Author: ஜோசப் பால்ராஜ்
•10:22 PM
அன்புள்ள கோவி.அண்ணா,
இனி நீங்கள் சமூகப் பொறுப்புள்ள எந்தப் பதிவுகளையும் எழுத வேண்டாம். இனிமேல் நீங்கள் இந்த வார ஃபிகர், இந்த நாள் ஃபிகர், காலை பத்துமணி ஃபிகர், மாலை 4 மணி ஃபிகர் என நடிகைகளின் ஆபாசப் படங்களை வைத்து மட்டும் பதிவிடுங்கள்.

Britney - My Sweet Heart , Madona - My Sweet Lungs, Jenifer Lopez - My Sweet Kidney இப்படி ஏதாவது தலைப்புல நாலு வீடியோ போட்டுருங்க.

அதுவும் இல்லன்னா டரியலு , பொரியலுன்னு எதையாச்சும் எழுதுங்க.

ஏன்னா நாம எல்லாம் என்ன எழுதுனாலும் குத்தம் சொல்ல நம்ம மாப்ளைங்க கிளம்பி வந்துருவாங்க. ஈழத்தமிழர்களப்பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈரவெங்காயம், இறையாண்மைன்னு பேசுவாங்க. இப்ப நம்ம தேசத்தோட வர்தகத் தலைநகர் மேல ஒரு மோசமான, ஈனத்தனமான ஒரு தாக்குதல் நடந்துருக்கு அதப் பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈழத்தப் பத்தி பேசுவாங்க. இவங்களுக்கு உண்மையிலயே தேசியம், இறையாமைக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமா தெரியாதா?

இதுல மாப்ள சஞ்செய் சொல்றாரு, நான் கீறல் விழுந்த இசைத்தட்டப் போல சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கேனாம். நான் என் கொள்கையில உறுதியா இருக்கேன் மாப்ள. நான் என்ன அரசியல்வாதியா? அதுவும் காங்கிரஸ்காரனா என்ன? இந்த தேர்தல்ல திமுக கூட சேர்ந்து அதிமுகவ திட்டிட்டு அப்டியே அடுத்த தேர்தல்ல அதிமுக கூட சேர்ந்துகிட்டு திமுகவ திட்ற உங்க தேர்தல் கொள்கைகள் மாதிரி எனக்கு இன்னைக்கு ஒரு கொள்கை நாளைக்கு ஒரு கொள்கையெல்லாம் கிடையாதே. என்ன செய்யிறது? இதுக்கு உங்க அரசியல்ல பெயர் கீறல் விழுந்த இசைத்தட்டா? நல்லா வைக்கிறீங்களே பேரு. இதுவும் நல்லாத்தான் இருக்கு.

ஆனா எந்த ஒரு விவாதத்தையும் திசை திருப்பி பாழடிக்கிற தனித்திறமை உள்ள சஞ்செய் உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும். ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்க. அப்பத்தான் கட்சியில பொழைக்க முடியும். கத்தியும் கட்டையும் தான் சத்தியமூர்த்தி பவன் வரைக்கும் வந்துடுச்சே. காந்தி கண்டுபுடிச்ச அஹிம்சைக்கு காங்கிரஸ்ஸ தவிர வேற யாரும் இம்புட்டு மரியாதை குடுக்கலைய்யா.

ராஜிவப் பத்தி தான் பேசுவோம்னா, ஏன் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி இவங்கள விட்டுட்டீங்க? நாளைக்கே காந்தியோட பேரன் கோபலகிருஷ்ண காந்தி இப்ப மேற்கு வங்கத்துல ஆளுநரா இருக்காரே அவரு காங்கிரஸ்கு தலைவர் ஆயிட்டா அவருக்கு குல்லா போட கோட்சே சொந்தக்காரங்கள எதிர்த்து அரசியல் செய்வீங்களா?

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு. ஆனாலும் எல்லாத்தையும் பொதுவில எல்லாத்தையும் எழுத முடியாது.

