Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

U

V

W

X

Y

Z

அவர  நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் அப்டியே 
இவரையும் நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்.



Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:19 AM
என் அன்பு அண்ணண் புதுகை அப்துல்லா அவர்கள் கடந்த வாரம் ஞாயிறு அன்று ஒரு சிறு விபத்தை சந்தித்து, தற்போது உடல்நலம் பெற்று மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டார் என்பது தமிழ்மணம் கூறும் நல்லுலகில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அண்ணண் ஓய்வில் இருந்த போது, அண்ணணின் மேல் உள்ள பாசத்தால் எனக்கு ஜே.கே.ரித்தீஷை பிடிக்காது என்றாலும் கூட ஜே.கே.ரித்தீஷை வம்பிழுத்து எழுதப்பட்ட பதிவில் அண்ணண் சார்பாக எனது கடும் கண்டணங்களை தெரிவித்திருந்தேன்.
ஓய்வில் இருந்து திரும்பிய அப்துல்லா அண்ணண், அவர் வெளியிட்ட பதிவில் எனக்கு நன்றி கூறி இருதார். சகோதரர்களுக்குள் நன்றி என்பதே அதிகம். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை,சங்கத்தின் சார்பாக அடுத்தமுறை நான் இந்தியா செல்லும் போது ஜே.கே.ரித்தீஷ் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக வேறு மிரட்டினார்.

என் நிலை கைமீறி போவதை உணர்ந்த நான் நமீதாவை தவிர வேறு யாருக்கும் ரசிகராக இருக்கப்போவதில்லை என்ற எனது உறுதியான கொள்கையை சற்றே தளர்த்தி, அண்ணண் மேல் உள்ள பயம் கலந்த பாசத்தால் ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் இணைந்துவிடுவதாக பின்னூட்டமிட்டிருந்தேன்.

ஜோசப் பால்ராஜ் said...
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன். இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.

அண்ணண் விரைவில் குணமடைந்த வந்தமைக்கு, எங்கும் நிறைந்தவனும், எல்லோர்கும் பொதுவானவனுமான இறைவனுக்கு நன்றிகள்.

இந்த பின்னூட்டத்தை படித்துவிட்டு அதற்கு கீழே உள்ள பதிலை அண்ணண் அப்துல்லா எழுதியிருந்தார்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
வாங்க ஜோசப் அண்ணே!
//
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
//

தலையே வரவேற்ற சந்தோஷம் எனக்கு இப்போ :)


//இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன்.
இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.
//


ஜொசப் அண்ணே நான் மிகவும் சீரியசாகவே சொல்கிறேன். எங்களுக்கெல்லாம் உங்களைப் போல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய தகவல்களை முழுமையாகத் திரட்டி சுயமாக மேலும் சிந்தித்து தெளிவாக எழுதுகின்ற அந்தக் கலை தெரியாது. உங்களுக்கு அந்த வரம் இயல்பாகவே வாய்த்துள்ளது. நாங்கள் எழுத வேண்டுமே என்ற மன உந்துதலின் காரணமாகவும் அதே நேரத்தில் என்ன,எப்படி எழுதுவது என்பதை அறியாததாலும் ரித்தீஷ் அவர்களை வாரியோ அல்லது போற்றியோ அப்போதைய சூல்நிலைக்கு கிறுக்கி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கெல்லாம் சகோதரராக மட்டும் இருங்கள்.தயவு செய்து எங்களோடு சேர்ந்து கெட்டுப் போய்விடாதீர்கள்.நான் அறிந்தவரை உங்க பதிவிற்கென்று ஓரு தீவிர வாசகர் வட்டம் உள்ளது. உங்களைக் கெடுத்த பாவம் எனக்கோ,ச்சின்னப் பையனுக்கோ,வழிப்போக்கனுக்கோ,பரிசலுக்கோ,தமிராவுக்கோ,வெண்பூவுக்கோ வேண்டாம். எப்பவும் போல சீரியசான பதிவாவே எழுதி கலக்குங்க!

