தேசியம் இப்போது மிகவும் பேசப்படும் பொருளாகிவிட்டது. தேசியம் என்ற பெயரில் கும்மியடிப்பவர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தப் பதிவி தொடக்கத்திலேயே டிஸ்கிக்களை சொல்லிவிடுவது, படிப்பவர்களுக்கு என் கருத்தை புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.
டிஸ்கி: நான் தனித் தமிழ்நாட்டை ஆதரிப்பவன் இல்லை. ஆனால் தேசியம் தேசியம் என்று கும்மியடிக்கும் போலிகளை வெறுப்பவன்.
எப்போது எந்த சூழ்நிலையில் தனித்தமிழ்நாடு கோரிக்கைகள் எழுகின்றன என்றுப்பாருங்கள். உங்க வீட்ல புகுந்து உங்க அம்மாவ, அக்காவ, தங்கச்சிய பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கும் சூழலில் என்ன செய்வீர்கள்? நீங்கள் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, அவர்கள் வரும் வரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அடிவாங்கட்டும் என்று காத்திருப்பீர்களா? சொல்லுங்கள் தேசிய வாதிகளே, அப்படி நீங்கள் பொங்கியெழுந்து அவனை திருப்பி அடித்தால் உங்களை ரவுடி என்று யாரும் சொல்ல முடியுமா? ரவுடி என்பவன் யார்? தினமும் அடாவடி செய்துகொண்டு உருப்படியற்ற வேலையை செய்து பிறர் நிம்மதியை தொடர்ந்து குலைக்கும் வண்ணம் செய்பவன் தானே ரவுடி?
ஆக இந்த தேசியவாதிகள் ரவுடிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பலரை கொஞ்சம் கூட தட்டிக்கேட்டதில்லை. ஆனால் தன் இனம் அழியும் நிலையில் அதை தடுக்க குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்க கூட்டமாய் வந்து கும்மியடிப்பார்கள். தேசிய கும்மிகளே உங்களுக்கு தேசியத்தின் உண்மையாண அர்த்தம் தெரியுமா?
எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை?
ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லையில் தானே இருக்கு? ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்காக முதலில் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்து ஒகேனக்கலுக்கும் சென்றி பிரச்சனையை ஆரம்பித்தது யார்? தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தானே? அப்போது எங்க போனீர்கள் மாண்புமிகு தேசியவாதிகளே?
இது காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசியம் பேசும் எனது அன்பு நண்பர் என்னிடம் கூறியது. நாங்க எல்லாம் இந்திய குடியுரிமையை தூக்கி எறியனும்னு சொல்றாரு. ஏன் சொல்ல மாட்டீங்க? நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல. தேசிய கும்மிய நல்லா சத்தமா அடிக்கலாம். போலி தேசியம் பேசாமா உண்மையிலயே தேசியம் பேசுனா கடவுச்சீட்ட கடாசுடான்னு சொல்வீங்களா தோழா? நீங்க பேசுறதும், நீங்க செய்யிறதும் தான் தேசியம்னு சொன்னா அந்த தேசியம் எங்களுக்கு வேண்டாம். அதற்காக எங்கள் கடவுச்சீட்டை தூக்கி எறியச் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல எவனுக்கும் கிடையாது. இந்தியனாய் பிறந்த நான் இந்தியனாகத்தான் சாவேன். அதை மாற்ற எவனுக்கும் உரிமையில்லை.
கர்நாடகாவில் இந்தியாவின் பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட அதேத் தவறைத்தானே செய்கிறது? எங்கள் பாஸ்போர்டை மாற்றிக்கொள்ளச் சொல்லும் அன்பு நண்பரே கர்நாடகா பிரச்சனையில நீங்க தேசியம் பேசலையே ஏன்? முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல தமிழகத்துக் சாதகமா உச்ச நீதிமன்றம் தீர்பளிச்ச பின்னாடியும், அப்போ கேரளாவுல ஆட்சி நடத்துன காங்கிரஸ் அரசு முதல்வர் உம்மன் சாண்டி ஒரு சண்டி சட்டமியற்றி அதை தடுத்தப்ப உங்க தேசியம் எங்க போச்சு நண்பா? ஒரு வேளை காங்கிரஸ் எது செஞ்சாலும் சரி என்பது தான் உங்க தேசியமா?
ஏன் இப்பவும் நீங்க ஆட்சி செய்யிற மகாராஷ்டிராவுல ராஜ் தாக்கரேன்னு ஒருத்தர் வெறியாட்டம் ஆடுறாரே? அவர கைது செய்றீங்க, உடனே வெளில விடுறீங்க, ஏன் அவர தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ள போடக்கூடாது? எங்கய போச்சு உங்க தேசியம்? சும்மா பேசுன கண்ணப்பண தூக்குல போடணும்னு கூவுறீங்களே, போடுங்க வேணாம்ணு சொல்லல. ஆனா அதுக்கு முன்னாடி கீழ்கண்டவர்களுக்கு எல்லாம் தண்டணை கொடுத்துட்டு கடைசியா கண்ணப்பண் கிட்ட வாங்க.
