Author: ஜோசப் பால்ராஜ்
•4:59 PM
பிரபலாமவதற்கு இரண்டு வழிகள் உண்டு.சிரமப்பட்டு பிறருக்கு உதவும் வகையில் ஏதவது செய்வது ஒரு வகை. இது நேர்வழி. அப்துல கலாம் இந்த வகையை சார்ந்தவர்.

சிரமமேயில்லாமல் ஒரு பிரபலமானவரின் செயல்களை கன்னாபின்னா என்று எதிர்பது. கேணத்தனமாக கேள்வி கேட்பது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஞாநி.

இவர் ஓ பக்கம் என்று ஒரு பக்கத்தை முதலில் விகடனில் எழுதிக்கொண்டிருந்தார். அங்கே என்ன பிரச்சனையோ அங்கிருந்து குடிமாறி குமுதத்திற்கு சென்று அங்கேயும் அதே ஓ பக்கத்தை எழுதிவருகின்றார்.

விகடன் மின் பத்திரிக்கையில் வாசகர்கள் தங்களது கருத்துகளை எழுதும் வசதியிருப்பதால், அங்கு ஞாநியின் பல கட்டுரைகள் வாசகர்களின் பலத்த கண்டணங்களுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் ஒரு முறை கூட வாசகர்களின் கருத்துகளுக்கு பதிலளித்தது இல்லை. வாசகர்களின் கருத்துக்களை அவர் படித்ததே இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

குமுதம் மின் இதழ் வாசகர்களுக்கு கருத்து எழுதும் வசதியும் இல்லை என்பதால் ஞாநிக்கு எந்த கேள்வியும் இல்லை.

09.07.2008 தேதியிட்ட குமுதம் இதழில் அவர் எழுதியுள்ள ஓ பக்கத்தில் இவர் எழுதியுள்ள அபத்தங்கள் அவர் எழுதுவதை பிரபலமாக்க , பழுத்த மரமான அப்துல் கலாம் மீது கல்லெறியும் குயுக்தி, குறுக்கு புத்தி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

தன் வாழ்நாளை இன்றளவும் நாடு , நாட்டின் முன்னேற்றம் என்பதற்காக மட்டுமே செலவழித்துக்கொண்டிருக்கும் திரு. அப்துகலாமை, அவர் மாணவர்களையும், இளைஞர்களையும் வாழ்க்கையில் முன்னேற கனவுகாணுங்கள் என்று அடிக்கடி கூறினார் என்பதற்காக கனவுத்தாத்தா என்று விளித்திருப்பது, ஞாநியின் திமிர்தனத்தின் உச்சம் என்பதை தவிர வேறெதுவும் இல்லை.

இந்திய அரசியலமைப்பின்படி வானளாவிய அதிகாரங்கள் ஏதுமற்ற ஒரு அலங்கார பதவியாகிய குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து கொண்டு, வெறுமனே டில்லியில் அமர்ந்துகொண்டு, இந்தியா வரும் வெளிநாட்டு பிரநிதிகளுடன் கைகுலுக்குவதோடு மட்டும் நில்லாமல், தனது பதவி காலத்தில் நாட்டின் எல்லா பாகங்களுக்கும் பயணித்து லட்சக்கணக்கான மாணவர்களையும், இளம் வயதினரையும் சந்தித்து உரையாடி, அவர்களை ஊக்கப்படுத்திய கலாம், இளையோர்கள் கனவு காண வேண்டும் என்று சொன்னது எதற்காக ? இங்கு கனவு எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?இவற்றைக் கூட அறிந்துகொள்ள முடியாத அறிவிலிதான் நான் (ஞாநி) என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 ஆகியவற்றை படித்தால் இவருக்கு தூக்கம் வந்துவிடுகிறதாம். இத‌ற்கு க‌லாம் எந்த‌ வ‌கையில் பொறுப்பாவார்?இவ‌ர் போல் ப‌க‌ல் க‌ன‌வு காணுப‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ளின் க‌ன‌வுக்கு அர்த‌ம் தெரியும் ?

அக்னிச்சிறகுகள் எனும் நூல் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது கூட தெரியாமல் அதையும் கூட குறை கூறியிருப்பதில் இருந்தே, விஷயமறிந்தவர்களுக்கு ஞாநியின் அறியாமை புலப்படும்.

கலாமின் கனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டத்தை எதிர்பதற்காக தனது பகல் தூக்கத்தையும், பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதியுள்ளாராம். இவ்வளவு கேவலமாக எழுதியதற்கு பதிலாக பேசாமல் நன்றாக தூங்கி, அவரது பகல் கனவையாவது கண்டிருக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள‌ நியூட்ரினோ ஆராய்சிகூடத்தை எதிர்பதற்காகத்தான் அவர் இப்படி கலாம் அவர்களின் மேல் கல்லெறிந்து பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்துள்ளார். நியூட்ரினோ ஆராய்சி கூடம் என்பது நன்மையா , தீமையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே அது குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது.

ஆனால் ஞாநியின் கட்டுரை எழுதப்பட்ட விதம் கட்டாயம் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே கலைஞரை ஒய்வெடுக்க கூறியதும் இதே வகை தான். இப்படி பிரபலமானவர்களின் மேல் கல்லெறிந்து எழுதுவதைவிட ஓ பக்கத்துக்கு ஓய்வு கொடுக்கலாம்.
அப்துல் கலாம் அவர்களை கேவலப்படுத்த முயலும் ஞாநியின் கட்டுரையை வெளியிட்ட குமுதம் இதழ் நிர்வாகிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சனைக்காக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய சத்தியராஜ், சரியான கருத்துக்களை தவறான வழியில் வெளிப்படுத்தினார் என்று எழுதிய அதே ஞாநி, இன்று தனது எதிர்ப்பை மிகக் கேவலமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் பிறரை குட்டவோ, பூச்செண்டு கொடுக்கவோ தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் மீறி இவர் இனியும் பிறரை இந்த வார குட்டு என்ற தலைப்பில் குட்ட முனைவாரானால், முதலில் அப்துல் கலாம் அவர்களையும்,அவரது கனவு என்ற வார்த்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல் கிண்டலடித்த தனது அறியாமை அல்லது தனது திமிர்தனம் இவற்றில் ஒன்றைத்தான் இவர் குட்டிக்கொள்ள வேண்டும். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க