Author: ஜோசப் பால்ராஜ்
•7:58 PM
சிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.


அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.




வலையுலகம் வெறும் மாய உலகமல்ல என நிருபிக்கும் இந்த மாபெரும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். தொடர்ந்து போராடுவோம். நம் உதவிகளாலும் , ப்ரார்தனைகளாலும் செந்தில் நாதன் அண்ணணை மீட்டெடுப்போம். Udanz
This entry was posted on 7:58 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

31 comments:

On Thu Aug 20, 09:10:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

நாளுக்கு நாள் நம்பிக்கை கூடுகிறது..மகிழ்ச்சி

 
On Thu Aug 20, 09:10:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

கூட்டுப்பிரார்த்தனை என்பதை அனைவரும் பொதுவாய் ஒரே நேரத்தில் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்..

 
On Thu Aug 20, 09:27:00 PM GMT+8 , சந்தனமுல்லை said...

தகவலுக்கு நன்றி! எல்லோருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானத்திற்கு நன்றி!!

 
On Thu Aug 20, 09:31:00 PM GMT+8 , T.V.ராதாகிருஷ்ணன் said...

மகிழ்ச்சி

 
On Thu Aug 20, 09:33:00 PM GMT+8 , நிகழ்காலத்தில்... said...

நம்பிக்கையான தகவலுக்கு நன்றிகள் பல

மனமார வாழ்த்துகிறேன்

 
On Thu Aug 20, 09:34:00 PM GMT+8 , Anonymous said...

kandippa prayer pannuvom

 
On Thu Aug 20, 09:35:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

பலரை சென்றடையும் வகையில் பதிவை போட்டதற்கு நன்றி.இன்று மாலை போய் பார்த்துவிட்டு வந்தேன்.உடல் சிறிது எடை இழந்துள்ளதை கை காண்பித்தது.பேச முடியாவிட்டாலும் அதிகம் பேச முயற்சிக்கிறார்.
எல்லாம் நல்ல படியாக முடிய எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்புரியட்டும்.
எல்லா உதவிகளையும் பார்த்து மனம் நெகிழ்ந்து அனைவருக்கும் தன் நன்றியை தெரிவிக்கச்சொன்னார்.

 
On Thu Aug 20, 09:48:00 PM GMT+8 , வால்பையன் said...

விரைவில் நண்பர் குணமடைவார்.

 
On Thu Aug 20, 10:03:00 PM GMT+8 , சி தயாளன் said...

நம்பிக்கை தரும் தகவலுக்கு நன்றிகள்...செந்தில் நாதன் அண்ணை மீண்டு வருவார்...

 
On Thu Aug 20, 10:09:00 PM GMT+8 , துளசி கோபால் said...

எல்லாம் நல்லபடியாக முடியும்.

நம் பிரார்த்தனைகள் வீணாகாது.

 
On Thu Aug 20, 10:23:00 PM GMT+8 , சி.கருணாகரசு said...

நம்பிக்கையான தகவலுக்கு நன்றிங்க.

 
On Thu Aug 20, 10:24:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

செந்தில் நாதன் அண்ணை மீண்டு வருவார்...

 
On Thu Aug 20, 10:34:00 PM GMT+8 , நிஜமா நல்லவன் said...

தகவலுக்கு நன்றி ஜோசப்! செந்தில் நாதன் நலமுடன் திரும்ப பிரார்த்தனைகள்!

 
On Thu Aug 20, 10:34:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இலக்கின் முன்னேற்ற அறிவிப்புக்கு நன்றி!

நம்பிக்கையோடு இருக்கிறோம்!

நண்பர் நலம் பெறுவார்!

 
On Thu Aug 20, 11:18:00 PM GMT+8 , cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

சிறு துளி பெரு வெள்ளமாக மாற ஆர்மபித்திருக்கிறது - பெரு மழை ஒன்று பொழிய இறைவனின் அருள் உண்டு - நண்பர் விரைவினில் பூரண நலம் பெற்று பணிக்குத் திரும்புவார் - பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

 
On Thu Aug 20, 11:36:00 PM GMT+8 , Thamiz Priyan said...

எல்லாம் நல்லபடியாக முடியும்.

நம் பிரார்த்தனைகள் வீணாகாது.

