Author: ஜோசப் பால்ராஜ்
•7:34 PM
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி என்று தனது வலைக்கு தலைப்பு வைத்து எழுதும் அன்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்கள் சமீபத்தில் ஒரு பதிவெழுதியிருந்தார் ,தமிழீழம் மலர்ந்தால் - நாளை தமிழகத்தின் கதி?? என்ற அந்தப் பதிவிற்கு ஒரு விளக்கம்.

காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு போதும் ஒப்பிடவே முடியாது. இந்தியாவில் காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்துள்ள உரிமைகளும், சுதந்திரமும் மற்ற மாநிலங்களில் இருக்கும் நமக்கு இல்லை. ஆனால் ஈழத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் தமிழர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் தான் போராட்டமே ஆரம்பித்தது. இன ஒழிப்பை ஒரு அரசாங்கமே முன்னெடுத்து செய்வதால் தான் தமிழர்கள் அறவழியில் ஆரம்பித்து பலன் ஏதுமில்லாதமையால் ஆயுத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டம் என்பது ஒரு போராட்டமே அல்ல. அஹிம்சையால் எந்த பலனும் இல்லை என்பதற்கு இந்தியாவை தவிர வேறெங்கும் சென்று நாம் உதாரணம் தேட வேண்டியதுமில்லை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தமைக்கு காரணம் அஹிம்சை வழிப் போராட்டம் மட்டுமே என்று நினைத்தால் அது தவறு. 1947ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா மட்டுமா சுதந்திரம் அடைந்தது? இலங்கை, மலேசியா என ஆசியாவிலேயே பல நாடுகள் சுதந்திரம் அடைந்தனவே அந்த நாடுகளுக்கு ஏன் ஆங்கிலேயர்கள் சுதந்திரமளித்தார்கள்? அங்கெல்லாம் ஆயுதப் போராட்டத்தை எதிர்க்க முடியாமல் சுதந்திரமளித்தார்களா அல்லது அங்கும் அஹிம்சை போராட்டம் நடந்ததா?

உண்மையான காரணம் என்னவென்றால் 1945ல் நிறைவு பெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களின் அணி வெற்றியடைந்திருந்தாலும், போரினால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம். பெருமளவில் மனித வளத்தை அவர்கள் இழந்திருந்தமையால் அவர்களது காலணி நாடுகளை நிர்வகிக்க அவர்களுக்கு போதுமான மனித வளம் இல்லாமையால் அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு விடுதலை அளித்தார்கள் என்பதே உண்மை. ஒரு வேளை ஆங்கிலேயர்கள் போரில் தோல்வியடைந்து ஜப்பான், ஜெர்மனி கூட்டணி வெற்றியடைந்திருந்தால் காந்தியடிகளுக்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்தான் நம் தேசத் தந்தையாகியிருப்பார்.

ஆங்கிலேயர்கள் அல்ல அஹிம்சையை உலகிற்கு அளித்த இந்தியாவும் சேர்த்து யாரும் அதற்கு மரியாதை அளித்ததுமில்லை, அளிக்கப் போவதுமில்லை. அஹிம்சைக்கு இந்தியா மரியாதை அளிப்பதாய் இருந்தால் ஈழத்தில் உண்ணா நோன்பிருந்த திலீபனும், பூபதி அண்ணையும் இறந்திருக்க மாட்டார்களே.

காஷ்மீரில் நடப்பது அயல்நாட்டு தீவிரவாதம், அங்கு நடப்பது அந்நிய சக்திகளாலும் அவர்களது உதவியால் இயங்கும் கைகூலிகளாலும் நடத்தப்படும் தீவிரவாதம் . ஆனால் தமிழ் ஈழத்தில் நடப்பது விடுதலைப் போராட்டம். தீவிரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இருப்போர் ஈழத்தை ஆதரிக்க காரணம் சகத் தமிழன் ஈழத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்னல்களும், அவலங்களும் தான். மனிதனாய் இருப்பவர்களுக்கு இயல்பாய் இருக்கும் மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எழும் உணர்வுதான் இந்த ஆதரவு. என்ன தான் இதை அரசியல்வாதிகள் காவிரி, முல்லைப் பெரியாறு போல அரசியலாக்கினாலும், மக்கள் மனதில் இருப்பது சக தமிழனின் மேல் உள்ள அன்புதான்.

எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

ராஜிவ் கொலையையும், ஈழத் தமிழர்கள் பிரச்சனையையும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது மிகப் பெரிய மடத்தனம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தால் அது ஒரு வட்டம் போல தொடக்கமும் முடிவும் இன்றி சுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி , தங்களுக்கு மனிதாபிமானமே இல்லை என்பதை மறைக்க வேண்டுமாணால் அந்த வாதம் உதவும்.