சஞ்செய், மீண்டும் மீண்டும் சொல்றேன் உமக்கு இருக்கிறது கட்சி பாசம்னா, எனக்கு இருக்கிறது இனப் பாசம். நான் அரசியல்வாதியில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள்ள ஒருவன். இந்தியனுக்கு ஒன்று என்றால் எப்படி குரல் கொடுப்போமோ அதேப் போல் தமிழனுக்கு ஒன்று என்றாலும் குரல் கொடுக்க கூடியவன். இது சுய தம்பட்டம் அல்ல. என்னை புரியாமல் பல இடங்களில் பின்னூட்ட நையாண்டி செய்பவர்களுக்காக ஒரு சுய அறிமுகம். மனிதாபிமானம் இருந்தா மனுசனப் புரிஞ்சுக்கங்க. எனக்கு கட்சியும் இல்ல. ஆட்சியும் இல்ல. காங்கிரஸ் நல்லது செஞ்சா பாராட்டுவேன், தப்பு செஞ்சா திட்டுவேன். அது தான் என் அரசியல் நிலைபாடு.

என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்). Udanz
This entry was posted on 10:22 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On Fri Nov 28, 11:12:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

//
உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும்
//
அப்ப சஞ்சய் அண்ணை கிட்ட கொஞ்சம் மரியாதையா நடந்துக்கிறனும்...
:P

 
On Fri Nov 28, 11:23:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

பாரத மாதாகி ஜே!! ஜெய் ஹுந்த்!!!

பிரிவினை பேசும் ஜோசப்புக்கு கடும் கண்டனங்கள்!!!!

 
On Fri Nov 28, 11:26:00 PM GMT+8 , வாக்காளன் said...

கான்கிரஸ் நிலமை ரொம்ப கேவலமாதான் இருக்கு..
நீங்க சொன்னது கரெக்ட்.. ஈழ விசயம் பத்தி பேசுறப்ப மட்டும் வந்துடுவாங்க கரெக்டா தேசியம் , ஜோசியம்னு..

இப்ப வேலைக்காவாது ஒரு பிரதமர் , சோக்காளி உள்துறை அமைச்சர், தேசத்துக்கு ஆபத்து , ரெண்டு பேரும் மன்மோகனும் மசுரு புடுங்கறான், பாட்டில்... வாயில அசிங்கமா வருது..,

சஞ்சய், (stanjoe) (இவரு உண்மையான ஆள் தானானு சந்தேகம் இருக்கு) எல்லாம் போய் அந்த ரெண்டு பேருகிட்ட உங்க தேசியத்த சொல்லுங்க.. தேசத்த காப்பாத்த ஏதாச்சும் செய்ய சொல்லுங்க..

 
On Fri Nov 28, 11:26:00 PM GMT+8 , Thamiz Priyan said...

ஜோசப் அண்ணே! கூலாகுங்க..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம். உங்களுக்கு தமிழ் பேசுற ஒரு குரூப் மட்டும் தான் தெரியுது... ஆனா அதே இடத்தில் அதே தமிழ் பேசுகின்ற இன்னொரு கூட்டமும் இருக்கு! ஒரு மனிதன் இரத்தம் சிந்தினா உள்ளுக்குள் ”போட்டான்ல” அப்படின்னு சிலிர்க்கும் சொல்லும் போது அதே மாதிரி இன்னொரு மனிதன் சாகும் போது கத்தவும் செய்கின்றோம். எல்லா மனுசனும் ஒன்னு தானுங்க.. எல்லாருக்கும் சிவப்பு இரத்தம் தான். கொள்கைகளை ஆதரிக்கலாம் எதிர்க்கலாம். ஆனா மனித சமூகத்தை துரோகி, கொலை பாதகன் என்று பிரித்து வைக்கிறோம்.கேட்டா பேரினவாதம்ன்னு சொல்கிறோம்.. இன்னும் நிறைய அரசியல் இருக்குங்ண்ணா

 
On Fri Nov 28, 11:27:00 PM GMT+8 , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்).//

இது சுப்பர்.....

