான்). இத்தனைக்கும் ருச்சிக்காவின் தோழி ஒருவரது குடும்பத்தினர் தான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தப் போராடி இந்த நீதியைக் கூட பெற செய்தவர்கள். தங்கள் மகளை இழந்து, தற்போது ஊரை காலி செய்துவிட்டு வேறிடம் சென்றுவிட்டார்கள்.

தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றெல்லாம் வாய்கிழிய வக்கணையாக பேசிட்டு போறது தானே நம்ம ஊரு நீதி. 1990 ஆண்டு நடந்த கொடுமைக்கு 1993க்குள் சரியான முறையில் விசாரனை நடத்தி கடுமையான தண்டணை வழங்கப்பட்டிருந்தால் அந்த அப்பாவி பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்ட்ருக்க வேண்டியதில்லை. தயவு செய்து கோழைத்தனமாக அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டார் என யாரும் சொல்லிவிடாதீர்கள். கோழையாய் இருந்திருந்தால் 1990 ஆம் ஆண்டே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், மூன்றாண்டுகள் போராடி பல சோகங்களை அனுபவித்து இனி செய்ய எதுவுமில்லை என்ற நிலையில் தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் அந்தப் பெண்.

சிபிஐ விசாரணை நடத்திதான் இந்த 6 மாத தண்டணையையே அவருக்கு வாங்கித்தர முடிந்திருக்கின்றது. இந்த வழக்கில் ஒரு மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றம் ரத்தோர் மீது சேர்க்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டும் சேர்கப்பட வேண்டும் என கூறிய சிபிஐ அதிகாரி ரத்தோரால் மிரட்டப்பட்டு , அந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இப்ப 19 வருசம் இழுத்த இந்த வழக்கை மாடல் வழக்காக எடுத்துக்கொண்டு, மறு விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ரத்தோர், அவருக்கு உதவிய அதிகாரிகள், ருச்சிகா மற்றும் அவரது சகோதரரை பள்ளியில் இருந்து நீக்கியவர்கள், ருச்சிகாவின் சகோதரர் மீது பொய் வழக்கு போட்டு காவலில் வைத்தவர்கள் என அனைவரையும் தண்டிக்கப் போவதாக நமது மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ( எனக்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன், அவன்/அவளிடம் சொல்லி இந்த மாடல் வழக்கின் விசாரணையை ஃபாலோ அப் செய்ய சொல்ல வேண்டும், இந்த வழக்கின் முடிவை அவர்கள் கட்டாயம் பதிவாக எழுதவும் சொல்ல வேண்டும்)

ஆந்திராவுல கவர்னரா இருந்த என்.டி. திவாரி அடுத்த ஹீரோ. இவரு மேல பல பாலியல் புகார்கள் இருந்த போதிலும் எப்படி இவருக்கு போயி கவர்னர் பதவியெல்லாம் குடுத்தாங்கன்னு தெரியலை.

அருணா ஷான்பேக், ருச்சிகா இவர்களின் வாழ்வை கெடுத்தவர்களுக்கு என்ன தண்டணை சரியா இருக்கும் ? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:54 AM
தற்சமயம் பலரது பதிவுகளும் வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வலைப்பூக்களே முடக்கப்பட்டு வருவதாக தினமும் செய்திகள் வருகின்றன.

அதிலும் உண்மைத் தமிழன் அண்ணணது வலைப்பூவும், அன்புத் தங்கை தூயாவின் வலைப்பூவும் முடங்கியுள்ளதாக கேள்வியுற்று பெரிதும் அதிர்ந்தேன்.

என்னைய மாதிரி ஆளுங்கண்ணா பரவாயில்ல, பாவம் உ.த அண்ணண், அவரு எழுதுன பதிவுகளையெல்லாம் திரும்ப எழுதனும்னு நினைச்சா எவ்ளோ கஷ்டம்? அதான் என்னடா செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் . அப்ப நம்ம வால்பையன் அண்ணாச்சி ஒரு மெயில் அனுப்சாரு. பதிவுகள்ல இருக்கத பாதுகாப்பா ஒரு பிரதி எடுத்து(back up) வைச்சுக்க உதவும் மென்பொருள் பத்தி சொல்லியிருந்தாரு. அந்த மென்பொருள் exe கோப்பா இருப்பதால் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதில் சிரமம் உள்ளதென சொன்னார்.

தற்போது உங்களனைவரின் நலனுக்காக நான் அதை பொது சேமிப்பு தளமான esnips.com எனும் தளத்தில் அந்த கோப்புகளை சேமித்து வைத்துள்ளேன். தேவைப்படுவோர் அதை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்கம் செய்ய சிரமமிருப்பின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (joseph.paulraj@gmail.com) தெரியப்படுத்துங்கள்.

Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க