Author: ஜோசப் பால்ராஜ்
•7:53 PM
இன்று மாலை சிங்கை மூத்தப்பதிவர் திரு.கோவி.கண்ணண் அவர்கள் இளம் பதிவராகிய என்னை சந்திக்க வந்தார்.

எனது இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடந்த இச்சந்திப்பில் சிங்கை பதிவர்களை குறித்தும், தமிழ் வலைப்பூ உலகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், இந்த சிக்கல்களில் எல்லாம் சிக்காமல் எப்படி எழுதுவது என்பது குறித்தெல்லாம் பல ஆலோசனைகளை எனக்கு வழங்கி உதவினார்.

மேலும் சிங்கையில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் அன்று ந‌டைபெற‌ உள்ள‌ மாபெரும் சிங்கை ப‌திவ‌ர் ச‌ந்திப்பைக் குறித்தும் நாங்க‌ள் பேசினோம். மிக‌ உப‌யோக‌மான‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை குறித்து பேசிய‌ அந்த‌ ச‌ந்திப்பு சிற்றுண்டியுட‌னும், தேநீருட‌னும் முடிந்த‌து.

என்ன‌டா குசும்ப‌ண‌ க‌ண்டிக்கிறேன்னு த‌லைப்பு வைச்சிட்டு அண்ண‌ண் கோவி.க‌ண்ண‌ணுட‌ன் ந‌ட‌ந்த‌ ச‌ந்திப்பை ப‌ற்றி எழுதுறானேனு நினைக்கலாம்.

நானும், ந‌ண்ப‌ர் குசும்ப‌ணும் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ முதுக‌லை ப‌டிப்பில் ஒரே வ‌குப்பில் ப‌டித்த‌வ‌ர்க‌ள், நீண்ட‌ நாள் ந‌ண்ப‌ர்க‌ள் என்பதால் கோவி.க‌ அண்ண‌ணுட‌ன் ச‌ந்திப்பு குறித்து வ‌லையுரையாட‌லில் தெரிவித்த‌ போது, நீங்க‌ என்ன‌ பேசிக்கிட்டீங்க‌ன்னு கேட்ட‌தால‌ சில‌ விவ‌ர‌ங்க‌ள‌ அவ‌ருகிட்ட‌ சொல்லிகிட்டு இருந்தேன்.

அதற்கு மேல் எங்களிடையே நடந்த உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

நான் : வர இருக்கும் சிங்கை பதிவர்கள் சந்திப்பு பத்தி பேசுனோம்.
குசும்பண் : ஏதும் திட்டம் தீட்டி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறீங்களா?
நான் : அது எல்லாம், ரகசிய திட்டங்கள். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.
குசும்பண் : அட இப்படி வேற இருக்கா?
நான் : ஹி, ஹி, ஹி
குசும்பண் : ஒரு வேளை குசும்பனை சிங்கபூர் வரவெச்சு விழா எடுக்கபோறீங்களோ?

தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எதற்காக குசும்பணை சிங்கப்பூர் வரவழைத்து விழா எடுக்க வேண்டும்?

இப்படி ஒரு தப்பான நினைவில் இருக்கும் குசும்பணை , தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இருக்கும் தமிழ் வலை பதிவர்களும், வாசகர்களும் தங்களது கடுமையான கண்டணங்களை தெரிவித்து அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவிற்கான காரணங்கள்:
1) ரொம்ப சீரியஸான பதிவர் என்று எனக்கு பட்டமளித்த அண்ணண் அப்துல்லாவின் கருத்தை உடைத்து, என்னால் மொக்கை பதிவும் எழுதமுடியும் எனக்காட்டுவது.

2) நானும், அண்ணண் கோவி.கண்ணணும் சந்திச்சதை வேற எப்படி எல்லார்கிட்டயும் சொல்லுறது ???

3) எல்லாரையும் குசும்பு பண்ணும் குசும்பணையே குசும்பு பண்ணுவது.

4) கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை.... Udanz
This entry was posted on 7:53 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

33 comments:

On Sun Jul 20, 09:20:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

குசும்பனை நானும் கண்டிக்கிறேன்...

