Author: ஜோசப் பால்ராஜ்
•5:35 PM
மீண்டும் ஒரு எதிர்பதிவு, இம்முறை என் அன்பிற்குறிய அண்ணண் கோவியாரின் பதிவுக்கு எதிர்பதிவு எழுத வேண்டிய நிர்பந்தம் எழுந்துவிட்டது. காரணம் அவர் எழுதிய "பிரபல" பதிவர்கள் - இது அன்பால சேர்ந்த கூட்டம் :) என்ற பதிவு தான் காரணம்.

கோவி.க அண்ணே என்னாச்சு உங்களுக்கு?
இன்னைக்குத்தான் இந்தப் பதிவ படிச்சேன், இப்டி ஒரு மெகா மொக்கைப் பதிவு தேவையா?
பிரபலப் பதிவராயிருந்தா என்ன, பிரபலமில்லாமல் இருந்தா என்ன? ஏன் இந்த தேவையற்ற அளவுகோல்கள்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிப்பட்ட அளவுகோல்களை கொண்டு நான் பிரபலங்களை தீர்மானிக்க விரும்பவில்லை. மேலும் சூடான இடுகைகளையும் நான் நம்புவதில்லை. அதிக பேர் படித்தபின்னர் தானே சூடாண இடுகையில் வருகிறது? படித்தவர்கள் அத்தணை பேரும் அது சிறந்த பதிவு என கருதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீங்கள் சொல்லியது போல் அன்பினால் சேர்ந்த கூட்டம் நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள் என்ற ஆவலில் படித்து விட்டு ச்சே என்னாச்சு கோவியாருக்கு, இப்டியெல்லாம் மோசமா எழுதியிருக்காரேன்னு புலம்பிக்கிட்டு கூட போயிருக்கலாம் இல்லையா? இது உங்களுக்கு மட்டுமல்ல, சூடாண இடுகைகள்ல வர்ற பதிவுகளை எழுதும் எல்லாருக்குமே பொருந்தும். நான் கூட சூடாண இடுகைகள்ல வர்ற பல பதிவுகளை படிச்சுட்டு அடக்கெரகமேன்னு தலையில அடிச்சுக்கிட்டு போயிருக்கேன்.

உதாரணங்கள் நிறைய கொடுக்கிற அளவுக்கு தலைப்புகளும், எழுதுனவங்களும் நினைவுல இருந்தாலும், அவர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அவற்றை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

பிரபலம் என்பதால் எந்த கிரீடமும் வந்துவிடுவதில்லை, பணம் அல்லது வேறு ஏதாவது பலன்களும் வரப் போவதில்லை. பின் ஏன் இந்த அளவுகோல்கள்? அதற்கு நீங்கள் ஒரு பதிவு எழுத வேண்டும்? இந்த அளவுகோல்களும், மதிப்பீடுகளும் வெறும் மொக்கைப் பதிவுகளுக்காக எழுதப்பட்டிருந்தால் கூட தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து.

2009 ஆம் ஆண்டின் முதல் எதிர்பதிவை எழுதிய துர்பாக்கியத்திற்காக வருந்துகிறேன். Udanz
This entry was posted on 5:35 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On Fri Jan 02, 12:38:00 AM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

யூசுப் பால்ராஜ் ஐயங்கார்!

உங்கள் கருத்துக்களில் ஓரளவு ஒத்துப் போகிறேன். இருந்தாலும் ஒற்றை மட்டும் சொல்ல வேண்டும். சூடான இடுகைகளில் பதிவு இருப்பதால் அதிகமானவர்கள் வாசிக்க ஏதுவாக அமைகிறது. அதனால் மேலும் சூடாக வாப்பிருக்கிறது. நானும் பார்த்திருக்கிறேன். சில சூடான இடுகைகள் பூஜியம் கருத்துக்களுடன் இருக்கும். சில இடுகைகள் அந்த பதிவராலேயே நீக்கப் பட்டிருக்கும். எல்லாம் தலைப்பும், விமர்சன வசவுகளும் தான் காரணம். மற்றபடி உங்கள் தரம் வாசகர்களால் நிர்ணயிக்கப் பட்டுவிடுவது உறுதி. என்னுடைய கருத்துப்படி தந்தைப் பெரியாரும் மூத்தப் பதிவர்தான், இப்ப இருக்கிற ஜெயமோகனும் மூத்தப் பதிவர்தான். பா.விஜய் கூட மூத்தப் பதிவர்தான். வயது ஓர் அளவுகோல் அல்ல. வலை உலக அனுபவம் ஓர் அளவுகோல் அல்ல. பதிவர் இளைஞர் தம்பி விக்கியும் மூத்தப் பதிவர்தான்.

உங்க நிரலி குண்டக்க மண்டக்க... இன்னும் சரி செய்ய வில்லையா?

 
On Fri Jan 02, 12:38:00 AM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

யூசுப் பால்ராஜ் ஐயங்கார்!

