Author: ஜோசப் பால்ராஜ்
•12:21 AM
நீண்ண்ண்ட இடைவேளைக்கு மன்னிக்கவும், என்ன செய்யிறது, அலுவலக வேலைகள் ஆட்டிபடைப்பதாலும், நான் சில படிப்புகளை மேற்கொண்டதாலும் இடையில் எழுதமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
வரும் வாரத்தில் தாய்மண்ணை மிதிக்கும் அந்த பொன்வேளையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன். வெறும் 10 நாட்கள் தான் தாய்நாட்டில் இருக்க முடியும் என்றாலும், அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமிருக்கமுடியாது.
நான் தூக்கி வளர்த்த எனது அருமை மாப்பிள்ளைக்கு ( என் சகோதரியின் மகன்) புது நன்மை பெறுவிழா, மேலும் நான் தூக்கி வளர்க முடியவில்லையே என ஏங்க வைத்த எனது அருமை பென்ணியை ( என் சகோதரனின் மகன்) பார்க்க போகும் உற்சாகம், மற்றும் சென்னையில் மே 10 இரவு நடக்க போகும் எனது அருமை கல்லூரி தோழர்களுடனான சந்திப்பு இவற்றை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
ஊரிலிருந்து வந்தவுடன் மிக விரிவான ஒரு பதிவை எழுதுகின்றேன்.
பல முறை என்னை ஏன் எழுதவில்லை எனக்கேட்ட எனது அன்பு நண்பர்களுக்கு நன்றிகள். இனி மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன். Udanz
|
This entry was posted on 12:21 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On Tue Jul 01, 01:49:00 AM GMT+8 , Known Stranger said...

yekam avaloo irupin yen thai natileyea vellai seyalamay

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க