இந்திரா சுடப்பட்ட போது சுட்டவர்கள் சீக்கியர்கள் என்பதற்காக அப்பாவி சீக்கியர்கள் பலரை கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட உங்கள் காங்கிரஸ் தலைவர்களை முதலில் தூக்கிலிடுங்கள்
ஓட்டுக்காக, தன் கட்சி பிரபலமாக வேண்டும் என்பதற்காக பாபர் மசூதியை இடிக்க காரணமாயிருந்த அத்வானி கோஷ்டியையும், அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசையும் தூக்கில் இடவேண்டாமா? அது வரை காஷ்மீரில் மட்டுமே இருந்த தீவிரவாதத்தை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவந்தது யாரு? அத்வானியின் செயலும் அதை தடுக்காத நரசிம்மராவின் ஆட்சியும் தானே? தானா செத்த நரசிம்ம ராவா விடுங்க, எல்லாத் தப்பயும் செஞ்சுட்டு இன்னமும் சுத்திக்கிட்டும் கத்திக்கிட்டும் இருக்கவங்கள என்ன செய்யப் போறீங்க மாண்புமிகு தேசிய கும்மிகளே?
நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்புகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் கர்நாடக, கேரள அரசுகளை என்ன சொய்யப் போகின்றீர்கள் தேசிய கும்மிகளே? தூக்கில் இட வேண்டாமா?
பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை தாக்கிய பால் தாக்கரேயையும், இப்போது வட இந்தியர்களை தாக்கிக் கொண்டிருக்கும் ராஜ் தாக்கரேயையும் தூக்கில் இட வேண்டாம், சிறையிலாவது அடைக்க இயலுமா உங்களால்?
மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக தன் இனம் ஈழத்தில் அழிகின்றதே என்ற வேதனையில் இப்படி இயலா நிலையில் இருக்கின்றோமே என்ற உணர்சியில் அப்படி பேசிய கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.
யூதர்கள் சட்டப்படி விபச்சாரம் செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். யேசு கிறிஸ்துவை வம்பிழுக்க ஒரு விபச்சாரியை பிடித்து அவரிடம் கொண்டுவந்து இவளை என்ன செய்யலாம் என்று கேட்ட யூதர்களுக்கு அவர் சொன்னது இது தான், “ உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”
அதைத் தான் தேசியம் பேசும் போலி கும்மிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்களுள் எவனும் தேசியத்திற்கு எதிராக எந்த குற்றமும் செய்யாதவன், ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையை கட்டிக்காத்தவன் வந்து கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.
டிஸ்கி: நான் தனித் தமிழ்நாட்டை ஆதரிப்பவன் இல்லை. ஆனால் தேசியம் தேசியம் என்று கும்மியடிக்கும் போலிகளை வெறுப்பவன்.
எப்போது எந்த சூழ்நிலையில் தனித்தமிழ்நாடு கோரிக்கைகள் எழுகின்றன என்றுப்பாருங்கள். உங்க வீட்ல புகுந்து உங்க அம்மாவ, அக்காவ, தங்கச்சிய பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கும் சூழலில் என்ன செய்வீர்கள்? நீங்கள் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, அவர்கள் வரும் வரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அடிவாங்கட்டும் என்று காத்திருப்பீர்களா? சொல்லுங்கள் தேசிய வாதிகளே, அப்படி நீங்கள் பொங்கியெழுந்து அவனை திருப்பி அடித்தால் உங்களை ரவுடி என்று யாரும் சொல்ல முடியுமா? ரவுடி என்பவன் யார்? தினமும் அடாவடி செய்துகொண்டு உருப்படியற்ற வேலையை செய்து பிறர் நிம்மதியை தொடர்ந்து குலைக்கும் வண்ணம் செய்பவன் தானே ரவுடி?
ஆக இந்த தேசியவாதிகள் ரவுடிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பலரை கொஞ்சம் கூட தட்டிக்கேட்டதில்லை. ஆனால் தன் இனம் அழியும் நிலையில் அதை தடுக்க குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்க கூட்டமாய் வந்து கும்மியடிப்பார்கள். தேசிய கும்மிகளே உங்களுக்கு தேசியத்தின் உண்மையாண அர்த்தம் தெரியுமா?
எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை?
ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லையில் தானே இருக்கு? ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்காக முதலில் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்து ஒகேனக்கலுக்கும் சென்றி பிரச்சனையை ஆரம்பித்தது யார்? தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தானே? அப்போது எங்க போனீர்கள் மாண்புமிகு தேசியவாதிகளே?
அதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும் இந்திய தேசியம் கசக்குய்து
இந்திய பாஸ்போர்ட் தூக்கி போட வேண்டியது தானே?