தமிழ் ஈழம் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்கும் சில அறிவு ஜீவிகள் தங்கள் திறமையை காட்ட விழைவார்கள், தமிழ் ஈழம் மலர வேண்டும் ஆனால் புலிகள் கையில் அது இருக்க கூடாது என்பார்கள். ஈழத்தின் வரலாற்றை சற்று ஆழமாகப் படித்துப் பார்தீர்களேயானால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் புலிகளைத் தவிர மற்றக் குழுக்கள் எல்லாம் ஒன்று மறைந்துவிட்டன, அல்லது சிங்களர்களின் கைக் கூலிகள் ஆகிவிட்டன. ( உதாரணம்: டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்). புலிகளைத் தவிர வேறு எந்தக் குழுவும் இன்று வரை தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. எனவே ஈழமக்களும் புலிகளைத் தவிர வேறு யாரையும் ஆதரிப்பதில்லை. இது தான் உண்மை.

//இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே புலிகளைக்கு ஆதரவாக மக்களும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் புலிகள் என்றால் அது ராஜீவை கொலை செய்த இயக்கம் என்ற அளவிலே மட்டும் மக்கள் அவர்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.//

மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இங்கு நடப்பதென்ன?
நடிகர்கள் போராட போனால் அதிலும் இரண்டு கட்சி, அங்கும் அரசியல். அரசியல் கட்சிகள் போராடினாலும் எதிர்கட்சித் தனியாக போராடும், ஆளும் கட்சி தனியாக போராடும். இவர்கள் போராட்டத்திற்கிடையே ஒருவரை ஒருவர் தாக்குவார்கள். ஆகா இந்த போராட்டங்களைக் கூட அரசியலாக்கத்தான் முயல்கிறார்களே தவிர உண்மையாண போராட்டம் எங்கு நடக்கின்றது?

ஈழத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கன்னடர்களாய் இருந்திருந்தால் இன்னேரம் தனி ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எந்த பிரச்சனையிலும் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ ஆனால் மொத்த மாநிலமும் ஒற்றுமையாய் போராடுவார்கள். ஆளும்கட்சி, எதிர்கட்சியெல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஓரணியாய் நின்று போராடுவார்கள். அந்த ஒற்றுமை நம்மிடையே இல்லை. இங்கு எந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலாவது எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை பேசியிருக்கின்றார்களா?

இந்தப் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய அளவில் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து அவர்களை ஈழத்துக்கு அனுப்பி அங்குள்ள நிலையை நேரில் கண்டறிந்து வரச் செய்ய வேண்டும். அவர்களுடன் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் குழுவையும் அனுப்ப வேண்டும். இவர்கள் மூலம் உண்மை உலகுக்கு தெரியவரும். தமிழர்கள் படும் அவலங்கள் வெளிவரும். அவ‌ர்க‌ள் நேரில் க‌ண்டுவ‌ரும் அவ‌ல‌ங்க‌ளை பாராளும‌ன்ற‌த்தை கூட்டி விவாதிக்க‌ வேண்டும். இது தான் பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சான‌ இந்தியா செய்ய‌ வேண்டியது.

இதுக்கு மேல அவதிப்பட ஒன்னுமேயில்லங்கிற நிலையில இருக்க மனுசனுங்களுக்கு உதவுங்கன்னு சொன்னா, இன்னைக்கு இவனுக்கு உதவுனா நாளைக்கு நமக்கு பிரச்சனைவரும் அது இதுன்னு போகாத ஊருக்கு வழி தேடிகிட்டு நிக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்?
இல்ல‌ இல்ல‌ என்ன‌ தான் இருந்தாலும் ராஜீவ் காந்திய‌ கொன்ன‌வ‌ங்க‌ளுக்கு உத‌வ‌ கூடாதுன்னு சொன்னா உங்க‌ளையெல்லாம் ஒன்னும் செய்ய‌ முடியாது. ஆசிப் அண்ணாச்சி பாணியில சொல்ல‌ணும்னா, நீங்க‌ ம‌ட்டும் ந‌ல்லா இருங்க‌டே...
Udanz
This entry was posted on 7:34 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On Thu Oct 23, 09:07:00 PM GMT+8 , கபீஷ் said...

சபாஷ் சரியான பதில்!

 
On Thu Oct 23, 09:58:00 PM GMT+8 , Anonymous said...

Arumai.
Amaithipadai seitha attuliyangalukku, rajiv than poruppu. appadi parthal rajivum oru thiviravathi. Rajiv namba vaithu muthukil kuthiyavar. Avarathu annai Indira, eelam poratathirkku udavi seithar. Avarin kopathai intha video vil parungal. Avarin unmaiyana kelvikalai kavaniungal. http://sinnakuddy1.blogspot.com/2008/10/1971.html

 
On Thu Oct 23, 10:42:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஜோசப் அண்ணே!

