Author: ஜோசப் பால்ராஜ்
•10:22 PM
அன்புள்ள கோவி.அண்ணா,
இனி நீங்கள் சமூகப் பொறுப்புள்ள எந்தப் பதிவுகளையும் எழுத வேண்டாம். இனிமேல் நீங்கள் இந்த வார ஃபிகர், இந்த நாள் ஃபிகர், காலை பத்துமணி ஃபிகர், மாலை 4 மணி ஃபிகர் என நடிகைகளின் ஆபாசப் படங்களை வைத்து மட்டும் பதிவிடுங்கள்.

Britney - My Sweet Heart , Madona - My Sweet Lungs, Jenifer Lopez - My Sweet Kidney இப்படி ஏதாவது தலைப்புல நாலு வீடியோ போட்டுருங்க.

அதுவும் இல்லன்னா டரியலு , பொரியலுன்னு எதையாச்சும் எழுதுங்க.

ஏன்னா நாம எல்லாம் என்ன எழுதுனாலும் குத்தம் சொல்ல நம்ம மாப்ளைங்க கிளம்பி வந்துருவாங்க. ஈழத்தமிழர்களப்பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈரவெங்காயம், இறையாண்மைன்னு பேசுவாங்க. இப்ப நம்ம தேசத்தோட வர்தகத் தலைநகர் மேல ஒரு மோசமான, ஈனத்தனமான ஒரு தாக்குதல் நடந்துருக்கு அதப் பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈழத்தப் பத்தி பேசுவாங்க. இவங்களுக்கு உண்மையிலயே தேசியம், இறையாமைக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமா தெரியாதா?

இதுல மாப்ள சஞ்செய் சொல்றாரு, நான் கீறல் விழுந்த இசைத்தட்டப் போல சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கேனாம். நான் என் கொள்கையில உறுதியா இருக்கேன் மாப்ள. நான் என்ன அரசியல்வாதியா? அதுவும் காங்கிரஸ்காரனா என்ன? இந்த தேர்தல்ல திமுக கூட சேர்ந்து அதிமுகவ திட்டிட்டு அப்டியே அடுத்த தேர்தல்ல அதிமுக கூட சேர்ந்துகிட்டு திமுகவ திட்ற உங்க தேர்தல் கொள்கைகள் மாதிரி எனக்கு இன்னைக்கு ஒரு கொள்கை நாளைக்கு ஒரு கொள்கையெல்லாம் கிடையாதே. என்ன செய்யிறது? இதுக்கு உங்க அரசியல்ல பெயர் கீறல் விழுந்த இசைத்தட்டா? நல்லா வைக்கிறீங்களே பேரு. இதுவும் நல்லாத்தான் இருக்கு.

ஆனா எந்த ஒரு விவாதத்தையும் திசை திருப்பி பாழடிக்கிற தனித்திறமை உள்ள சஞ்செய் உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும். ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்க. அப்பத்தான் கட்சியில பொழைக்க முடியும். கத்தியும் கட்டையும் தான் சத்தியமூர்த்தி பவன் வரைக்கும் வந்துடுச்சே. காந்தி கண்டுபுடிச்ச அஹிம்சைக்கு காங்கிரஸ்ஸ தவிர வேற யாரும் இம்புட்டு மரியாதை குடுக்கலைய்யா.

ராஜிவப் பத்தி தான் பேசுவோம்னா, ஏன் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி இவங்கள விட்டுட்டீங்க? நாளைக்கே காந்தியோட பேரன் கோபலகிருஷ்ண காந்தி இப்ப மேற்கு வங்கத்துல ஆளுநரா இருக்காரே அவரு காங்கிரஸ்கு தலைவர் ஆயிட்டா அவருக்கு குல்லா போட கோட்சே சொந்தக்காரங்கள எதிர்த்து அரசியல் செய்வீங்களா?

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு. ஆனாலும் எல்லாத்தையும் பொதுவில எல்லாத்தையும் எழுத முடியாது.