இவ‌ரு என்ன‌ திட்டுறாரா இல்ல‌ உண்மையிலேயே புக‌ழ்றாரானு என‌க்கு புரிய‌லை. என‌க்குனு ஒரு தீவிர‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் உள்ள‌துன்னு எல்லாம் சொல்லி ஏத்திவிடுறாரு.

இன்னும் ந‌ம்ப‌ள‌ இந்த‌ ஊரு ந‌ம்பிகிட்டு இருக்கு , ஆன‌ இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்கிடுறாங்க‌ளே....


எனதருமை வலையுலக சொந்தங்களே, உண்மை என்னானு கொஞ்சம் பின்னூட்டத்துல சொல்லுங்க. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:53 PM
இன்று மாலை சிங்கை மூத்தப்பதிவர் திரு.கோவி.கண்ணண் அவர்கள் இளம் பதிவராகிய என்னை சந்திக்க வந்தார்.

எனது இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடந்த இச்சந்திப்பில் சிங்கை பதிவர்களை குறித்தும், தமிழ் வலைப்பூ உலகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், இந்த சிக்கல்களில் எல்லாம் சிக்காமல் எப்படி எழுதுவது என்பது குறித்தெல்லாம் பல ஆலோசனைகளை எனக்கு வழங்கி உதவினார்.

மேலும் சிங்கையில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் அன்று ந‌டைபெற‌ உள்ள‌ மாபெரும் சிங்கை ப‌திவ‌ர் ச‌ந்திப்பைக் குறித்தும் நாங்க‌ள் பேசினோம். மிக‌ உப‌யோக‌மான‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை குறித்து பேசிய‌ அந்த‌ ச‌ந்திப்பு சிற்றுண்டியுட‌னும், தேநீருட‌னும் முடிந்த‌து.

என்ன‌டா குசும்ப‌ண‌ க‌ண்டிக்கிறேன்னு த‌லைப்பு வைச்சிட்டு அண்ண‌ண் கோவி.க‌ண்ண‌ணுட‌ன் ந‌ட‌ந்த‌ ச‌ந்திப்பை ப‌ற்றி எழுதுறானேனு நினைக்கலாம்.

நானும், ந‌ண்ப‌ர் குசும்ப‌ணும் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ முதுக‌லை ப‌டிப்பில் ஒரே வ‌குப்பில் ப‌டித்த‌வ‌ர்க‌ள், நீண்ட‌ நாள் ந‌ண்ப‌ர்க‌ள் என்பதால் கோவி.க‌ அண்ண‌ணுட‌ன் ச‌ந்திப்பு குறித்து வ‌லையுரையாட‌லில் தெரிவித்த‌ போது, நீங்க‌ என்ன‌ பேசிக்கிட்டீங்க‌ன்னு கேட்ட‌தால‌ சில‌ விவ‌ர‌ங்க‌ள‌ அவ‌ருகிட்ட‌ சொல்லிகிட்டு இருந்தேன்.

அதற்கு மேல் எங்களிடையே நடந்த உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

நான் : வர இருக்கும் சிங்கை பதிவர்கள் சந்திப்பு பத்தி பேசுனோம்.
குசும்பண் : ஏதும் திட்டம் தீட்டி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறீங்களா?
நான் : அது எல்லாம், ரகசிய திட்டங்கள். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.
குசும்பண் : அட இப்படி வேற இருக்கா?
நான் : ஹி, ஹி, ஹி
குசும்பண் : ஒரு வேளை குசும்பனை சிங்கபூர் வரவெச்சு விழா எடுக்கபோறீங்களோ?

தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எதற்காக குசும்பணை சிங்கப்பூர் வரவழைத்து விழா எடுக்க வேண்டும்?