குசும்பன், குசும்பண் ஆனதில் எதாவது உள்குத்து?

 
On Sun Jul 20, 09:28:00 PM GMT+8 , கையேடு said...

:)

 
On Sun Jul 20, 09:28:00 PM GMT+8 , குசும்பன் said...

//இந்த பதிவிற்கான காரணங்கள்:
1) ரொம்ப சீரியஸான பதிவர் என்று எனக்கு பட்டமளித்த அண்ணண் அப்துல்லாவின் கருத்தை உடைத்து, என்னால் மொக்கை பதிவும் எழுதமுடியும் எனக்காட்டுவது.

2) நானும், அண்ணண் கோவி.கண்ணணும் சந்திச்சதை வேற எப்படி எல்லார்கிட்டயும் சொல்லுறது ???

3) எல்லாரையும் குசும்பு பண்ணும் குசும்பணையே குசும்பு பண்ணுவது.

4) கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை.... //

அருமையான நான்கு காரணங்கள் இருப்பதால் இது மொக்கையாக ஏற்றுக்கொள்ளபடாது.

 
On Sun Jul 20, 09:32:00 PM GMT+8 , குசும்பன் said...

ஐயா நீங்கள் போலியிடம் சாட்டி இருக்கிறீர்கள்...

///குசும்பண் : ஏதும் திட்டம் தீட்டி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறீங்களா?//

நான் குசும்பன்:))

இதைவிட இது போலி குசும்பன் தான் என்று சொல்ல

//நானும், ந‌ண்ப‌ர் குசும்ப‌ணும் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ முதுக‌லை ப‌டிப்பில் ஒரே வ‌குப்பில் ப‌டித்த‌வ‌ர்க‌ள், ///

வலுவான காரணம் என்று யாராவது நான் முதுகலை படிப்பில் படிச்சேன் என்று அவர் சொல்வது என்று யாராவது சொன்னீங்க உங்க உசுறு உங்களுக்கு சொந்தம் இல்லை...
நம்புங்கப்பா நானும் படிச்சேன் நானும் படிச்சேன் நானும் படிச்சேன்...

 
On Sun Jul 20, 09:50:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நானும், அண்ணன் கோவி.க வும், வெணிலா பண் சாப்பிட்டோம், அதன் விளைவு தான், குசும்பன் குசும்பண் ஆனது.

 
On Sun Jul 20, 10:21:00 PM GMT+8 , rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................இதுக்குப் பேருதான் மொக்கையா??????????

 
On Sun Jul 20, 10:41:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

ஆஹா! மொக்கைப் பதிவா.. இதோ வந்துட்டேன்.. வந்துட்டேன்!

 
On Sun Jul 20, 10:43:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

ஆஹா! மொக்கைப் பதிவா.. இதோ வந்துட்டேன்.. வந்துட்டேன்!

 
On Sun Jul 20, 10:49:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//இந்த பதிவிற்கான காரணங்கள்:
1) ரொம்ப சீரியஸான பதிவர் என்று எனக்கு பட்டமளித்த அண்ணண் அப்துல்லாவின் கருத்தை உடைத்து, என்னால் மொக்கை பதிவும் எழுதமுடியும் எனக்காட்டுவது.//

அதப்பத்தியெல்லாம் நீங்க கவலைப்படவே கூடாது.. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பதிவைப் போட்டுக்கொண்டே இருங்கள். மொக்கை நமது பிறப்புரிமை! கொத்தற குழவில மொக்கை இருக்கு, கத்தற குயில்ல மொக்கை இருக்கு, இதோ இந்தப் பதிவை மதிச்சு வந்து பின்னூட்டம் போட்ட ஜெகதீசன்கிட்ட மொக்கை இருக்கு, கையேடுகிட்ட மொக்கை இருக்கு, நீங்க சந்திச்ச கண்ணன் சார்கிட்ட மொக்கை இருக்கு, அதே மாதிரி உங்களுக்குள்ளும் மொக்கை புதைந்துள்ளது. அதை வெளிக்கொணர நானும் என்னாலான தியாகத்தைச் செய்வேனென உறுதி கூறுகிறேன்!