 
On Fri Nov 28, 11:32:00 PM GMT+8 , ஜோ/Joe said...

தமிழ்நாட்டு காங்கிரஸ் காரங்களால ஒரே ஒரு நன்மை தான் ..வேட்டி கொஞ்சம் நல்லா விற்பனை ஆகுது ,அடிக்கடி கிழியிறதால.

 
On Fri Nov 28, 11:36:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//
உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும்
//


அப்ப சஞ்சய் காங்கிரசில் முக்கிய புள்ளி ஆயிட்டார்ன்னா தங்கவேல் பொறியியல் கல்லூரி குழுமத்தில தங்கபாலு ஒரு பத்து சீட்டாவது அவருக்குக் கொடுப்பார். அதுல ஏதாவது ரெண்டு மூன்று சீட்டை கேட்டு வாங்கி சில ஏழைப் பிள்ளைகளை அங்கு சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.

 
On Fri Nov 28, 11:42:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இனியன் சம்பத் காலத்துல இருந்த இளைஞர் காங்கிரஸ் இன்னும் இருக்கு என்கிறீர்களா ஜோசப்! மத்திய அமைச்சர் வாசனும், மணிசங்கர் அய்யரும் எங்கு இருக்கிறார்கள் என்று எனக்கு சொல்லுங்களேன். இன்னும் அமைச்சர்கள் தானே? ஒரு சிபாரிசுக்குதான் வேற ஒன்னும் இல்ல!

 
On Fri Nov 28, 11:55:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கீறல் விழுந்த இசைத் தட்டா? நானும் அதைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன். இந்த சுட்டியில் போய் பாருங்கள்.

http://athivettijothibharathi.blogspot.com/2008/03/blog-post_18.html

 
On Sat Nov 29, 12:04:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்).

//


இருக்குரது போதும்ணே :)))

 
On Sat Nov 29, 12:08:00 AM GMT+8 , Saminathan said...

நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்...என்னை இதுக்கு இதுல இழுக்கறீங்க..?

இப்படிக்கு
ஈரவெங்காயம்

 
On Sat Nov 29, 12:32:00 AM GMT+8 , சி தயாளன் said...

//என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்).//

இது எத்தனையாவது கோஷ்டி..?

 
On Sat Nov 29, 12:46:00 AM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது சோ.பா கோஸ்டி இல்ல.(அவர் இல்லாததை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்) ஜோ.பா. கோஸ்டி அப்படித்தானே?

 
On Sat Nov 29, 01:09:00 AM GMT+8 , ராஜ நடராஜன் said...

//சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள்ள ஒருவன்//

அழகான வார்த்தைகள்.

 
On Sat Nov 29, 01:42:00 AM GMT+8 , Anonymous said...

அண்ணே கூலாகுங்க.

 
On Sat Nov 29, 01:23:00 PM GMT+8 , Indian said...

//ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்க. அப்பத்தான் கட்சியில பொழைக்க முடியும்.//

அத விட முக்கியம் அண்டர்வேர பாதுகாக்கப் பழகிக் கொள்வது. வேட்டியைப் பாதுகாப்பதுதான் நிச்சயமில்லையே!

 
On Sat Nov 29, 03:29:00 PM GMT+8 , அத்திரி said...

தமிழ்நாட்டுல காங்கிரசு கட்சி இருக்கா என்ன?????!!!!!. சொந்த புத்தியே இல்லாத கட்சின்னா அது காங்கிரசுதான். மத்தியில என்ன சொல்லுதாங்களோ அதை திருப்பி சொல்றதுக்கு அல்லது மண்டய ஆட்டுறதுக்கு ஒரு தலைவர்.

வேற ஏதாவது நல்ல விசயமா சொல்லுங்க அண்ணாச்சி

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க