இது காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசியம் பேசும் எனது அன்பு நண்பர் என்னிடம் கூறியது. நாங்க எல்லாம் இந்திய குடியுரிமையை தூக்கி எறியனும்னு சொல்றாரு. ஏன் சொல்ல மாட்டீங்க? நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல. தேசிய கும்மிய நல்லா சத்தமா அடிக்கலாம். போலி தேசியம் பேசாமா உண்மையிலயே தேசியம் பேசுனா கடவுச்சீட்ட கடாசுடான்னு சொல்வீங்களா தோழா? நீங்க பேசுறதும், நீங்க செய்யிறதும் தான் தேசியம்னு சொன்னா அந்த தேசியம் எங்களுக்கு வேண்டாம். அதற்காக எங்கள் கடவுச்சீட்டை தூக்கி எறியச் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல எவனுக்கும் கிடையாது. இந்தியனாய் பிறந்த நான் இந்தியனாகத்தான் சாவேன். அதை மாற்ற எவனுக்கும் உரிமையில்லை.
கர்நாடகாவில் இந்தியாவின் பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட அதேத் தவறைத்தானே செய்கிறது? எங்கள் பாஸ்போர்டை மாற்றிக்கொள்ளச் சொல்லும் அன்பு நண்பரே கர்நாடகா பிரச்சனையில நீங்க தேசியம் பேசலையே ஏன்? முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல தமிழகத்துக் சாதகமா உச்ச நீதிமன்றம் தீர்பளிச்ச பின்னாடியும், அப்போ கேரளாவுல ஆட்சி நடத்துன காங்கிரஸ் அரசு முதல்வர் உம்மன் சாண்டி ஒரு சண்டி சட்டமியற்றி அதை தடுத்தப்ப உங்க தேசியம் எங்க போச்சு நண்பா? ஒரு வேளை காங்கிரஸ் எது செஞ்சாலும் சரி என்பது தான் உங்க தேசியமா?
ஏன் இப்பவும் நீங்க ஆட்சி செய்யிற மகாராஷ்டிராவுல ராஜ் தாக்கரேன்னு ஒருத்தர் வெறியாட்டம் ஆடுறாரே? அவர கைது செய்றீங்க, உடனே வெளில விடுறீங்க, ஏன் அவர தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ள போடக்கூடாது? எங்கய போச்சு உங்க தேசியம்? சும்மா பேசுன கண்ணப்பண தூக்குல போடணும்னு கூவுறீங்களே, போடுங்க வேணாம்ணு சொல்லல. ஆனா அதுக்கு முன்னாடி கீழ்கண்டவர்களுக்கு எல்லாம் தண்டணை கொடுத்துட்டு கடைசியா கண்ணப்பண் கிட்ட வாங்க.
இந்திரா சுடப்பட்ட போது சுட்டவர்கள் சீக்கியர்கள் என்பதற்காக அப்பாவி சீக்கியர்கள் பலரை கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட உங்கள் காங்கிரஸ் தலைவர்களை முதலில் தூக்கிலிடுங்கள்
ஓட்டுக்காக, தன் கட்சி பிரபலமாக வேண்டும் என்பதற்காக பாபர் மசூதியை இடிக்க காரணமாயிருந்த அத்வானி கோஷ்டியையும், அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசையும் தூக்கில் இடவேண்டாமா? அது வரை காஷ்மீரில் மட்டுமே இருந்த தீவிரவாதத்தை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவந்தது யாரு? அத்வானியின் செயலும் அதை தடுக்காத நரசிம்மராவின் ஆட்சியும் தானே? தானா செத்த நரசிம்ம ராவா விடுங்க, எல்லாத் தப்பயும் செஞ்சுட்டு இன்னமும் சுத்திக்கிட்டும் கத்திக்கிட்டும் இருக்கவங்கள என்ன செய்யப் போறீங்க மாண்புமிகு தேசிய கும்மிகளே?
நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்புகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் கர்நாடக, கேரள அரசுகளை என்ன சொய்யப் போகின்றீர்கள் தேசிய கும்மிகளே? தூக்கில் இட வேண்டாமா?
பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை தாக்கிய பால் தாக்கரேயையும், இப்போது வட இந்தியர்களை தாக்கிக் கொண்டிருக்கும் ராஜ் தாக்கரேயையும் தூக்கில் இட வேண்டாம், சிறையிலாவது அடைக்க இயலுமா உங்களால்?
மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக தன் இனம் ஈழத்தில் அழிகின்றதே என்ற வேதனையில் இப்படி இயலா நிலையில் இருக்கின்றோமே என்ற உணர்சியில் அப்படி பேசிய கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.
யூதர்கள் சட்டப்படி விபச்சாரம் செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். யேசு கிறிஸ்துவை வம்பிழுக்க ஒரு விபச்சாரியை பிடித்து அவரிடம் கொண்டுவந்து இவளை என்ன செய்யலாம் என்று கேட்ட யூதர்களுக்கு அவர் சொன்னது இது தான், “ உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”
அதைத் தான் தேசியம் பேசும் போலி கும்மிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்களுள் எவனும் தேசியத்திற்கு எதிராக எந்த குற்றமும் செய்யாதவன், ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையை கட்டிக்காத்தவன் வந்து கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.