 
On Sun Jul 20, 10:53:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை//

அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. நம்மகிட்ட ஐடியா கேளுங்க!!

இத வெச்சே ஒரு பதிவை கூடிய சீக்கிரம் போடறேன் பாருங்க!

 
On Sun Jul 20, 10:55:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

உண்மையைச் சொல்லப் போனால், வலையுலகின் குழு(கோஷ்டி) அரசியல் பற்றி உங்களிடம் நான் பேசவே இல்லை. இப்பொழுதுதான் வலையுலகில் காலடி எடுத்து வச்சிருக்கிங்க. வலை அரசிலைப் பற்றிப் பேசினால் அப்படியே பதிவை மூடிவிட்டு ஓடிடுவிங்க. உங்களைச் சந்தித்தப் ஓது நாம வலையுலகைப் பற்றி பேசவே இல்லை.


அவ்வப்போது கொஞ்ச கொஞ்சமாக சிறுகுறிப்பாக (டிப்ஸ்) தருகிறேன்.
:)

உங்களை உங்கள் நண்பர்களுடன் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

 
On Sun Jul 20, 11:12:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

:)

 
On Mon Jul 21, 12:45:00 AM GMT+8 , வெண்பூ said...

//கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல,//

ஹி..ஹி.. அப்ப நாங்க எல்லாம் எதாவது விசயம் கிடைச்சாத்தான் பதிவு போடுறோம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? இதிலிருந்தே இவர் மற்ற பதிவர்களின் பதிவுகளை சரியாக படிப்பதில்லை என்று உறுதியாகிறது. எனவே இவரது இடுகைகளுக்கு *** போடுமாறு தமிழ்மணத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

 
On Mon Jul 21, 02:57:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

பேபி அப்துல்லா : அப்பா!வேணாப்பா..உங்களுக்கு எதுவுமே எழுத வராது.அப்படி இருக்கையில ஏதோ சீரியசா பதிவு போடுறேன்னு வேற கிளம்புறீங்களே..வேணாம்பா விட்டுடுங்கப்பா.

அப்துல்லா: கருத்து சொல்லி வர்றவங்கள மண்டை காயவக்க வேண்டாண்னு கண்டதயும் எழுதி மொக்க போட்டுக்கிட்டு இருந்த என் மனச மாத்தி என்னையும் சீரியசா எழுத தூண்டிருக்காரு பாரு..அந்தாள நிறுத்தச் சொல்லு நா நிறுத்துறேன்.

பேபி அப்துல்லா : யாருப்பா?

அப்துல்லா : பின்னூட்டத்த பத்தி எல்லாம் கவலை இல்லாம படிக்க வர்றவுங்க சிந்திச்சா போதும்னு ஒழுங்கா பதிவு போட்டுக்குட்டு இருந்து இப்ப கெட்டு போய் மொக்க போட ஆரமிச்சு இருக்கான் பாரு உன் மாமா ஜோசப் பால்ராஜீ..அந்தாள மொக்க போடுறத நிறுத்தச் சொல்லு...நா சீரியசா எழுத போறத நிறுத்திக்கிறேன்.

(சிங்க‌ப்பூர் சீமையில‌
காரோடும் வீதியில‌
மார‌னேரி பால்ராச‌
யார் கெடுத்தாரோ
யார் கெடுத்தாரோ)

 
On Mon Jul 21, 03:00:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

குசும்பன் said...
ஐயா நீங்கள் போலியிடம் சாட்டி இருக்கிறீர்கள்...

///குசும்பண் : ஏதும் திட்டம் தீட்டி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறீங்களா?//

நான் குசும்பன்:))//


என்னா....து? போலி குசும்ப‌னா? குசும்ப‌ன் அண்ணே அப்போ நீங்க‌ மிக‌ மூத்த‌ ப‌திவ‌ர் ஆயிட்டீங்க‌.வாழ்த்துக‌ள் அண்ணே.

 
On Mon Jul 21, 03:27:00 AM GMT+8 , Anonymous said...

குசும்பனை நானும் கண்ணடிக்கிறேன்!!!