சஞ்செய், மீண்டும் மீண்டும் சொல்றேன் உமக்கு இருக்கிறது கட்சி பாசம்னா, எனக்கு இருக்கிறது இனப் பாசம். நான் அரசியல்வாதியில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள்ள ஒருவன். இந்தியனுக்கு ஒன்று என்றால் எப்படி குரல் கொடுப்போமோ அதேப் போல் தமிழனுக்கு ஒன்று என்றாலும் குரல் கொடுக்க கூடியவன். இது சுய தம்பட்டம் அல்ல. என்னை புரியாமல் பல இடங்களில் பின்னூட்ட நையாண்டி செய்பவர்களுக்காக ஒரு சுய அறிமுகம். மனிதாபிமானம் இருந்தா மனுசனப் புரிஞ்சுக்கங்க. எனக்கு கட்சியும் இல்ல. ஆட்சியும் இல்ல. காங்கிரஸ் நல்லது செஞ்சா பாராட்டுவேன், தப்பு செஞ்சா திட்டுவேன். அது தான் என் அரசியல் நிலைபாடு.

என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்). Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:05 PM
தேசியம் இப்போது மிகவும் பேசப்படும் பொருளாகிவிட்டது. தேசியம் என்ற பெயரில் கும்மியடிப்பவர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தப் பதிவி தொடக்கத்திலேயே டிஸ்கிக்களை சொல்லிவிடுவது, படிப்பவர்களுக்கு என் கருத்தை புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.

டிஸ்கி: நான் தனித் தமிழ்நாட்டை ஆதரிப்பவன் இல்லை. ஆனால் தேசியம் தேசியம் என்று கும்மியடிக்கும் போலிகளை வெறுப்பவன்.

எப்போது எந்த சூழ்நிலையில் தனித்தமிழ்நாடு கோரிக்கைகள் எழுகின்றன என்றுப்பாருங்கள். உங்க வீட்ல புகுந்து உங்க அம்மாவ, அக்காவ, தங்கச்சிய பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கும் சூழலில் என்ன செய்வீர்கள்? நீங்கள் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, அவர்கள் வரும் வரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அடிவாங்கட்டும் என்று காத்திருப்பீர்களா? சொல்லுங்கள் தேசிய வாதிகளே, அப்படி நீங்கள் பொங்கியெழுந்து அவனை திருப்பி அடித்தால் உங்களை ரவுடி என்று யாரும் சொல்ல முடியுமா? ரவுடி என்பவன் யார்? தினமும் அடாவடி செய்துகொண்டு உருப்படியற்ற வேலையை செய்து பிறர் நிம்மதியை தொடர்ந்து குலைக்கும் வண்ணம் செய்பவன் தானே ரவுடி?

ஆக இந்த தேசியவாதிகள் ரவுடிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பலரை கொஞ்சம் கூட தட்டிக்கேட்டதில்லை. ஆனால் தன் இனம் அழியும் நிலையில் அதை தடுக்க குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்க கூட்டமாய் வந்து கும்மியடிப்பார்கள். தேசிய கும்மிகளே உங்களுக்கு தேசியத்தின் உண்மையாண அர்த்தம் தெரியுமா?

எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை?

ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லையில் தானே இருக்கு? ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்காக முதலில் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்து ஒகேனக்கலுக்கும் சென்றி பிரச்சனையை ஆரம்பித்தது யார்? தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தானே? அப்போது எங்க போனீர்கள் மாண்புமிகு தேசியவாதிகளே?

அதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும் இந்திய தேசியம் கசக்குய்து
இந்திய பாஸ்போர்ட் தூக்கி போட வேண்டியது தானே?


இது காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசியம் பேசும் எனது அன்பு நண்பர் என்னிடம் கூறியது. நாங்க எல்லாம் இந்திய குடியுரிமையை தூக்கி எறியனும்னு சொல்றாரு. ஏன் சொல்ல மாட்டீங்க? நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல. தேசிய கும்மிய நல்லா சத்தமா அடிக்கலாம். போலி தேசியம் பேசாமா உண்மையிலயே தேசியம் பேசுனா கடவுச்சீட்ட கடாசுடான்னு சொல்வீங்களா தோழா? நீங்க பேசுறதும், நீங்க செய்யிறதும் தான் தேசியம்னு சொன்னா அந்த தேசியம் எங்களுக்கு வேண்டாம். அதற்காக எங்கள் கடவுச்சீட்டை தூக்கி எறியச் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல எவனுக்கும் கிடையாது. இந்தியனாய் பிறந்த நான் இந்தியனாகத்தான் சாவேன். அதை மாற்ற எவனுக்கும் உரிமையில்லை.