உங்கள் கருத்துக்களில் ஓரளவு ஒத்துப் போகிறேன். இருந்தாலும் ஒற்றை மட்டும் சொல்ல வேண்டும். சூடான இடுகைகளில் பதிவு இருப்பதால் அதிகமானவர்கள் வாசிக்க ஏதுவாக அமைகிறது. அதனால் மேலும் சூடாக வாப்பிருக்கிறது. நானும் பார்த்திருக்கிறேன். சில சூடான இடுகைகள் பூஜியம் கருத்துக்களுடன் இருக்கும். சில இடுகைகள் அந்த பதிவராலேயே நீக்கப் பட்டிருக்கும். எல்லாம் தலைப்பும், விமர்சன வசவுகளும் தான் காரணம். மற்றபடி உங்கள் தரம் வாசகர்களால் நிர்ணயிக்கப் பட்டுவிடுவது உறுதி. என்னுடைய கருத்துப்படி தந்தைப் பெரியாரும் மூத்தப் பதிவர்தான், இப்ப இருக்கிற ஜெயமோகனும் மூத்தப் பதிவர்தான். பா.விஜய் கூட மூத்தப் பதிவர்தான். வயது ஓர் அளவுகோல் அல்ல. வலை உலக அனுபவம் ஓர் அளவுகோல் அல்ல. பதிவர் இளைஞர் தம்பி விக்கியும் மூத்தப் பதிவர்தான்.

உங்க நிரலி குண்டக்க மண்டக்க... இன்னும் சரி செய்ய வில்லையா?

 
On Fri Jan 02, 01:04:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

ஐயங்கார்,

சூடான இடுகையில் தூக்கிவிட்டார்கள் என்று அழவில்லை. அறிவிப்பின்றி அதைச் செய்தது இருக்கிறார்கள் என்று ஊகமாகவே சொன்னேன். அந்த ஊகம் உண்மைதான் என்று தமிழ்மணமும் ஒப்புக் கொண்டுள்ளது.

எல்லோரும் பதிவர்கள் தான், எழுத்தினால் மிகுதியாக வாசிக்கப்படுபவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் தான் 'பிரபலம்'. பிச்சை எடுப்பவர் கூட டிப்டாக உடை அணிந்து இருந்தால் பிரபல பிச்சைக்காரகிவிடுவார்.

தனியடையாளம் உள்ளவர் அனைவருமே பிரபலம் தான்.

 
On Fri Jan 02, 01:59:00 AM GMT+8 , வருண் said...

நல்ல பதிவு, திரு பால்ராஜ்.

நான் தமிழ் வலைபதிவுகளுக்கு கற்றுக்குட்டி. பொதுவாக பேருக்கு பின்னூட்டமிடுவதெல்லாம் பிடிக்காது.
பின்னூட்டமிட தூண்டுதல் வருவதுபோல் பதிவுகள் வரும்போது பின்னூட்டமிடுவது வழக்கம்.

கோவி, கையேடு, ஜ்னாவரம் சுந்தர், டிவிஆர், துளசி டீச்சர், ராமலக்ஷ்மி, ராப்,சுந்தர், எஸ் கே, ஆள் போன்றவர்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு இருக்கிறேன். உங்கள், தமிழ் சசி மற்றும் பலர் பதிவுகளை வாசித்து இருக்கேன்.

கோவியின் சமீப "பிரபல" பிரச்சினையில்,கருத்து வேறுபாடு வந்தது.அதை பின்னூட்டங்களிலும் பதிவிலும் சொல்லி இருக்கேன்.

இதனால் கோவி மேல் எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை.

It was just business,not personal.

If we have a disagreement with TM, it should be discussed privately. Why Kovi has a problem understanding? Beats me!

Yeah I dont have a profile yet. That does not make me less than anybody! I will respond consistently for any claim I made and I wont run away from any issue!

What else one need?

 
On Fri Jan 02, 03:02:00 AM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

அருமையான பதிவு...

 
On Fri Jan 02, 03:05:00 AM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

மன்னிக்கவும்...

மேற்காணும் பின்னூட்டம் நிறைவடையவில்லை... அருமையான பதிவு அப்படினு முதல்ல ஒரு விடத்தை தெரிவிப்பவருக்கும்... அடுத்து கண்டனம் எழுதும் அடுத்த பதிவருக்கும் அதே டெம்ப்லட் பின்னூட்டத்தை போடுபவருக்கும் திரு. யூசுப் அண்ணை ஒரு எதிர்பதிவு போடுவாறாக....

 
On Fri Jan 02, 03:08:00 AM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

//2009 ஆம் ஆண்டின் முதல் எதிர்பதிவை எழுதிய துர்பாக்கியத்திற்காக வருந்துகிறேன்.//

ஏங்கண்ணு??? இதப் படிச்சோன எனக்கு ‘கெதக்’குனு ஆயிப் போச்சு!

 
On Fri Jan 02, 10:50:00 AM GMT+8 , சி தயாளன் said...

:-)..

 
On Fri Jan 02, 11:50:00 AM GMT+8 , கிரி said...

//2009 ஆம் ஆண்டின் முதல் எதிர்பதிவை எழுதிய துர்பாக்கியத்திற்காக வருந்துகிறேன்//

:-))))

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க