இப்படிக்கு
அபிஅப்பா

 
On Mon Jul 21, 10:01:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

//4) கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை.... //

என்னை சந்தித்ததைத் தான் மகிழ்வோடு எழுதுகிறீர்கள் என்று நான் புலகாங்கிதம் மடைந்துவிட்டேன். அப்ப நான் ஊறுகாய் தானா ?

நம்பிக்கை மோசடி !
:)))

 
On Mon Jul 21, 10:30:00 AM GMT+8 , Jackiesekar said...

என்யா நீ மொக்க போட நாங்கதான் கிடைச்சமா?

 
On Mon Jul 21, 11:37:00 AM GMT+8 , cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

குசும்பனை(ணை)க் கண்டிப்பதில் நானும் தங்களுக்குக் கை கொடுக்கிறேன். காரணம் - யாருக்குத் தெரியும் - குசும்பனைக் கண்(ண)டிக்கனும்னா சேந்துட வேண்டியது தானே ! என்னா நான் சொல்றது

இருந்தாலும் கோவி கண்ணனை ஊறுகாயா பயன் படுத்தி இருக்க வேண்டாம்

 
On Mon Jul 21, 12:58:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

பின்னூட்ட‌ம் இட்டு ஆத‌ர‌வ‌ளித்த‌வ‌ர்க‌ளுக்கும், குசும்ப‌னை க‌ண்டிப்ப‌தில் என்னோடு இணைந்த‌வ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி.

என்னைவிட‌ ப‌ல‌ வ‌ய‌து மூத்த‌வ‌ரும், முதிய‌வ‌ருமான‌ அண்ண‌ண் புதுகை அப்துல்லா, என்னை அண்ண‌ன் என‌ அழைப்ப‌தை நிறுத்த‌ வேண்டும். இவ‌ர் என்னை போன்ற‌ ப‌ல‌ இள‌ம் ப‌திவ‌ர்க‌ளை அண்ண‌ண் என்று அழைத்து, த‌ன‌து வ‌ய‌தை குறைத்துக்காட்ட‌ க‌டும் முய‌ற்சி செய்துவ‌ருகின்றார் என‌ அறிய‌ முடிகின்ற‌து. இதை அவ‌ர் நிறுத்தாவிட்டால் அடுத்த‌ மொக்கை ப‌திவின் த‌லைப்பு " புதுகை அப்துல்லாவை க‌ண்டிக்கிறேன்" என்பதாக‌ இருக்கும் என‌ இத‌ன் மூல‌ம் த‌மிழ் வ‌லையுல‌கிற்கு அறிவித்துக்கொள்கிறேன். ப‌ல‌ இள‌ம் ப‌திவ‌ர்க‌ள் அணிதிர‌ண்டு அண்ண‌ண் அப்துல்லாவை க‌ண்டிக்க‌ க‌ள‌மிற‌ங்குவார்க‌ள் என்ப‌தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
On Mon Jul 21, 01:00:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//" வெண்பூ said...


ஹி..ஹி.. அப்ப நாங்க எல்லாம் எதாவது விசயம் கிடைச்சாத்தான் பதிவு போடுறோம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? இதிலிருந்தே இவர் மற்ற பதிவர்களின் பதிவுகளை சரியாக படிப்பதில்லை என்று உறுதியாகிறது. எனவே இவரது இடுகைகளுக்கு *** போடுமாறு தமிழ்மணத்தைக் கேட்டுக்கொள்கிறேன்."//

வாங்க வெண்பூ, என்னை பெரிய நட்சத்திரமாக்க நீங்க இவ்வளவு முயற்சி செய்யிறீங்க. ரொம்ப நன்றி.

 
On Mon Jul 21, 01:01:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

மங்களூர் சிவா said...
:)

நட்சத்திர புன்னகைக்கு நன்றி மங்களூர் சிவா.

 
On Mon Jul 21, 01:05:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

கோவி.க அண்ணா , உங்கள போய் ஊறுகாய் ஆக்குவோமா?