கர்நாடகாவில் இந்தியாவின் பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட அதேத் தவறைத்தானே செய்கிறது? எங்கள் பாஸ்போர்டை மாற்றிக்கொள்ளச் சொல்லும் அன்பு நண்பரே கர்நாடகா பிரச்சனையில நீங்க தேசியம் பேசலையே ஏன்? முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல தமிழகத்துக் சாதகமா உச்ச நீதிமன்றம் தீர்பளிச்ச பின்னாடியும், அப்போ கேரளாவுல ஆட்சி நடத்துன காங்கிரஸ் அரசு முதல்வர் உம்மன் சாண்டி ஒரு சண்டி சட்டமியற்றி அதை தடுத்தப்ப உங்க தேசியம் எங்க போச்சு நண்பா? ஒரு வேளை காங்கிரஸ் எது செஞ்சாலும் சரி என்பது தான் உங்க தேசியமா?

ஏன் இப்பவும் நீங்க ஆட்சி செய்யிற மகாராஷ்டிராவுல ராஜ் தாக்கரேன்னு ஒருத்தர் வெறியாட்டம் ஆடுறாரே? அவர கைது செய்றீங்க, உடனே வெளில விடுறீங்க, ஏன் அவர தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ள போடக்கூடாது? எங்கய போச்சு உங்க தேசியம்? சும்மா பேசுன கண்ணப்பண தூக்குல போடணும்னு கூவுறீங்களே, போடுங்க வேணாம்ணு சொல்லல. ஆனா அதுக்கு முன்னாடி கீழ்கண்டவர்களுக்கு எல்லாம் தண்டணை கொடுத்துட்டு கடைசியா கண்ணப்பண் கிட்ட வாங்க.

இந்திரா சுடப்பட்ட போது சுட்டவர்கள் சீக்கியர்கள் என்பதற்காக அப்பாவி சீக்கியர்கள் பலரை கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட உங்கள் காங்கிரஸ் தலைவர்களை முதலில் தூக்கிலிடுங்கள்

ஓட்டுக்காக, தன் கட்சி பிரபலமாக வேண்டும் என்பதற்காக பாபர் மசூதியை இடிக்க காரணமாயிருந்த அத்வானி கோஷ்டியையும், அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசையும் தூக்கில் இடவேண்டாமா? அது வரை காஷ்மீரில் மட்டுமே இருந்த தீவிரவாதத்தை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவந்தது யாரு? அத்வானியின் செயலும் அதை தடுக்காத நரசிம்மராவின் ஆட்சியும் தானே? தானா செத்த நரசிம்ம ராவா விடுங்க, எல்லாத் தப்பயும் செஞ்சுட்டு இன்னமும் சுத்திக்கிட்டும் கத்திக்கிட்டும் இருக்கவங்கள என்ன செய்யப் போறீங்க மாண்புமிகு தேசிய கும்மிகளே?

நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்புகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் கர்நாடக, கேரள அரசுகளை என்ன சொய்யப் போகின்றீர்கள் தேசிய கும்மிகளே? தூக்கில் இட வேண்டாமா?

பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை தாக்கிய பால் தாக்கரேயையும், இப்போது வட இந்தியர்களை தாக்கிக் கொண்டிருக்கும் ராஜ் தாக்கரேயையும் தூக்கில் இட வேண்டாம், சிறையிலாவது அடைக்க இயலுமா உங்களால்?

மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக தன் இனம் ஈழத்தில் அழிகின்றதே என்ற வேதனையில் இப்படி இயலா நிலையில் இருக்கின்றோமே என்ற உணர்சியில் அப்படி பேசிய கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.

யூதர்கள் சட்டப்படி விபச்சாரம் செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். யேசு கிறிஸ்துவை வம்பிழுக்க ஒரு விபச்சாரியை பிடித்து அவரிடம் கொண்டுவந்து இவளை என்ன செய்யலாம் என்று கேட்ட யூதர்களுக்கு அவர் சொன்னது இது தான், “ உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”
அதைத் தான் தேசியம் பேசும் போலி கும்மிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்களுள் எவனும் தேசியத்திற்கு எதிராக எந்த குற்றமும் செய்யாதவன், ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையை கட்டிக்காத்தவன் வந்து கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:13 PM
கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...

என்ன கொடுமை குருவாயூரப்பா இது?

மேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.

ஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.

நம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.

சேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்?

கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக‌ இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க? அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.

சிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.

ஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க