 
On Fri Aug 21, 01:21:00 AM GMT+8 , சுரேகா.. said...

PRAYERS ALWAYS WINS!

LET US GET OUR NATHAN BACK !

 
On Fri Aug 21, 01:22:00 AM GMT+8 , Thamira said...

நாதன் மீண்டு வர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தொடர்ந்து பலரையும் விபரங்கள் சென்றடையவும், உதவிகள் பெற்றிடவும் தொடர்ந்து குன்றாத முயற்சியுடன் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் வார்த்தைகளில் விவரிக்க இயலாத நன்றிகள், வாழ்த்துகள்.!

நாதன் மீண்டு வரும் வரையில் இந்த ஊக்கம், உழைப்பு குறைந்துவிடலாகாது. தொடர்ந்து இயங்குவோம்.

 
On Fri Aug 21, 02:03:00 AM GMT+8 , Anbu R said...

செந்தில் நாதன் நலமுடன் திரும்ப பிரார்த்தனைகள்!

 
On Fri Aug 21, 08:09:00 AM GMT+8 , அப்பாவி முரு said...

நம்பிக்கை தரும் தகவலுக்கு நன்றிகள்...செந்தில் நாதன் அண்ணை மீண்டு வருவார்...

 
On Fri Aug 21, 08:30:00 AM GMT+8 , ஆ.ஞானசேகரன் said...

செந்தில் நாதன் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகள் பல.....

அதேபோல உதவிகள் செய்யும் அன்புகரங்களுக்கும் நெஞ்சார்த நன்றிகள் சிங்கை பதிவர் குழுமம் சார்பாக...

 
On Fri Aug 21, 09:10:00 AM GMT+8 , geevanathy said...

எல்லாம் நல்லபடியாக முடியும்.

நம் பிரார்த்தனைகள் வீணாகாது.

 
On Fri Aug 21, 10:19:00 AM GMT+8 , கானா பிரபா said...

நண்பன் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

 
On Fri Aug 21, 10:42:00 AM GMT+8 , Radhiga said...

We pray for his recovery .
I'm very happy to see that, singapore friends have contribute huge amount.

 
On Fri Aug 21, 10:51:00 AM GMT+8 , நட்புடன் ஜமால் said...

யமது பிரார்த்தனைகள் தொடரும்

நண்பர் மீண்டு வந்துவிடுவார்

அவருக்கு உதவிட ஏக இறைவன் நமக்கு உதவட்டும்.

 
On Fri Aug 21, 11:07:00 AM GMT+8 , Anonymous said...

செந்தில்நாதன் நலமுடன் மீண்டு நிச்சயம் வருவார்.

 
On Fri Aug 21, 11:45:00 AM GMT+8 , எம்.எம்.அப்துல்லா said...

கண்ணாடி மாமாவுக்கு ஓன்னும் ஆகாதுன்னு என் மகள் சொன்னதை நாதன் அண்ணனை நேரில் பார்க்கும்போது சொல்லுங்கள்.

 
On Fri Aug 21, 04:30:00 PM GMT+8 , josebenedict said...

எல்லாம் நல்லபடியாக நடக்கும் .

நல்ல உள்ளங்களின் எதிர்பார்ப்பும் வாழ்த்துகளும் வீண்போகாது . பதிவர் சந்திப்பின் போது நமக்கெல்லாம் , வழக்கம்போல அவர் கையாலே அல்வா வழங்குவார் .

 
On Fri Aug 21, 08:33:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

//On Fri Aug 21, 11:45:00 AM SGT , எம்.எம்.அப்துல்லா said...
கண்ணாடி மாமாவுக்கு ஓன்னும் ஆகாதுன்னு என் மகள் சொன்னதை நாதன் அண்ணனை நேரில் பார்க்கும்போது சொல்லுங்கள்//


கடவுளின் வார்த்தைகள்

 
On Fri Aug 21, 09:42:00 PM GMT+8 , குடுகுடுப்பை said...

நல்ல காலம் பொறக்குது

 
On Fri Aug 21, 09:54:00 PM GMT+8 , உண்மைத்தமிழன் said...

நம்முடைய அப்பழுக்கில்லாத முயற்சிக்கு முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும்..

செந்தில்நாதன் நிச்சயம் வீடு திரும்புவார்..!

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க