இப்படி ஒரு தப்பான நினைவில் இருக்கும் குசும்பணை , தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இருக்கும் தமிழ் வலை பதிவர்களும், வாசகர்களும் தங்களது கடுமையான கண்டணங்களை தெரிவித்து அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவிற்கான காரணங்கள்:
1) ரொம்ப சீரியஸான பதிவர் என்று எனக்கு பட்டமளித்த அண்ணண் அப்துல்லாவின் கருத்தை உடைத்து, என்னால் மொக்கை பதிவும் எழுதமுடியும் எனக்காட்டுவது.

2) நானும், அண்ணண் கோவி.கண்ணணும் சந்திச்சதை வேற எப்படி எல்லார்கிட்டயும் சொல்லுறது ???

3) எல்லாரையும் குசும்பு பண்ணும் குசும்பணையே குசும்பு பண்ணுவது.

4) கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை.... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:18 AM
இது சமையல் குறிப்பு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்...
நான் 1999ல் சென்னையில் வேலைக்கு சேர்ந்து சில‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ க‌தை இது.

க‌ல்லூரி முடிக்கும் வ‌ரை வீட்டில் சொகுசாய் வாழ்ந்து ப‌ழ‌கிய‌ எனக்கு சென்னையில் த‌னியாய் வாழ்வ‌து ப‌ழ‌கிகொண்டிருந்த‌ நேர‌ம் அது.
என்னோடு வேலை பார்த்த‌ இரு பீகார் பைய‌ன்க‌ள், ஒரு திருச்சிகார‌ர், ம‌ற்றும் நான் என‌ 4 பேர் ஒன்றாக‌ ஒரு வீடு எடுத்து த‌ங்கியிருந்தோம்.

பீகார்கார‌ர்களுக்கு சென்னையின் உண‌வை உண்டு ம‌கிழ‌த்தெரியாமையால், வீட்டில் ச‌மைக்க‌லாம் என‌ முடிவெடுத்து ச‌மைக்க‌ ஆர‌ம்பித்தோம். சுடுத‌ண்ணி போட‌க்கூட‌ ச‌மைய‌ல் குறிப்பை தேடும் என‌து ச‌மைய‌ல் திற‌மையை அறிந்த‌தால் என்னை ச‌மைய‌ல்க‌ட்டு ப‌க்க‌மே என் ந‌ண்ப‌ர்க‌ள் விடுவ‌தில்லை.

தின‌மும் சாத‌ம் அல்ல‌து ச‌ப்பாத்தி அத‌ற்கு தொட்டுக்கொள்ள‌ ப‌ருப்பு அல்ல‌து உருளைகிழ‌ங்கு இதை த‌விர‌ வேறெதுவும் அவ‌ர்க‌ளுக்கு தெரியாத‌தால், அவ‌ர்க‌ள‌து விதியின் ப‌டி ஒரு நாள் என்னை அழைத்து எப்ப‌டியாவ‌து சாம்பார் செய் என்று அன்புட‌ன் வேண்டினார்க‌ள்.

இத்த‌ன நாளு என்னைய‌ உக்கார‌வைச்சு சாப்பாடு போட்ட‌ ம‌க‌ராச‌னுங்க‌ கேட்டுட்டாங்க‌ளேனு, நானும் எப்ப‌டியாவ‌து சாம்பார் செய்ய‌னும்னு க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன்.ஆனா எப்ப‌டி செய்யிற‌துனு தெரியல‌, சாம்பாருக்கு தேவையான மூல‌ப்பொருட்க‌ள் கூட‌ தெரியாது.

1999ல‌ கை தொலைபேசிக‌ள் எல்லாம் இந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌ம் கிடையாது. எங்க‌ வீட்ல‌ கேட்க‌லாம்னா, தொலைபேசி செலவே 100 ரூபாய்கு மேல‌ வ‌ரும்.
அப்போ எல்லாம் சென்னையில இருந்து தஞ்சைக்கு தொலை தூர தொடர்பு கட்டணத்தில்(STD) தான் பேசனும், இப்போ மாதிரி உள்ளூர் அழைப்பு கட்டணத்துல பேச முடியாது.

