Author: ஜோசப் பால்ராஜ்
•1:05 AM
ஒரு சமுதாயம் முன்னேற மிகச் சிறந்த வழி, அது முழு கல்வியறிவு பெறுவதுதான்.
தீயாலோ, நீராலோ அழிக்க முடியாததும், எந்த கள்வராலும் கவரமுடியாததும், கொடுக்க கொடுக்க குறையாமல் அதிகரிப்பதும் கல்வியறிவு ஒன்றுதான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கல்வி எல்லோர்க்கும் எட்டும் நிலையில் இல்லை. தனியார் கல்வி நிலையங்களில் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாத இடத்தில்தான் இன்னும் இருக்கின்றது. அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் தற்போது முன்னேறிக்கொண்டிருந்தாலும் இன்னும் பல இடங்களில் தரம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை.

ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்ட கல்வியை அவர்களுக்கு தரும் ஒரு சில நல்ல உள்ளங்களும் உள்ளார்கள்.

வ‌ருடா வ‌ருட‌ம் விகடன் குழுமத்தினர் பல ஏழை மாணவர்களின் நிலையை குறிப்பிட்டு அவர்களுக்கு கல்வி உதவி பெற்றுத் தந்து வழிகாட்டிகொண்டுள்ளார்கள்.
புதுகோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான திரு.ரகுபதி அவர்கள், விகடனின் வேண்டுகோள்களை ஏற்று ப‌ல‌ ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர‌து க‌ல்லூரியிலேயே த‌ங்கும் வ‌ச‌தியுட‌ன் இல‌வ‌ச‌ க‌ல்வி சேவை அளித்து வ‌ருகின்றார்.

இந்த‌ ஆண்டு ப‌னிரென்டாம் வ‌குப்பு தேர்வு முடிவுக‌ள் வ‌ந்த‌வுட‌ன் க‌ல்வி உத‌விகேட்டு விக‌ட‌னுக்கு க‌டித‌ம் எழுதிய‌ மாண‌வ‌ர்க‌ளுக்காக‌, விக‌ட‌ன் சார்பில் கும்ப‌கோண‌ம் அருகில் கோவிலாச்சேரி என்னும் ஊரில் உள்ள‌ அன்னை க‌ல்லூரியை அணுக, முத‌லில் 20 பேருக்கு ம‌ட்டும் இல‌வ‌ச‌ ப‌டிப்பு வ‌ழ‌ங்குவ‌தாக‌ கூறிய‌ நிர்வாக‌ம், உத‌வி கேட்ட‌ மாண‌வ‌ர்க‌ளை பார்த்த‌பின் எல்லோருக்குமே (116 பேர்) இல‌வ‌ச‌மாக‌ க‌ல்வியும், அவ‌ர்க‌ள‌து ஊரிலிருந்து க‌ல்லூரி வ‌ந்து போக‌ இல‌வ‌ச‌ பேருந்து வ‌ச‌தியும் அளித்துள்ளார்க‌ள்.

ஒரு த‌னியார் சுய‌ந‌தி க‌ல்லூரிக்கு வ‌ருமான‌மே மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து அவ‌ர்க‌ள் வ‌சூலிக்கும் க‌ட்ட‌ண‌ம்தான். ஆனால் அதையே அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று சொல்ல மிக‌ப்பெரிய‌ ம‌ன‌ம் வேண்டும். கல்லூரியின் நிர்வாகிகள் அப்துல் கபூர், ஹிமாயூன் கபீர், அன்வர் கபீர், அகமது யாசின் ஆகியோருக்கு அந்த பெரிய மனம் இருக்கின்றது. வாழ்க அந்த வள்ளல்கள். சரியான நேரத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களையும், உதவி செய்யும் நல்ல உள்ளங்களையும் இணைக்கும் பாலமாக இருந்த விகடனும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே.

கல்வி கட்டணத்திற்கு அடுத்தபடியாக மாணவர்களுக்கு மிக முக்கிய தேவை பாட புத்தகங்கள். பள்ளிகளில் இலவச புத்தகங்கள் இருப்பதால் ஏழை மாணவர்கள் சமாளித்துவிடுகின்றார்கள். ஆனால் கல்லூரிகளில் புத்தகங்களின் விலை வேறு மிக அதிகமாக இருக்கும்.

