Author: ஜோசப் பால்ராஜ்
•11:19 AM
சிங்கையில் உள்ள பதிவர்கள் எல்லாம் சந்தித்து மிக நீண்ண்ண்ண்டடடடட நாட்கள் ஆகி விட்டன என்றும்(கடைசியா ஆகஸ்ட் 30 சந்திச்சோம்), மீண்டும் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்றும் பல பதிவர்களும், எங்கள் பின்னூட்ட புயல் தம்பி விஜய் ஆனந்தும் ரொம்ப ஆசைப்படுவதால் அடுத்த சந்திப்பு நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது.

நாள் : செப்டம்பர் 20 சனிக்கிழமை.

நேரம் : மாலை 3 மணி முதல் ........

இடம் : புக்கிட் கொம்பாக்


புக்கிட் கொம்பாக் மின் தொடர் வண்டி நிலையத்தின் அருகில் பதிவர்கள் அனைவரும் 3 மணிக்கு கூடவும். அங்கிருந்து விழா நடை பெறும் இடத்திற்கு ஊர்வலமாலக செல்ல இருக்கிறோம். இவ் ஊர்வலத்தை சிங்கை நாதன் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

இம்முறை பல முக்கிய விவாதங்களுடன் சில சந்தோஷ கொண்டாட்டங்களும் இடம் பெற உள்ளன. வழக்கம் போல் சிங்கை நாதன் அவர்கள் எல்லோருக்கும் அல்வா கொண்டுவருவார், கோவி.க அண்ணண் கொஞ்சம் பஜ்ஜியும், நிறைய சட்னியும் கொண்டுவருவார். ( வழக்கம் போல நாங்கல்லாம் சாப்பிட்டுட்டு வருவோம்.)

சிங்கையில் உங்களுக்கு தெரிந்த மற்ற பதிவர்களையும் அழைத்து வாருங்கள். இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு அல்ல. விருப்பம் உடைய வாசகப் பெருமக்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு, உங்கள் அபிமான(???) பதிவர்களை நேரில் சந்தித்து, உரையாடி மகிழலாம்.

நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527
Udanz
This entry was posted on 11:19 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On Thu Sep 11, 12:11:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

சாரி...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அன்று.. அதனால் நான் வரலை...

 
On Thu Sep 11, 12:22:00 PM GMT+8 , Anonymous said...

வாழ்த்துக்கள்.

 
On Thu Sep 11, 12:24:00 PM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

நமிதாவுக்கு அழைப்பு கொடுத்திருக்கிங்களா??

 
On Thu Sep 11, 12:25:00 PM GMT+8 , Mahesh said...

அடடா... நான் நாளைக்கு இந்தியா கிளம்புறேன்... 3 வார விடுமுறையில்.... முதல் முறையா கலந்துக்கணும்னு நெனச்சேன்... முடியாது போல.... சரி அடுத்த முறை சந்திப்போம்....

 
On Thu Sep 11, 12:43:00 PM GMT+8 , ஜோ/Joe said...

//சாரி...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அன்று.. அதனால் நான் வரலை...//
வேற வேல வெட்டி இல்லாதவங்க தான் சந்திப்புக்கு வருவாங்கண்ணு மறைமுகமா சொல்லுற மாதிரி இருக்கு . :)

 
On Thu Sep 11, 12:58:00 PM GMT+8 , முகவை மைந்தன் said...

//சாரி...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அன்று.. அதனால் நான் வரலை...//

யோவ், வேலையே அதான்யா!

//நமிதாவுக்கு அழைப்பு கொடுத்திருக்கிங்களா??//

கொடுத்தோம், நீங்க வராததுனால வர மாட்டேனுட்டாங்க ;-(

நாளை மாத்திர வேணாம், அடுத்த கிழமை நான் இந்தாயாவுக்குப் போறேன்.

டிபிஆர் ஜோசப் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதாகச் சொல்லி இருந்தார். வருகிறாரா?

 
On Thu Sep 11, 07:45:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

ஐயையோ.. ஆரம்பிச்சுட்டாங்கப்பா...

 
On Thu Sep 11, 07:46:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

//ஜோ / Joe said...

//சாரி...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அன்று.. அதனால் நான் வரலை...//
வேற வேல வெட்டி இல்லாதவங்க தான் சந்திப்புக்கு வருவாங்கண்ணு மறைமுகமா சொல்லுற மாதிரி இருக்கு//

அதை நீங்க நேரடியா வேற சொல்லீட்டீங்க!

 
On Fri Sep 12, 01:22:00 AM GMT+8 , கிரி said...

ஆஹா! பதிவு வந்தாச்சு... வந்து விடுகிறோம் வந்து விடுகிறோம்

 
On Fri Sep 12, 01:59:00 PM GMT+8 , narsim said...

நல்லா நடத்துங்க!!

பதிவர் சந்திப்பு (லைவ்) பதிவு போடுங்க!!

நர்சிம்

 
On Mon Sep 15, 08:47:00 PM GMT+8 , சி தயாளன் said...

இம்முறை நானும் கட்டாயம் வருகிறேன்.

 
On Tue Sep 16, 08:52:00 PM GMT+8 , Anonymous said...

மறக்காமல் உங்க புகைப்பட கருவியை எடுத்து செல்லவும்..

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க