அப்போ தான் என் ந‌ண்ப‌ண் ஒருவ‌ரின் தாயார் சென்னையில் இருக்கும் அவ‌ர்க‌ளது அண்ண‌ண் வீட்டிற்கு வ‌ந்திருந்த‌து நினைவில் வ‌ந்த‌து. உட‌னே அவ‌ங்க‌ள‌ தொலைபேசியில‌ தொட‌ர்பு கொண்டு செய்முறையை வாங்கிட்டேன்.

ஒரு வ‌ழியா ந‌ம்பிக்கை வ‌ந்து, சாம்பார் செய்ய‌ ஆர‌ம்பித்த‌பின்தான் தெரிந்த‌து எங்க‌ள் வீட்டில் புளியே இல்லை ( நானே ஒரு புலினாலும், சாம்பாருக்கு புளி தான் வேணும் பாருங்க). இந்த‌ புலி வைக்கிற‌ சாம்பாருக்கு புளி இல்லாம‌ பேச்சேனு, ம‌றுப‌டியும் என் ந‌ண்ப‌ணின் தாயாரை தொட‌ர்பு கொண்டு கேட்ட‌ப்ப‌, அவ‌ங்க‌ அவ‌ச‌ர‌கால‌ ஆலோச‌னையா த‌க்காளிய‌ போட்டு செய்ய‌ சொன்னாங்க.

ஒரு வ‌ழியா எல்லாம் செஞ்சு முடிச்ச‌ப்புற‌ம் ஏதோ ர‌ச‌ம் மாதிரியும் இல்லாம‌, சாம்பார் மாதிரியும் இல்லாமா ஒரு திர‌வ‌ உண‌வு வ‌கை இருந்துச்சு. (இன்னைய‌ வ‌ரைக்கும் அதுக்குனு த‌னியா ஒரு பெய‌ர் வைக்க‌ல‌).

எல்லாம் த‌யார், சாப்பிட‌ வேண்டிய‌துதான் . அதுவ‌ரைக்கும் வெளியில‌ போய் சுத்திட்டு, சாப்பிட‌ வ‌ந்த‌ பீகார் ம‌க‌ராச‌னுங்க‌, ஆளுக்கு ஒரு கிண்ண‌த்துல‌ இந்த‌ திர‌வ‌ உண‌வ‌ எடுத்து, ஒரு தேக்க‌ர‌ண்டி ( ஸ்பூன்) வைச்சு குடிச்சுகிட்டே, அதையே ஊத்தி சாத‌மும் சாப்பிட்டு முடிச்சுட்டு, க‌டைசியா கேட்டாணுங்க‌ ஒரு கேள்வி.. " ஆமா, இன்னைக்கு உன்ன‌ சாம்பார் செய்ய‌ சொன்னா, நீ சூப் செஞ்சுருக்க‌, எப்ப‌ சாம்பார் வைக்க‌ பேற‌ ? "

பி.கு 1: நான் சாம்பார் வைத்த கதையை கேட்ட ஒரு தோழி, என்மேல் பாவப்பட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து சுவையான சாம்பார் செய்துட்டு போனாங்க. அவங்கள அனுப்பிட்டு வந்து சாதத்துக்கு அரிசி வைச்சுட்டு, அரை மணி நேரம் கழிச்சு பார்த்தா , அரிசி அரிசியாவே இருந்துச்சு. என்னடானு பார்த்தா சமையல் எரிவாயு தீர்ந்து போச்சு. நல்ல சாம்பார் இருந்தும், சாதம் இல்லாமல் போன சோகம் அது. அத்தோட எங்க சாம்பார் முயற்சி நின்னு போச்சு.

பி.கு 2: நல்ல சமையல் குறிப்பு வேணும்ணா நம்ம தூயா பபாவின் வலைப்பூவுல போய் பார்த்துக்கங்க. Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க