Author: ஜோசப் பால்ராஜ்
•11:10 AM
பாட்டாளி மக்கள் கட்சி தீவிர மதுவிலக்கு கோரி அரசு மதுபானக்கடைகளின் முன் போராடுவது நாம் அறிந்ததே.

கீழே உள்ள படத்தை பாருங்கள். இப்படி ஒரு நூதன போராட்டத்தை நாம் யாரும் இதுவரை கேள்விப்பட்டிருக்கவே முடியாது.


போராட்டத்தில் எல்லோரிடமும் உடைப்பதற்காக கொடுக்கப்பட்ட பாட்டிலில் ஒன்றை ஒரு பெண்மணி வீணாக்காமல் குடித்துக்கொண்டிருக்கின்றார்.

எல்லாப் போரிலும் வெற்றி பெற ஒரே வழி போரிடாமலே இருப்பது தான் என்று ஒரு முதுமொழி உண்டு. எல்லா மதுவையும் குடித்தே மதுவிலக்கை கொண்டுவரலாம் என நினைத்துவிட்டனரோ ?

மதுவை எதிர்த்து போராட இப்படி பாட்டிலை உடைத்துத் தான் ஆக வேண்டுமா? இவர்கள் கண்ணாடி பாட்டில்களை சாலை நடுவே போட்டு உடைத்துவிட்டு போய்விடுவார்கள், அது எத்தனை பேர் கால்களையும், எத்தனை வாகனங்களையும் பதம் பார்க்கும்? பாட்டில்களை உடைத்துதான் போராட வேண்டுமா?

கண்ணாடி சிதறல்களையும் விட மதுவின் நாற்றம் சாலையில் போகும் எல்லோருக்குமே மிக பெரும் இடைஞ்சலாக இருக்காதா? இது என்ன ஒரு முட்டாள்தனமான போராட்டம்? போராட்டம் என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர, மக்களை துன்புறுத்துவதாக இருக்க கூடாது. இப்படித்தான் இவர்களது அரசியல் இருப்பை நிறுவ வேண்டுமா?

தந்தையே,இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள், இவர்களை மன்னியும். Udanz
This entry was posted on 11:10 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On Tue Aug 05, 02:50:00 PM GMT+8 , விஜய் ஆனந்த் said...

மீ த பஷ்ட்ட்டு!!!

 
On Tue Aug 05, 02:55:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

நான் இரண்டாவது....
:)

 
On Tue Aug 05, 04:02:00 PM GMT+8 , ஜோ/Joe said...

என்ன கொடுமை ராமதாஸ் இது ! :)))

 
On Tue Aug 05, 04:27:00 PM GMT+8 , Known Stranger said...

osila cycle gapula oru mathar KF adgeernga enaku beer varka than yarumay ella.. nan vanmiya kandeekeren intha poratathai. mathu vellaku nada vida matom. appadiyea madhu vellaku vanthalum kavalai ellai katru puga mudiyatha idathilum sella " munru " mater irukum appu. unmaiya therinthal kadavulaiyea theda matan manithan. theriyatha varai than intha poratamum allambalum.

 
On Sun Aug 10, 08:44:00 PM GMT+8 , Anonymous said...

கொடுமையா இருக்கே..

 
On Fri Jul 27, 12:47:00 AM GMT+8 , sivasankaravadivelu said...

இந்த கேளிக்கூத்துகெல்லாம்

நாம் மதிப்பளிக்க வேண்டியதில்லை

என நினைக்கிறேன்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க