புத்தகம் வாங்க முடியாமல் தவிக்கும் விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கு சிவகாசி தொழிலதிபர்கள் அணில் மேத்தா, சிவசண்முகம், உமாசங்கர், முத்துவிஜயன், ராஜா சங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய ஆறு பேரும் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தங்கள் சொந்த பணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு லட்சம் ரூபாய்க்கு உயர் கல்விக்கான பாட புத்தகங்களை வாங்கி ஓசையில்லாமல் மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தக வங்கி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மாறிவரும் கல்வி தரத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம், கணிப்பொறி அறிவியல்(Computer Science) , உயிர் தொழில்நுட்பம் ( Bio Technology) என புதிய பாடதிட்டங்களில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேவைப்படும் புத்தங்களை வாங்குகின்றனர். ஒவ்வொரு புத்தகமும் ரூ.300 முதல் ரூ.ஆயிரம் வரை மதிப்புடையது. மாணவர்கள் அதை பயன்படுத்திவிட்டு திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நியதியும் உண்டு.

இதை தவிர டாட்டா கன்சல்டன்சி (TCS) நிறுவனத்தில் வேலைபார்க்கும் மென்பொருள் வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கிய வி ஷேர் ( VShare ) அமைப்பு. இதில் உலகெங்கும் மென்பெருள் துறையிலும், மற்ற துறைகளிலும் வேலை பார்க்கும் பலர் ( நான் உட்பட) உறுப்பினர்கள். உறுப்பினர்கள் தரும் பணத்தை கொண்டு, இவ்வமைப்பு பலருக்கும் உதவி வருகின்றது.
சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் சாலமன் சொசைட்டி எனும் ஆதரவற்ற சிறார்கள் இல்லம், பாதை என்ற சிறார்கள் மற்றும் முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு குழந்தைகளின் படிப்பு செலவு, அவர்களின் உணவுத் தேவைகள் என‌ முழு உதவிகளையும் செய்து வருகின்றோம். இது தவிர எமது உறுப்பினர்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கு கல்வி உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்துவருகின்றோம்.

எங்களைப் போல பலரும் குழுக்களாக இணைந்து இதே போல் செய்துவருகின்றார்கள். உங்களுக்கு தெரிந்து யாரும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

நம்மில் பலருக்கும் இப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் எப்படி செய்வது, யார் மூலம் செய்வது என்று தெரியாமல் இருக்கலாம். ஒரு குழுவாக இணைந்து வி ஷேர் ( VShare) போல செயல்படுங்கள், அல்லது உங்கள் சிந்தனையோடு ஒத்துபோகும் நண்பர்களுடன் இணைந்து ஒரு குழுவை ஆரம்பித்து செயல்பட ஆரம்பியுங்கள். உதவி வேண்டுவோர் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

உதவி தேவைப்படுவோர் அதிகம், ஆனால் உதவும் உள்ளங்கள் இன்னும் வேண்டும். உங்களுள் உதவும் எண்ணம் இருப்பின் இன்றே ஆரம்பியுங்கள். Udanz
This entry was posted on 1:05 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On Tue Jul 01, 02:21:00 AM GMT+8 , Known Stranger said...

many things are happening nanbaray.. paperil varubavai romba kami. oru chena utharanam. nama thanjailiyea aramepom... municpal colonyela aramaypom.. there is a govt school near municipal colony near the busstand you might have seen. most of the students are from redipalayam . this school has upto 10th i guess. mostly poverty stuck student. just for information many municipality retired men every month arrange evening special classes for students at their own cost with books, pens, dress and even evening snacks . surprising ? 100% result in exams for two years. i came to know this info when i was back home for vacation. uthavi seiya ivarkal periya vallalkal alla.. siru manam.. than vendum.. paperla varathum ella.. yen municipal colonyla irukara pallaru theriyavum theriyathu some are doing this. to add soem thing many house wifes are cooking evening snacks at their home and sending to that school to make students sit and take evening extra classes. palla kadavul irukanga... namum aga parpomay.. neyum agalamay....

 
On Thu Jul 03, 05:04:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

உதவும் உள்ளங்கள் நிறையபேர் இருக்கின்றார்கள். எந்தவித விளம்பரமுமின்றி செய்கின்றார்கள். ஆனால் இன்னும் உதவி தேவைப்படுபவர்கள் அதிகளவில் உள்ளார்கள். எனவே உதவும் உள்ளங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. கருத்துகளுக்கு நன்றி வைஷ்ணவ்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க