Author: MaYa
•10:37 PM
இயற்கையின் வரத்தில் இந்திரலோகம் பூமிக்கு வருமா?
வரும்.. அப்படி வந்த ஒரு அமுதத்துளி.. விழுந்த இடம்.. மாரனேரி..!


இன்றைய மனிதனால் அதுபல மாற்றங்களை அடைந்திருக்கலாம்! ஆனால் அது எனை பாதிக்காது..! நான் என் நினைவுகளில் நிதமும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும்.. என் அழகிய கிராமத்தை.. உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அப்படி என்ன அழகு?! இந்த மாரனேரி?.. சொல்கிறேன்...

காவிரியின் கிளைநதி வெண்ணாறு எனும் தாய் தன் பாலெனும் நீரை வாரித் தெளித்து வளர்த்த பசுமை! அது போதாதென்று அதன் கிளைக்கால்வாய் தானும் தன் பங்குக்கு பசுமை சேர்த்தது இங்கே! இவ்விரு சகோதரிகளை வைத்தே ஆயிரம் கதைகள் இங்கே அமையக் காரணம் சாத்தியமானது. எத்தனை சிறார்கள் எத்தனை இளம் காளைகள், நங்கைகளின் கதைகள் இதில் ஒளிந்துகொண்டு இருக்கிறது என்பதை இந்த ஆற்றின் நீரும், கோடையில் காற்றும், நீரூற்றும், கானலும் இடைவிடாது இங்கே உரக்க கூறிக்கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் தாயென வெண்ணாறு வளம் சேர்க்க..! தந்தையாய் இன்னொரு புறம் காவிரியின் இன்னொரு கிளையாறு "புதாறு" (இது மாரனேரியில் வழங்கும் பெயர்) ஊரின் தென்கரையை பச்சை ஆடைகள் இட்டு வயல்களை அலங்கரித்தது. முத்தாய்ப்பாய் ஒரு குளத்தையும் பருவத்தில் தவறாது நிரப்பிக்கொண்டுதான் இருக்கிறது. தண்ணீர் இப்படி வளம் செய்ததால் கோடையைத்தவிர முப்போகம் விவசாயம் இங்கே கிட்டத்தட்ட எல்லா வருடங்களும் நடந்து வந்தது..!

இந்த சொர்க்கத்தில் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு இடமும் எப்படி உருக்கொண்டு இருந்தன?! அந்தந்த பருவத்தில் அங்கே என்னென்ன கதைகள் உருவாகிக்கொண்டு இருந்தன?! இதை சொல்லி உங்களையும் அந்த சொர்க்கத்தில் சில நேரம் தங்கவைக்க செய்வதே எங்கள் நோக்கம்!

நாங்க ரெடி! நீங்க ரெடியா? Udanz
This entry was posted on 10:37 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On Fri Dec 21, 04:30:00 PM GMT+8 , Known Stranger said...

நாங்க ரெடி! நீங்க ரெடியா?
how nice this sentense have its impression. some words from other language have got its place in tamil. That you may not even feel if that word is from tamil or other language. - like thanks. hello. . just a signifcant comment linking to your latest comment. marneri - the place seems to have its own beauty. wish i could go once

 
On Fri Dec 21, 04:39:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நண்பரே, மாரனேரி குறித்த படைப்பு என் சக பதிவாளரால் எழுதப்பட்டது. நாங்கள் முடிந்தளவுக்கு பிற மொழிகலப்பை குறைக்க முயற்சிக்கின்றோம். சுட்டிகாட்டியமைக்கு நன்றிகள்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க