Author: ஜோசப் பால்ராஜ்
•5:12 PM
இது காதல் குறித்த பதிவு இல்லை.

இன்றைய‌ச் செய்திதாளில் ப‌டித்த செய்தி ஒன்று ஈரோட்டில், தான் ஒரு த‌லையாக‌ காத‌லித்த‌ பெண், த‌ன்னை காத‌லிக்க‌வில்லை, திரும‌ண‌ம் செய்ய‌ ம‌றுத்துவிட்டார் என்ப‌த‌ற்காக‌ அவ‌ரை க‌த்தியால் குத்தி கொடூர‌மாக‌ கொலை செய்துள்ளார் ஒருவ‌ர்.

இதற்கு பெய‌ர் காத‌லா ?

நான் உன்னை காத‌லிக்கிறேன் என்று ஒரு பைய‌ன் ஒரு பொண்ண‌ பார்த்து சொல்லிட்டா, உட‌னே அந்த‌ பொண்ணு க‌ட்டாய‌ம் அந்த‌ பைய‌ன காத‌லிச்சே ஆக‌னுமா என்ன‌ ? உன‌க்கு உன் விருப்ப‌ம் எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் அந்த‌ பெண்ணிற்கு அவ‌ருடைய‌ விருப்ப‌ம் முக்கிய‌ம‌ல்ல‌வா? பாவ‌ம் அந்த‌ பெண், இப்போதுதான் ஈரோடு கொங்கு பொறியிய‌ல் க‌ல்லூரியில் முத‌லாமாண்டு சேர்ந்திருக்கின்றார். அந்த‌ பெண்ணை போய் திரும‌ண‌ம் செய்துகொள்ள‌ சொல்லி கொடுமை ப‌டுத்தி கொன்ற‌வ‌னை என்ன‌ செய்வ‌து?

அந்த நபருக்கு வந்தது காதல் என்று சொல்வது கூட அந்த வார்த்தையின் புனிதத்தை கேவலப்படுத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். இதற்கு பேர் வெறி, எப்படியாவது அடையவேண்டும் என்ற வெறிதானே தவிர, இதில் கொஞ்சமும் காதல் என்பது இல்லை.

உன்னையே நீ நேசிப்பது போல் உன் அயலாரையும் நேசி என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்குவருகின்றது. இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எல்லோரும் கடைபிடித்துவிட்டால், உலகில் எங்கும் பிரச்சனைகள் இருக்காது. த‌ன் விருப்பத்திற்கு கொடுத்த‌ முக்கியத்துவத்தை அந்த பெண்ணின் விருப்பத்துக்கும் கொடுத்திருந்தால் இந்த கொலை நிகழ்ந்திருக்காது.

இதுபோன்றே ஒரு சம்பவம், ஏற்கனவே திருச்சியில் மண்டலப் பொரியியல் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணையும், இப்படி ஒரு வெறியன் காதலிக்க மறுத்தார் என்பதால் குத்திக்கொன்றான்.

இதை மனநிலைக் கோளாறு என்பதா அல்லது காதல் என்பதற்கு சரியான விளக்கமளிக்காமல் ஒரு மாய தோற்றத்தை உண்டுபண்ணிவிட்ட ஊடகங்களை குறை சொல்வதா? "காதல் கொண்டேன்" போன்ற படங்கள்தான் காரணமா? புரியவில்லை.இத்தனைக்கும் கொலை செய்தவர் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாணவர், படிப்பு நமக்கெல்லாம் அறிவு முதிர்ச்சியை தரவில்லையா? இவரெல்லாம் Just Literate, But Not Educated.

நன்கு படித்து, பொறியியல் கல்லூரியில் சேர ஆவலாய் காத்திருந்த ஒரு மலர வேண்டிய மொட்டை அநியாயமாக கருக்கியவனுக்கு விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும்.

ஒரு கொடூரனின் வெறியால் அநியாயமாய் உயிரைவிட்ட அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க