ராஜீவை யார் கொன்றது என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகம் உள்ளது.காரணம் புலிகள் தங்களின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உடனடியாகப் பொறுப்பேற்பார்கள்.ஆனால் ராஜீவ் விஷயத்தில் இன்றுவரை புலிகள் பொறுப்பேற்கவில்லை. விஞ்ஞான வளர்ச்சியில் ராஜீவை சென்ற வேகத்தைக் கண்டு அஞ்சிய உலக ஆதிக்க சக்தி இக்காரியத்தைச் செய்து செய்து இருக்கலாம். நாங்கள் இல்லை என்று புலிகள் சொல்லும் பட்சத்தில் அவர்களது விடுதலை ஆதிக்க சக்திகளால் அறவே தடைப்பட்டுப் போய்விடும் என்ற காரணத்தால் புலிகள் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ சொல்லாமல் மவுனம் காக்கின்றனர் என்பது என் யூகம். இதைச் சொல்வதனால் என்னை புலிகலின் ஆதரவாளர் என்ற நம்பிக்கைக்கு நீங்கள் வர வேண்டாம். மலையகத் தமிழர்களையும், இஸ்லாமியத் தமிழர்களையும் தமிழர்களாய் கணக்கில் கொள்ளாத புலிகளின் மேல் எனக்கு ஈடுபாடு அறவே இல்லை. நான் எதார்த்தத்தைச் சொல்லுகிறேன். ஆனால் எம் தமிழ் இனம் படும் இன்னல்களைக் கண்டு இரத்தக் கண்ணீர் தான் வருகிறது எனக்கு :(

 
On Fri Oct 24, 12:54:00 AM GMT+8 , நசரேயன் said...

சரியான பதில். அருமையா சொல்லி இருக்கீங்க

 
On Fri Oct 24, 05:34:00 AM GMT+8 , Anonymous said...

நல்ல பதிவு ஜோண்ணா...

 
On Fri Oct 24, 07:07:00 AM GMT+8 , Anonymous said...

இந்தியாவின் நலனுக்காக ஈழத்தில் தமிழர்கள் அமைதியடைந்திடக் கூடாது என்பவர்களை காலனித்துவவாதிகளாகத் தான் காண முடிகிறது

 
On Fri Oct 24, 08:57:00 PM GMT+8 , சீனு said...

//எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.//

இதைப்படித்தாலும் அவருடைய வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

//மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள்.//

அதே தாங்க. ஆனால், அவர்களுக்கு பிரச்சினையை நாம் புரியவைக்கவில்லை என்பது தான் என் ஆதங்கம்.

நான் எதிர்பார்ப்பது, இந்த முறையும் ஒரு 40 ஆயிரம் சிங்களர்கள் புலிகளிடம் சிக்கி, அவர்களை விடுவிக்க இந்தியாவின் உதவியை கேட்டு மன்மோகனிடம் வரவேண்டும். எதால் அடிக்க வேண்டும் மன்மோகனை என்று நாம் யோசிக்க வேண்டும்.

 
On Fri Oct 24, 08:58:00 PM GMT+8 , சீனு said...

//எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.//

இதைப்படித்தாலும் அவருடைய வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

//மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள்.//

அதே தாங்க. ஆனால், அவர்களுக்கு பிரச்சினையை நாம் புரியவைக்கவில்லை என்பது தான் என் ஆதங்கம்.

நான் எதிர்பார்ப்பது, இந்த முறையும் ஒரு 40 ஆயிரம் சிங்களர்கள் புலிகளிடம் சிக்கி, அவர்களை விடுவிக்க இந்தியாவின் உதவியை கேட்டு மன்மோகனிடம் வரவேண்டும். எதால் அடிக்க வேண்டும் மன்மோகனை என்று நாம் யோசிக்க வேண்டும்.

 
On Fri Oct 24, 09:47:00 PM GMT+8 , குட்டிபிசாசு said...

நல்ல விளக்கம்! மற்ற மாநிலத்தவர்கள் ஈழத்தைப் புரிந்துகொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் தமிழர்கள் புரிந்துகொண்டார்களா என்பதே சந்தேகம் தான். ஆதலால் தான் நீங்கள் இப்படி ஒரு பதிவை வேண்டி வந்துள்ளது.

 
On Sun Oct 26, 05:27:00 PM GMT+8 , Known Stranger said...

good. i read the link you mentioned in the post as well. nice post by you. eppothum paul pechula oru thelivu irukum. athu iruku. un karthu thavara rightangra pechu ellama un karuthula thelivu iruku atha support panra vathangalum correcta iruku.

 
On Sun Oct 26, 06:42:00 PM GMT+8 , ☀நான் ஆதவன்☀ said...

சரியான நேரத்தில் வந்திருக்கிறது இந்த பதிவு... நன்றி ஜோசப்

 
On Sun Oct 26, 06:59:00 PM GMT+8 , Known Stranger said...

ena paul blogla cinema cinema mathiri oru tagging on ezhaatha pathi onu oduthu nee inum tag agaleya. ??

this is the link

http://thooya.blogspot.com/2008/10/blog-post_2581.html

 
On Fri Oct 31, 07:21:00 PM GMT+8 , அகில் said...

It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.

It seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!

He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.

Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!

He is a filthy RAT!

akil
akilpreacher.blogspot.com

 
On Sun Nov 02, 12:50:00 AM GMT+8 , Sathis Kumar said...

அருமையான விளக்கக் கட்டுரை..

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க