 
On Mon Jul 21, 01:07:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

அபி அப்பா, சீனா போன்ற பல மூத்த, புகழ்பெற்ற பதிவர்களும் இக்கண்டண போராட்டத்திற்கு ஆதரவளித்தமைக்கு அனைவருக்கும் நன்றி.

அலைகடலென திரண்டுவந்து குசும்பனை கண்டிக்க வாரீர், வாரீர் என அழைக்கிறோம்.

 
On Mon Jul 21, 01:21:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அடுத்த‌ மொக்கை ப‌திவின் த‌லைப்பு " புதுகை அப்துல்லாவை க‌ண்டிக்கிறேன்" என்பதாக‌ இருக்கும் //

ஜோசப் அண்ணே! இதுக்கெல்லாம் பயப்புடுற ஆளா நாங்க. ஜே.கே.ரித்தீசையே இரசிச்சு மன்றம் வச்சவங்கப்பா நாங்க. எங்கள‌ கண்டுச்சு மொக்க போட்டா அதையும் படிச்சு,இர‌சிச்சு,சிரிச்சு ஒரு சில,பல பின்னூட்டமும் போடுவோம்.ஹி..ஹி..ஹி...சீக்கிரமா எழுதுங்கண்ணே! வெயிட் பண்ணுறேன்

 
On Mon Jul 21, 01:24:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

" புதுகை அப்துல்லாவை க‌ண்டிக்கிறேன்" //

தலைப்பை மாத்துங்க..."தம்பி புதுகை அப்துல்லாவை க‌ண்டிக்கிறேன்". இப்படி இருக்கணும்.ஓ.கே?

 
On Mon Jul 21, 01:34:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ப‌ல‌ இள‌ம் ப‌திவ‌ர்க‌ள் அணிதிர‌ண்டு அண்ண‌ண் அப்துல்லாவை க‌ண்டிக்க‌ க‌ள‌மிற‌ங்குவார்க‌ள்//

எந்த‌ இளம் பதிவர்கள் எல்லாம் க‌ள‌மிற‌ங்குவார்க‌ள்? சீனா அய்யா,டோண்டு தாத்தா, சுப்பையா வாத்தியார், இவங்கள்லாமா?

 
On Mon Jul 21, 01:51:00 PM GMT+8 , Syam said...

தன்னாலும் மொக்கை போட முடியும் என்று நிரூபித்த ஜோசப் அவர்கள் வாழ்க வாழ்க :-)

 
On Mon Jul 21, 01:53:00 PM GMT+8 , Syam said...

நீங்க, குசும்பன், அப்துல்லா எல்லாவரும் வயசுல என்னை விட மூத்தவங்க அதுனால என்னால கண்டிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் :-)

 
On Tue Jul 22, 01:38:00 AM GMT+8 , Selva Kumar said...

இதுபொன்ற பதிவுகளை மிக வன்ழமயா கண்டிக்கிறேன்...

 
On Tue Jul 22, 01:41:00 AM GMT+8 , Selva Kumar said...

எங்கள் மன்ற பொருளாளர் அப்துல்லா நிரந்தர இளைஞர்.அதனால் உங்களை அண்ணா என்றுதான் அழைப்பார்.

இதை நீங்கள் எதிர்ப்பதை மன்றத்தின் சார்பில் நான் கண்டிக்கிறென்.

 
On Tue Jul 22, 04:04:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

வழிப்போக்கன் said...
எங்கள் மன்ற பொருளாளர் அப்துல்லா நிரந்தர இளைஞர்.அதனால் உங்களை அண்ணா என்றுதான் அழைப்பார்.

இதை நீங்கள் எதிர்ப்பதை மன்றத்தின் சார்பில் நான் கண்டிக்கிறென்.
//


விட்டுருங்க வழிப்போக்கன். என்னைத் தனி ஆளூன்னு நெனச்சுட்டாரு ஜோசப். நம்ப மன்றத்தப் பத்தி அவருக்கு தெரியாது.

 
On Fri Aug 01, 07:37:00 PM GMT+8 , Anonymous said...

மொக்கைய...ம்ம் என்னை போல இப்ப தான் மொக்கை பதிவு எழுதுறிங்க போல.. ;)
முன்னேற இடமுண்டு கிகிகி

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க